Wednesday, September 20, 2006

தேன்கூடு செப்-06 படைப்புகள் விமர்சனம் 66 to 70

தேன்கூடு போட்டியில் பங்குபெறும் படைப்புகளுக்கான விமர்சனப் பகுதி இது. படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும், அனைத்து படைப்புகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதும், இந்த பகுதியின் நோக்கம்.

கடந்த விமர்சனங்கள்

1 to 5, 6 to 10, 11 to 15, 16 to 20, 21 to 25, 26 to 30
31 to 35, 36 to 40, 41 to 45, 46 to 50, 51 to 55, 56 to 60
61 to 65


66. தூக்குங்கள் தூக்குங்கள் - புதிர் - Ilackia

மிகக் கடியான புதிர். இருமுறை முயன்று மூன்றாம் முறையே புரிந்து(?)கொள்ள முடிந்தது, நீங்களும் முயலலாம். புரிந்து கொண்டால், சிரிக்கலாம்(?). புதிர், கடிச் சிரிப்பு !!

மதிப்பெண் : 50 / 100

*****

67. எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? - 3 - தொடர்கதை -யோசிப்பவர்

டைம் மிஷினுடன் எதிர்காலத்துக்கு பயணிக்கும் சாப்ட்வேர் இளைஞனின் கதை. எதிர்காலத்தின் லைப்ரரிக்கு செல்லும் கதாநாயகன், தனது கண்டுபிடிப்பு தவறாக மாறுபடுத்தப்பட்டு, சுற்றுப்புற சீர்கேட்டை விளைவித்து, பூமியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதைக் காண்கிறார். நிகழ்காலத்திற்கு திரும்பவும் வந்து ஆராய்ச்சியை நிறுத்தி, குறிப்புகளை அழித்து விடலாம் என முடிவு செய்கிறார் என இப்பகுதி முடிகிறது. "HF312 என்னும் சாதுவான ரேடியோ ஆக்டிவ் தனிமம்.." போன்றவையும், ரேடியோ ஆக்டிவ் கழிவு, HF312 போன்றவை சுவாரஸ்யமாக இருக்கின்றன. கதை இப்பகுதியில் சூடு பிடித்திருக்கிறது. ஏற்கனவே கூறியது போல் கதைக்களம், வர்ணனைகள் கதைக்கு பலம். தொடர்கதை, அறிவியல் த்ரில்லர் !!

மதிப்பெண் : 81 / 100

*****

68. தூக்கல் வாழ்க்கை - கவிதை - நடராஜன் ஸ்ரீனிவாசன்

நிலைமண்டில ஆசியப்பாவில் அமைந்த ஓர் மரபுக் கவிதை. அழகான முயற்சி. இலக்கணம் தெரியாதவரும் ரசிக்கும்படியான எளிமையும், சொல்வளமும், கருத்தும் கவிதைக்கு பலம். "மடியில் இடுப்பில் மாசறு பால்தர வடியும் எச்சில் மைந்தரைத் தூக்கினாள்" போன்ற வரிகளை ரசிக்கலாம். கவிதை, கருத்துக் கலம் !!

மதிப்பெண் : 86/ 100

*****

69. தீயினால் சுட்ட புண்!!! - சிறுகதை - வெட்டிப்பயல்

சிறுவயது நண்பர்களான இருவர், நடுவில் தொடர்பில்லாமல் வளர்ந்து, பின் வாழ்க்கையில் இணைவதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். உறவினர் கல்யாணத்தில் சந்திக்கும் பெண், அவரை சிறுவயதில் கையில் சூடு வைத்தது, பின் நட்பு, முடிவில் கல்யாணம் என கதை வேகமாக பறக்கிறது. ரசிக்கும்படியான உரையாடல்கள், வர்ணனைகள் கதைக்கு பலம். "..ஓ!!! அருண் பையன் இல்லயா? மனசன கொழப்பறதுலயே இருங்க...மம்மி வீட்டுக்கு வா உனக்கு இருக்கு..", "..அம்மா நீயே என் தெய்வம். உனக்கு கண்டிப்பாககோவில் கட்டணும்..." போன்றவை வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன. தீயினால் சுட்ட புண், குளிரும் கலக்கல் !!

மதிப்பெண் : 88/ 100

இந்த படைப்பில், ரசிக்க வைத்த பின்னூட்டம் :

ஹோம்சயின்ஸ், பிரிக்கால்னு எழுதி மனச தொட்டுட்டீங்க போங்க. உதய் GCTன்னு நெனக்கிறேன்..
அவினாசிலிங்கத்துல இன்ஜினியரிங் காலேஜ் இருக்குதா?
//இத்த 'என்னது காந்தி செத்துட்டாரா' ஸ்டைலில் படிக்கவும் :)) //
அடங்கொக்கமக்கா..., ஊரே மாறிட்டாப்புல இருக்கு.

- பெத்த ராயுடு

*****

70. அவசரமாய் போய்கொண்டிருந்தேன்... - கவிதை - தொட்டராயசுவாமி

மனிதநேயத்தையும், யதார்த்தத்தையும் இணைத்து ஒரு கவிதை. கவிதை அழகு சற்று குறைந்து, உரையாடல் போல் தோற்றமளிப்பது சிறு பலவீனம். ..பத்ரிக்கொண்டிருந்தனர்... / பதறி , அதை விழகி சென்றால்../ விலகி, மிகக / மிக்க, விழகிய கூட்டம் / விலகிய, கோனளாக../ கோனலாக என்று நெடுக தோன்றும் சொற்குறைகளை தவிர்த்திருக்கலாம். இதையும் மீறி கதையின் கருத்து ரசிக்க/பாராட்ட வைக்கிறது. கவிதை, முயற்சி !!

மதிப்பெண் : 68 / 100

*****

நண்பர்களே, இதைப் படித்து விட்டு ஆல்ட் f4 போட்டு விட்டு அடுத்த பதிவுக்கு சென்று விடாதீர்கள், நேரமிருந்தால் அனைத்து படைப்புகளையும், நேரமில்லாவிடில் சில படைப்புகளையாவது படித்து, எழுதியவர்களை உற்சாகப் படுத்துங்கள். விமர்சனங்கள் பற்றிய உங்கள் கருத்தை, இங்கே பின்னூட்டமாக இடுங்கள். நன்றி !

*****

1 comment:

ஓகை said...

அது நிலைமண்டில ஆசிரியப்பா என்று இருக்க வேண்டும். என் பதிவில் பிழையாக இருக்கிறது. திறுத்திவிடுகிறேன்.

பாராட்டுக்கு நன்றி.