Wednesday, August 31, 2005

நண்பர்களுக்காக ஒரு பதிவு..

வணக்கம் நண்பர்களே, இனிய மாலைப் பொழுதுகள் உங்களுக்கு உரித்தாகுக! தமிழ் வலைப்பதிவுகளுக்கு நான் புதிய ரசிகன். கடந்த மூன்று மாதங்களாக வெவ்வேறு நண்பர்களின் வலைப்பதிவுகளை படித்து ரசித்து விட்டு, இப்போதுதான் இந்த புதிய தமிழ் வலைப்பதிவை உருவாக்கியுள்ளேன். இங்கே ஏதாவது என் பார்வையில் படும் சுவாரசியமான சம்பவங்கள், என் கடந்த கால அனுபவங்கள் மற்றும் எனக்கு தோன்றுபவற்றை எல்லாம் கிறுக்கலாம் என்று இருக்கிறேன். நீங்கள்தான் பொறுத்தறுள வேண்டும்!

தமிழில் தட்டச்சு செய்வது எனக்கு புதிதானது. முரசு அஞ்சல் மென்பொருளுக்கு நன்றி. தமிழில் எழுதுவதே (எனக்கு) அரிதாகி விட்ட நிலையில், இது ஒரு இனிய முயற்சி என்றே கருதுகிறேன்! இந்த வலைப்பதிவை உருவாக்க உதவிய தேசிகன் (எழுத்தாளர் சுஜாதாவின் முதன்மை சீடர்) , சுரதா (பொங்குதமிழ் மென்பொருள் அளித்தவர்) மற்றும் ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி !

என்னைப் பற்றிய அறிமுகம்

பெயர் : ஜோதி. சுவாமிநாதன்
வயது : 26
வசிக்கும் நகரம் : மும்பை
வேலை : தொலைத்தொடர்பு மென்பொருள் சோதனையாளர்
சொந்த ஊர் : திருச்சி