Sunday, August 08, 2010

மெல்லியதாய் பெய்யும் மழை..

கவிதை: மெல்லியதாய் பெய்யும் மழை..





முன்னைப் போலில்லாமல்

மாலையில்

சடுதியில் வீடு திரும்ப முடிகிறது..

மெல்லியதாய் பெய்யும்

மழையை

நம் வீட்டின் முற்றத்தில்

ரசிக்க முடிகிறது..

ஓய்வு நேரங்களில்

புத்தகமோ, மெல்லிசையோ

வாசிக்க முடிகிறது..

நீ அருகிலில்லா

நினைவோடை

எக்கணமாவாது

தென்படும்போது

அப்பொழுதில்

முடிகிறது அந்நாள்!!

No comments: