Friday, December 14, 2007

நிசப்தமாய் இருக்கிறது என் கவிதைகள்!!


காற்று
வெயில்
குளிர்
பனி
மழை
என எதுவுமே
இல்லாமல்
நிசப்தமாய்
இருக்கிறது
நீ அருகில் இல்லா
வெறுமை
உணர்த்தும் புரிதல்கள்!!

<<>>

உன்
கண்ணில் இருந்து
வெளிவரும்
ஒவ்வொரு கண்ணீர்துளியும்
கீழே விழுமுன்
தாங்குவேன்
என் நெஞ்சில்;
கவலைகளை
கண்ணீராய் வெளியேற்று
என் கண்மணியே!!

<<>>

காத்திருப்பது
மட்டும் சுகமல்ல
காதலில்;
இன்ப துன்பங்களை
பகிர்ந்து கொள்வதிலும்
இருக்கிறது
உளமார்ந்த காதல்!!

<<>>

ஒவ்வொரு நொடியும்
மெதுவாய்த்தான்
நகர்கிறது,
இருந்தாலும் ரசிக்கிறேன்
உன்னை தரிசிக்கும்
கணம் நெருங்குவதால்!!