Wednesday, March 04, 2009

கவாஸ்கர் - இப்ப என்ன சொல்றீங்க?

இந்தியா இரு டி௨0 போட்டிகளிலும் தோற்றபோது, சுனில் கவாஸ்கர் கூறினார் (தினமலரில்), இந்தியாவிற்கு புதிய விதமான உடை (கரு ஊதா கலர்) ராசியில்லை, அதனால் தோற்று விட்டார்கள், இதனை பழைய விதமான உடைக்கே மாற்றி விட வேண்டும் என்று. இதை விடவும் அபத்தமான கருத்து இருக்க முடியாது.

இப்போது இந்தியா முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று விட்டது, அதே புதிய உடையில். இப்போது கவாஸ்கர் என்ன சொல்கிறார்??

உண்மையான காரணம், டி௨0 போட்டிகளில், நாம் போதுமான ரன்கள் எடுக்கவில்லை, பவுலிங்கும் எடுபட வில்லை. எனவே தோற்றோம்!!

நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்??

2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உண்மையான காரணம் அந்த போட்டிகள் நடக்கும் போது காவஸ்கற் சுடுதண்ணீர் குடித்ததுதான். அவர் பச்சை தண்ணீருல் குடித்த போதெல்லாம் வென்றனர் என்பதை மனதில் கொள்ளூங்கள்

பழூர் கார்த்தி said...

சபாஷ் sureஷ், சரியான காரணம், ஹா ஹா ஹா :-))