Wednesday, May 27, 2009

ஐ.டி (IT) துறையின் அபத்தங்கள் - 1




ஐ.டி மற்றும் பிபிஓ துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்காக ஆபீஸ் கார்கள், பஸ்கள் நிறைய உண்டு. சென்னை OMR ரோட்டில் இவை சர் சர்ரென்று பறப்பதை காணலாம், இப்படி ஒரு வண்டிதான் பத்து மாதத்திற்கு முன்பு என்னை பைக்கில் இருந்து கீழே தள்ளியது.

இவற்றின் பின் புற கண்ணாடியில் பார்த்தால் ஒரு வாக்கியம் கண்ணுக்கு புலப்படாத பொடி எழுத்துக்களில் எழுதியிருக்கும். "If this vehicle is driven rashly, please inform us. Ph:22000000". ஒருவன் வண்டியை கன்னா பின்னா வேகத்தில் ஓட்டிச் செல்லும் போது நமக்கு இந்த வாக்கியம் எப்படி கண்ணில் தென்படும்? எப்படி மக்கள் படித்து, புகார் சொல்ல இயலும்? இந்த எழுத்துக்களை பக்கத்தில் சென்று படித்தாலே பத்து நிமிடம் ஆகும். இந்த லட்சணத்தில் இப்படி எழுதி வைக்கலாம் என்று யோசனை கொடுத்த அறிவாளி யார்? இதை விடவும் அபத்தமான செயல் இருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்களேன், இப்படி எழுதி வைத்திருப்பதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ??

1 comment:

பழூர் கார்த்தி said...

நன்றி பெயரில்லா.. எதற்கு சிரிக்கீறீர்கள் என புரிய வில்லையே..