Saturday, February 28, 2009

ஸ்ரீரங்கத்து தேவதைகளில் சுஜாதா

இரண்டு நாட்களாய் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் சிறுகதைத் தொகுப்பை படித்து வருகிறேன். அனைத்து கதைகளுமே அட்டகாசமாய் இருக்கின்றன.

கதையை படிக்கும்போது, நம்மையுமே ஸ்ரீரங்கத்து சித்திரை வீதிகளிலும், தேரடி முட்டியிலும் கூடவே கூட்டிச் செல்கிறார். ஏதோ அவரது பக்கத்து வீட்டில் இருந்து அனைத்தையும் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.

கடைசி இரண்டு கதைகளான காதல் கடிதம் மற்றும் மறு' வில் அவரது பாட்டியின் கேரக்டரைஷேஷன் அற்புதமானது, அது கதையல்ல நிஜமென்றே தோன்றுகிறது.

தெருமுனை விளையாட்டுகளை, முக்கியமாக தெரு கிரிக்கெட்டை மிக சுவாரசியமாக சுஜாதா ஒருவரால் மட்டுமே சொல்ல முடியும் என தோன்றுகிறது.

ரங்கு, அவரது கடை, கோபாலன், மல்லிகா, பத்தனா ஐயர், குண்டு ரமணி, வரது, வீர ராகவன், கிருஷ்ண மூர்த்தி போன்ற அவரது பாத்திரங்கள், இப்பதிவு எழுதும்போதும், இன்னும் வெகு நாட்களுக்கும் என் நினைவில் இருப்பார்கள்.

சுஜாதாவின் மற்ற நாவல்கள் சிலதையும் நான் படித்திருக்கிறேன், படித்து கொண்டிருக்கிறேன். எனக்கென்னவோ, மற்ற அவரது நாவல்களை விட ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஒரு படி மேல் என்னை குதுகலப் படுத்துவதாகவே தோன்றுகிறது. இதில் வரும் நகைச்சுவை, சமூகப் பார்வைகள், நேரடி வர்ணணைகள், கதாபாத்திரங்கள் எல்லாமே மிகவும் பரிச்சயப் பட்டவை, நாம் நேரில் சந்தித்தவையாக இருக்கின்றன. மேலும் நம் அனைவரது சிறுவயது வாழ்க்கையை நினைவுபடுத்துவதும், ஒரு காரணம்.

என்றாவது ஒருநாள் பூவுலகை விடுத்து, மேலுலகு செல்லும் போது, நான் அங்கு சுஜாதாவை சந்திக்க நேர்ந்தால், இவ்வுளவு அற்புதமான வாசிப்பனுபவம் கொடுத்தற்காக, அவருக்கு சொல்லுவேன் "தேங்க்ஸ், ஸார்!!!".

10 comments:

பழூர் கார்த்தி said...

புத்தகம் வெளியீடு விசா பப்ளிகேஷன்ஸ், ஆறாம் பதிப்பு டிசம்பர் 26ல் வெளியாகி இருக்கிறது..

ஆறு பதிப்புகள் வெளியாகி இருப்பதே, இதன் பிரபலத்தை உணர்த்துகிறது...

sarul said...

1. இவ்வளவு நாளும் வாசிக்காமல் என்ன செய்தீர்கள்
2. மேலுலகிலும் ஆங்கிலம் தானா , ஏன் கன்னடம் பேசலாமே

கார்க்கிபவா said...

சுஜாதா.. தல தலதான்.

நன்றி சகா

பழூர் கார்த்தி said...

நன்றி KS, உங்க கருத்துக்கு..

இப்போதுதான் படிக்கும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது..

மொழி எதாயிருந்தால் என்ன, கான்செப்ட் தானே முக்கியம்..
இருந்தாலும் உங்களுக்காக தமிழிலும் "நன்றி, ஜயா!!"

பழூர் கார்த்தி said...

நன்றி கார்க்கி, உங்கள் கருத்துக்கு..

டோண்டு பதிவை படித்ததும்தான் தெரிந்தது, நேற்றுதான் சுஜாதாவின் முதல்வருட நினைவுநாள் என்று.. எதேச்சையாக நான் இந்த பதிவை போட்டிருக்கிறேன்..

சிவா said...

கதைய நானே படித்த ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்.

மிக்க நன்றி.

சிவா said...

அன்றைய பிரம்மாண்டம் விக்ரம் முதல்

இன்றைய பிரம்மாண்டம் எந்திரன் வரை

எல்லாம் சுஜாதாவின் உபயம்தான்.

பழூர் கார்த்தி said...

கருத்துக்கு நன்றி சிவா..
நீங்க புனே சிவாதானே?

புனே எப்படி இருக்கு..

<<>>

மகர்பட்டா சைபர்சிட்டியையும், கங்காதாமையும், பாத்திமா நகரையும் என்னால் மறக்க முடியவில்லை..

:-))

enRenRum-anbudan.BALA said...

கார்த்தி,

ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஒரு ரியல் மாஸ்டர் பீஸ் from the master himself :)

பல இடங்களில் ஜெஃப்ரி ஆர்ச்சரின் எழுத்தில் தெரியும் நேர்த்தியையும், நுண்ணிய நகைச்சுவையையும் காணலாம்.

மறு -- நிஜமாகவே சூப்பர் !

பழூர் கார்த்தி said...

உங்க கருத்துக்கு நன்றி பாலா..

நிஜமாவே, இந்த சிறுகதைத் தொகுப்பு ஒரு மாஸ்டர் பீஸ்தான்..