Sunday, August 30, 2009

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

சில நேரங்களில் இணையம்
சில நேரங்களில் தொலைக்காட்சி
சில நேரங்களில் சுஜாதா நாவல்கள்
சில நேரங்களில் செல்பேசியில் உரையாடல்கள்
சில நேரங்களில் வண்டியில் பயணம்
சில நேரங்களில் உணவருந்துதல்
இத்தனை இருப்பினும்
எந்நேரமும் உன் நினைவுதான்,
சீக்கிரம் வாடி என்னருமை மனைவியே
செல்ல சண்டைகளை
விட்ட இடத்திலிருந்து தொடரலாம்!