Monday, January 17, 2011

18+ படங்கள் மற்றும் சில பின்குறிப்புகள்..

18+ பதிவு போடுவது இப்போது வலைப் பதிவுலகில் பேஷனாகி விட்டது. நானும் ஒரு 18+ பதிவு போடாவிட்டால் என்னையும் ஒரு ப்ளாக்கர் என்று ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று தோன்றியதால், இணையத்தில் வலைவீசித் தேடி சில 18+ படங்களைக் கண்டு பிடித்து, சில பின்குறிப்புகளுடன் இங்கே பதிவிட்டு உள்ளேன். பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பொழியுங்கள்!!




18+ பதிவு போடுவது பற்றி இங்கு ஒரு பெரிய விவாதமே நடந்து வருகிறது. சிலர் இந்த மாதிரியெல்லாம் பதிவிடக் கூடாது, ஏனென்றால் இணையம் சிறுவர்களுக்கு மிக எளிதாய் கிடைக்கிறது, அவர்கள் இம்மாதிரி பதிவுகளை எல்லாம் படித்து கெட்டுப் போய் விடுகிறார்கள் என்கின்றனர். 18+ என்று பதிவிடுவதே ஒரு நிறைய ஹிட் கிடைக்க உதவும் மளிவான விளம்பரம்தான் என்று குறை கூறுகின்றனர்.





இன்னும் சிலர், அம்மாதிரியெல்லாம் இல்லை. சிறுவர்களை இணையவெளியில் உலவ விடும்போது கண்காணிக்க வேண்டும், இல்லாவிட்டில் இணைய இணைப்பே கொடுக்காதீர்கள் என்கின்றனர். மேலும் இக்காலத்து சிறுவர்கள் நம்மை விட விவரமாக, உலக விவகாரங்களை தெரிந்து வைத்திருக்கின்றனர். நாம் பதிவு போடாவிட்டாலும், கூகுளில் போய் தேடி எளிதாய் ஆபாச வலைத்தளங்களுக்கு அவர்களுக்கு செல்லத் தெரியாதா என்கின்றனர்.




கருத்துச் சுதந்திரம் பெருகிவரும் இவ்வேளையில் இவற்றையெல்லாம் எப்படி கட்டுப்படுத்துவது என்று யோசிப்பதே தவறு. உலகம் தன்னைத்தானே பார்த்து, ரசித்து, திருத்தி கொண்டு முன்னேறலாம், இல்லையெனில் கலாச்சாரம் சற்று மாறுபடலாம்.




இப்போது 18+ படங்களுக்கு செல்வோமோ, இதை கற்பிக்கும் நோக்கத்தில்தான் இங்கே கொடுத்திருக்கிறேன், இதைப் பார்த்து ஆபாசம் என்று துள்ளிக் குதிக்க நினைப்பவர் இப்போது ஒதுங்கிக் கொள்ளலாம்.




.


.



.







பின்குறிப்பு: சரி, 18+ படங்களை பார்த்து ரசித்தீர்களா? ஏதேனும் புதிதாய் கற்றுக் கொண்டீர்களா? மீண்டும் இன்னொரு 18+ பதிவோடு நாளை சந்திப்போமா?? :-))





ஓட்டு போடுவது பற்றி விரிவாக, சுருக்கமாக, மத்யமாக தமிழ்மணம், தெலுகுமணம், கன்னடாமணம், இண்ட்லி, இட்லி, தோசையிலும், பிபிசி, சன் டிவி, விஜய் டிவியிலும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர். இருந்தாலும், உங்க ஓட்டை உங்க இஷ்டப்படி பயன்படுத்தலாம், ஏதோ பாத்துச் செய்ங்க மக்கா!!


Friday, January 14, 2011

எனது 150வது பதிவு: படித்தேன், ரசித்தேன்: கேபிள், ஜாக்கி, பிலாசபி & சுஜாதா

இவ்வாறான பதிவுகளின் (100, 200வது பதிவு) வழமையாய் கொசுவத்தி சுத்தாமல், நான் சமீபத்தில் படித்து, ரசித்த சில வலைப்பதிவுகளை பற்றி எழுதியிருக்கிறேன். நீங்களும் படித்து ரசியுங்கள். கீழே வரும் நான்கு பதிவர்களுமே பெயருக்கு முன் அடைமொழி வைத்திருப்பது தற்செயல்தான் எனவே நம்ப விரும்புகிறேன்!!




இவ்வுளவு காலம் (6 வருடங்கள்) நான் வலைப்பதிவுகளில் நீடித்திருப்பதே, ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியம்தான். சில ஆண்டுகளுக்கு முன் தூக்கம் தொலைத்த ஓர் இரவில் நான் எழுதிய பின்வரும் கவிதை இதற்கான காரணத்தைச் சரியாக பிரதிபலிக்கிறது என்றே இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.








வலைப்பதிவுகளிலிருந்து
மீளலாமென்றுதான் நினைக்கிறேன்
ஒவ்வொரு பின்னூட்டமிடும் போதும்...
இ-கலப்பையை கணிணியில்
பார்க்கும் போதெல்லாம் குறுகுறுக்கிறது
பாழாய்ப் போன மனசு...
ஒவ்வொரு இடுகைக்கும் வரும்
ஒன்றிரண்டு பின்னூட்டங்களும்,
என்றாவது ஒருநாள் நட்சத்திரமாய்
தமிழ்மணத்தில் வலம்வரும் நப்பாசையும்,
இருக்கும்வரை இருந்தே தீருவேன்...
ஏனென்றால் நண்பர்களே,
போதை மதுவிலும், மாதுவிலும் மட்டுமல்ல...






படித்தேன், ரசித்'தேன்'

சுஜாதா தேசிகன்: கை நிறைய காண்டம்


6 வருடங்களுக்கு முன்பு எனக்கு தமிழ் மணத்தையும், வலைப் பதிவுகளையும் அறிமுகப் படுத்தியவர், சுஜாதாவின் சீடர். இப்போது பெயரை குருவுக்கு செய்யும் மரியாதையாய் சுஜாதா தேசிகன் என்று மாற்றி இருக்கிறார். புதிய தளம் பிரமாதமாய் இருக்கிறது. இவரது அனுபவங்களை சுவாரசியமாய் நகைச்சுவையுடன் எழுத்தில் வடிப்பதில் வல்லவர். மற்றுமோர் வெளிநாட்டு வேலை அனுபவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். கை நிறைய கிடைத்த காண்டத்தை என்ன செய்தார்/எப்படி செலவழித்தார் என்று சொல்லவே இல்லை!!




ஜாக்கி சேகர்: தமிழக போலிசிடம் மாட்டினால் என்ன செய்யவேண்டும்?

ஜாக்கிசானின் ரசிகர், கடலூரில் இருந்து சென்னைக்கு வந்து இங்கு கலக்கிக் கொண்டிருப்பவர். வெகு இயல்பாய், ரசிக்கக் கூடிய சில எழுத்துப் பிழைகளுடன் இவர் எழுதும் சாண்ட்விச் பதிவுகளின் ரசிகன் நான். இவர் இங்கே எழுதும் நான்வெஜ் ஜோக்குகள் எனக்குப் பிடிக்கும் என்று சொல்ல விரும்ப வில்லை. இவரிடமிருந்து மற்றுமோர் நகைச்சுவை நிஜ அனுபவப் பதிவு இது, நிச்சயம் உங்களுக்கு பயன்படும்.




பிலாசபி பிரபாகரன்: டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்


மனது விட்டு சிரிக்க வைத்த மற்றுமோர் மொக்கை பதிவு. பொங்கல் விடுமுறையிலும் ஓட்டு வாங்கும் வித்தை அறிந்த சாமார்த்தியசாலி!! படித்துப் பாருங்கள், மறக்காமல் டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுங்கள்!!




கேபிள் சங்கர்: சினிமா வியாபாரம் தொடர்


திரைப்பட விமர்சனங்களால் பிரபலமானவர், இவரது பதிவை படித்துவிட்டுத்தான் சமீப காலங்களில் படத்துக்குச் செல்கிறேன். சினிமா தொழிலைப் பற்றி இவர் எழுதி வெளிவந்த சினிமா வியாபாரம் என்ற புத்தகமும், வலைப் பதிவுகளும் சூப்பர் ஹிட். இப்போது இரண்டாம் பாகமாய் இவரும், நண்பர்களும் எடுத்து நடத்திய தியேட்டர் அனுபவங்களை பற்றி எழுதி வருகிறார். சுவாரசியமாய் இருக்கிறது. நிச்சயமாய் ஆர்யா, சந்தானம் காம்பினேஷனில் இதையே ஒரு திரைப்படமாக்கும் சாத்தியம் உள்ள தொடர் & கரு. கேபிளாரே இதை எடுப்பாரா, காலம்தான் பதில் சொல்லும்!!




இவ்வளவு படித்த பிறகும், கொசுவத்தி வேண்டும் என்கின்ற பொறுமைசாலிகளுக்கு எனது 100வது பதிவு கொசுவத்தி இங்கே!!




ஓட்டு போடுவது பற்றி விரிவாக, சுருக்கமாக, மத்யமாக தமிழ்மணம், தெலுகுமணம், கன்னடாமணம், இண்ட்லி, இட்லி, தோசையிலும், பிபிசி, சன் டிவி, விஜய் டிவியிலும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர். இருந்தாலும், உங்க ஓட்டை உங்க இஷ்டப்படி பயன்படுத்தலாம், ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை.. A, B, C, D என்று கமெண்ட்டாவது போட்டுச் செல்லுங்கள். ஏதோ பாத்துச் செய்ங்க மக்கா!!


பொங்கல் பண்டிகை: இந்த பதிவை படிக்காதீங்க..

அனைவருக்கும் எனது பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!



நன்றி: photobucket.com

தமிழக அரசு தைத் திருநாளை புத்தாண்டு பிறப்பாக கொண்டாடுமாறு கூறியுள்ளது, ஆனாலும் மக்கள் சித்திரை திருநாளைத்தான் புத்தாண்டாய் கொண்டாடும் மனநிலையில் உள்ளனர். மேலும் நமது பாரம்பரிய பண்டிகைகளை நாம் கொண்டாடும் விதமும், மனநிலையும் மாறி வருகிறது. ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் அளவுக்கு நாம் தமிழ் புத்தாண்டையோ, பொங்கலையோ கொண்டாடுவதில்லை. பெரும்பாலும் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதே நம் பண்டிகைக் கால வேலையாக உள்ளது.

எங்கள் அபார்ட்மெண்ட்டில் சற்று பரவாயில்லை. பொங்கல் விளையாட்டுக்கள் சிலவற்றை குழந்தைகளுக்காக வருடா வருடம் நடத்துகின்றனர். உறி அடித்தல், கோலப்போட்டி, மாறுவேடம், ஸ்லோ சைக்கிள் ரேஸ் போன்ற போட்டிகள் இந்த வருடமும் நடக்கின்றன.

கிராமங்களில் முன்பெல்லாம் மார்கழி மாதம் முழுதும் வாசலில் சாணம் தெளித்து கலர்பொடிகள் நிறைத்து கோலம் போடுவர். நடுவில் சாணம் சிறிது வைத்து அதன்மேல் பரங்கிப்பூ வைத்து அழகு படுத்துவர், பொங்கலோடு இந்த வைபவம் நிறைவு பெறும். இப்போது இந்த பழக்கம் குறைந்துவிட்டது.




பொங்கலுக்கு வரும் திரைப்படங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படங்கள் காவலன், ஆடுகளம், சிறுத்தை. இதைத் தவிர வேறு பெரிய படங்கள் வெளியாகிறதா என்று தெரியவில்லை. டிரெய்லர் பார்த்த போது, ஆடுகளம் ஹிட் ஆகலாம், காவலன் சுமாராய் போகலாம், சிறுத்தை: ப்ளாப் ஆகலாம் என்று கணிக்கிறேன், ஒரு வாரத்தில் தெரிந்து விடும், பார்ப்போம்!!




இந்த வருட புத்தகத் திருவிழாவில் சுய முன்னேற்ற உதவும் புத்தகங்கள் நிறைய விற்பனை ஆகிறதாம். அதிலும் விஜய் டிவி புகழ் கோபிநாத்தின் #இந்த புத்தகத்தை படிக்காதீங்க# என்ற புத்தகம் நிறைய விற்கிறதாம். அதன் பாதிப்பில்தான் இந்த பதிவின் தலைப்பு.. ஹிஹி




ஓட்டு போடுவது பற்றி விரிவாக, சுருக்கமாக, மத்யமாக தமிழ்மணம், தெலுகுமணம், கன்னடாமணம், இண்ட்லி, இட்லி, தோசையிலும், பிபிசி, சன் டிவி, விஜய் டிவியிலும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர். இருந்தாலும், உங்க ஓட்டை உங்க இஷ்டப்படி பயன்படுத்தலாம், ஏதோ பாத்துச் செய்ங்க மக்கா!!