Saturday, April 08, 2006

IT திருக்குறள்கள்

திருக்குறளின் 134-வது அதிகாரம் சமீபத்தில் கண்டறியப் பட்டுள்ளது. அந்த அதிகாரத்தில் கணிணி, இணையம், மென்பொருள் மேம்பாடு போன்றவைகளைப் பற்றி திருக்குறள் அற்புதமாக விளக்குகின்றது. இந்த அதிகாரம் பின்வருமாறு..

Bug கண்டுபிடித்தாரே ஒருத்தர் அவர்நாண
Debug செய்து விடல்.

Copy-Paste செய்து வாழ்வாரே வாழ்வார்
மற்றவரெல்லாம் Codingகெழுதியே சாவர்.

எம்மொழி மறந்தார்க்கும் Job உண்டாம்
Jobஇல்லை "C"யை மறந்தார்க்கு.

Logic Syntax இவ்விரண்டும் கண்ணென்பர்
Program செய் பவர்.

Netடில் தேடி Copy அடிப்பதன்
மூளையிலிருந்து Logic யோசி.

பிறன் Code நோக்கான் எவனோ
அவனே Tech Fundu.

எதுசெய்யார் ஆயினும் Compileசெய்க செய்யாக்கால்
பின்வரும் Syntax Error.

எது தள்ளினும் Projectல் Requirement
தள்ளாமை மிகச் சிறப்பு.

Chatடெனில் Yahoo-Chat செய்க இல்லையேல்
Chatடலின் Chatடாமை நன்று.

Bench Project Email இம்மூன்றும்
Programmer வாழ்வில் தலை.

பின்குறிப்பு : இந்த திருக்குறள்களை நண்பர் மணி, ஹைதராபாத்திலிருந்து இரு மாதங்களுக்கு முன்பு அனுப்பினார். அவருக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. நண்பர்கள் மேலும் புதிய திருக்குறள்களை சிந்தித்து பின்னூட்டத்தில் இடலாம் !