Wednesday, February 25, 2009

டி-௨0 கிரிக்கெட் - இந்தியா தோற்றது ஏன்?

  • சேவக் - கம்பிர் தொடக்க ஜோடி சரியாக விளையாடி ரன்கள் குவிக்க இயலாதது. கடந்த இரு ஆண்டுகளில், இந்தியா வெற்றிபெற்ற போட்டிகளில், இந்த ஜோடியின் பங்களிப்பு மகத்தானது.
  • இரண்டு போட்டியிலும் டாஸ் தோற்று, இந்தியா ஸ்கோர் சேஸ் பண்ண முடியாமல் போனது.
  • தோனியிடமிருந்து பெரிய அளவில் பங்களிப்பு இல்லை, அவரது டைமிங் இரண்டாவது போட்டியில், படு மோசம், முப்பது பந்துகளில், இருபத்தெட்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது அவரால்.
  • சரியான திட்டமிடல் இல்லாதது. இரு போட்டிகளிலுமே பேட்டிங் ப்ளான் இல்லை.
  • இஷாந்த் ஷர்மா, ஷகீர் கான் கூட்டணி எதிர்பார்த்த அளவில் சோபிக்காதது.
  • ஒரு சரியான ஆல்ரவுண்டர் இல்லாதது.
  • பின் குறிப்பு: சில விமர்சனங்களில், இந்தியாவின் புதிய உடை ராசியில்லை என்று கூறுகிறார்கள். இன்று சுனில் கவாஸ்கர் கூட இதையே கூறி இருக்கிறார். இதை விட அபத்தமான காரணம் வேறெதுவும் இருக்க முடியாது.

1 comment:

பழூர் கார்த்தி said...

ரோகித் ஷர்மாவை எதற்கு சேர்த்தார்கள் என்று தெரிய வில்லை.. இரு போட்டிகளிலுமே சொதப்பினார்...