Saturday, February 16, 2008

நீ சிரிக்கும் போதெல்லாம் கவிதைகள்!!

கண்ணே
நீ சிரிக்கும் போதெல்லாம்
மணிகள் கலகலவென
உருண்டோடும்
சத்தம் கேட்கிறேனே,
என் காதிலே ஏதும் கோளாறா??

<<>>

கண்கள் சுழற்றும்
நள்ளிரவு
பனி பொழியும்
அதிகாலை
சுட்டெரிக்கும் வெயிலில்
மதியம்
கடற்காற்று வீசும்
மாலை
என
பொழுதுகள் புலர்ந்து
பொழுதுகள் மறைகின்றன..
பேசிக் கொண்டேயிருக்கிறோம்
மின்னஞ்சலில்..
மின் அரட்டையில்..
செல்பேசியில்..
நேரில்..
பேசப் பேச
விஷயங்களுக்கு குறைவில்லை..
கிண்டல்,
கேலி,
மகிழ்ச்சி,
சோகம்,
அதிர்ச்சி,
நிம்மதி
என உரையாடல்கள்
மாறுகின்றன..
உணர்வுகள் மாறுகின்றன..
அன்பும், பாசமும், அக்கறையும்
எள்ளளவும் குறையவில்லை
அந்நாளிலில் இருந்து
இந்நாள் வரைக்கும்..
என்றாவது ஒருநாள்
நம் உரையாடல்கள் நின்றால்
அந்நாளில்
என் உயிரோ அல்லது உன் உயிரோ
பிரிந்திருக்கும்!!!
சொர்க்கத்திலோ, நரகத்திலோ
மீண்டும் சந்தித்துக் கொண்டால்
தொடர்வோம் நம் உரையாடலை!!

<<>>

பனி பொழியும்
அதிகாலையில்
என் அறைக்கு
முன்புள்ள சிறியதொரு
தோட்டத்தில்
மலரும் வெளிர்மஞ்சள்
பூக்கள்
உன் முகத்தை
நினைவு படுத்துகின்றன..
பார்க்கும் போதெல்லாம்
உன்னை நினைத்து
சிரிக்கின்றேன்..
என்றாவது ஒருநாள்
பூக்கள் மலராத தருணத்தில்
சோகம் தழுவுகிறது
உன்னை காணாதது போல்..
பூத்துக் குலுங்கும் மலர்களாய்
நாமிருவரும் அருகருகே
வாழும் தருணம்
வாய்ப்பது எப்போது??