Wednesday, September 20, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 71 to 74

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40, 41 to 45, 46 to 50, 51 to 55, 56 to 60
61 to 65, 66 to 70


71. மெளனம் கலைந்தே ஓட.. - சிறுகதை - வசந்த்

பெண் பார்க்க செல்ல முடிவு செய்து, செல்லும் சில நாட்களுக்கு முன்பு ஓர் விபத்தில் இறந்து விடுகிறார் கதாநாயகனுக்கு லிப்ட் கொடுப்பவர். மணப்பெண்ணாக ஆகப்போகிறவரோ பல கனவுகளுடன் பெண் பார்க்க வருவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இவர்களின் உணர்வுகளே, கதை. "..இவ்ளோ வருஷமா தெரிஞ்சுக்காத சமையலை இந்த ஒரு வாரத்துல கத்துக் குடுக்கணும்னு நினைக்கிறாங்க..." போன்ற வரிகளில் மெலிதான கிண்டலை உணர முடிகிறது. இருந்தாலும் அருணல்லவா, ஆர்த்தியை பெண் பார்க்க செல்கிறார். நடுவில் ஆர்த்தி எப்படி பாலுவை நினைத்து கொண்டு இருக்கிறார் என்று குழப்பம் வருகிறது. உரையாடல்கள், வர்ணனைகள் சுவாரஸ்யம். மெளனம், மெலிதான குழப்பம் !!

மதிப்பெண் : 73 / 100

*****

72. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - கவிதை - anamika

மழையில் நனைந்து கொண்டு நின்றிருக்கும் பெண் லிப்ட் கேட்கிறார். லிப்ட் கொடுத்தவுடன் காதல் வருகிறது நாயகனுக்கு.
""கண்டதும் காதல்" என்னாலும் நம்பியதில்லை
இன்றெனக்கு உணர்த்தினாய்
என்று உன்னைக் காண்பேனோ?" போன்ற வரிகளை சொற்பிழை (என்னாலும் / எந்நாளும்) மறந்து ரசிக்கலாம். கவிதை, முயற்சி !!

மதிப்பெண் : 66 / 100

*****

73. அல்லக்கை - சிறுகதை - இன்பா

ஓர் அடிமட்ட அரசியல்வாதியின் கதையை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார். கதை படுயதார்த்தமாக பயணிக்கிறது. "..போன ரெண்டு எலக்சனுக்கும் நான் தானே அவருக்கு முன்னாடி நின்னு தேர்தல் வேலை பார்த்தது. இத்தனை வருசம் கட்சியில இருந்திருக்கோம் இதுவரைக்கும் ஒரு வார்டு கவுன்சிலர் போஸ்ட்டுக்காவது சீட்டு கேட்டிருப்பேனா?.." போன்ற வரிகள் மனதில் நிற்கும். முடிவு, நச்சென்று உள்ளது. அல்லக்கை, அரசியல் வாழ்க்கை !!

மதிப்பெண் : 79 / 100

*****

74. மனசில் லிப்ட் கிடைக்குமா - கவிதை - சேவியர்

லிப்டில் செல்லும் பெண்ணிடம் மனதை பறிகொடுத்த இளைஞனைப் பற்றிய கவிதை.
"அவள்
இதழோரம் வழிந்தது
இருபதாம் நூற்றாண்டின்
நம்பிக்கைச் சிரிப்பு." போன்ற வரிகளை ரசிக்கலாம். கவிதை, பொழுதுபோக்கு !!

மதிப்பெண் : 70 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். முக்கியமாக இங்கேயும் உங்கள் கருத்தை பின்னூட்டமாக இடுங்கள். நன்றி !

*****

குறிப்பு : இதுவரை 74 பதிவுகள் வந்திருக்கின்றன. அனைத்திற்கும் இத்துடன் விமர்சனங்கள் முடிவடைகின்றன. 12 நாட்கள் விடுமுறையில் ஊருக்கு கிளம்புகின்றேன். மீண்டும் அக்-3ம் தேதி சந்திப்போம். தங்கள் பின்னூட்டங்கள் அப்போது வரை வெளியாகாது. இதற்கு மேல் வரும் படைப்புகளுக்கு, இந்த மாதத்தில் அதிக படைப்புகளை அளித்த 'வசந்த்' அவர்களை விமர்சனம் வழங்க, இப்பதிவின் மூலம் கோருகிறேன் !! நன்றி !!

2 comments:

இன்பா (Inbaa) said...

தங்கள் விமர்சனத்திற்க்கு மிக்க நன்றி... தொடருங்கள் உங்கள் பணியை ....

கதிர் said...

தாராள மனசுங்க உங்களுக்கு!