Thursday, August 23, 2007

திருச்சிராப்பள்ளி

திருச்சியைப் பற்றிய எனது முந்தைய பதிவுகள்

திருச்சி 1
திருச்சி 2

திருச்சி நினைவுகள் தொடர்ந்து சுழலும்...

2 comments:

Hariharan # 03985177737685368452 said...

திருச்சி-Srirangam Transport(TST)தான் தமிழ்நாட்டிலேயே அதிகமான தனியார் பேருந்துகள் ஓடும் ரூட்.

திருவரம்பூர் பெல் நிறுவனத்தில் இறுதியாண்டு ப்ராஜக்ட் ஒர்க் 89ல்.

வஸந்தபவன், குறிஞ்சி, அபிராமின்னு சாப்பாட்டுக்கு பிரச்சினை இல்லாத ஊர் திருச்சி.

மலைக்கோட்டை, ஆண்டார் தெரு, சாரதாஸ் ஷோகேஸ் முன் பராக்கு பார்த்தபடியே நந்திகோவில் தெருவில் டெக்ஸ்ட் புக் வாங்கியிருக்கிறேன்.

காவிரியில் நீர்ச் சுழல் அதிகம் ஆளை உள் இழுத்துவிடும்னு அம்மா சொல்லியிருக்காங்க. நான் பார்த்த காவிரியில் 86-94 வரையில் மண் மட்டுமே காற்றடித்து ஓடியது.

கல்லூரிகாலத்தில் திருச்சியில்தான் என் முதல் காமிரா ஹாட் Shot, அப்புறம் Yashica , தெப்பக்குள பர்மா பஜாரில் ஸ்போர்ட்ஸ் ஷூ-ன்னு அப்பாவை ஏமாற்றிய காசில் வாங்கியிருக்கிறேன்!

மாரீஸ்,ஷிவாகாம்ப்ளக்ஸ்,கலையரங்கம்,சோனா,மீனான்னு கன்னா பின்னானு படம் பார்த்திருக்கிறேன்.

வெயில் நிறைய உறைக்கும் ஊர். என்றாலும் மாலை நேரத்தில் மலைக்கோட்டை தாயுமானவர் + பிள்ளையாரை தரிசனம் செய்துவிட்டு மலையின் மீதிருந்து விரிந்தோடும் காவிரி, திருவரங்க கோபுரம், ரயில், பஸ்பாலங்களிலான போக்குவரத்து, வயல் வெளிகள், மறையும் மஞ்சள் சூரியன் என்று கவிதையான காட்சி!

என் வாழ்வில் எத்தனையோ பல இனிமையான நல்ல அனுபவங்களுக்குக் களமான திருச்சியை எப்படி மறப்பேன்!

பழூர் கார்த்தி said...

ஹரிஹரன்,

நன்றி!!

பாருங்கள், நம்மை மாதிரி திருச்சியில் வசித்தவர்கள் கடந்த காலத்தை ரீவைண்ட் செய்து பார்க்கவும், புதியவர்கள் ஒருமுறை சென்று வந்து திருச்சியின் பெருமையை அறிந்து கொள்ளவுமே இப்பதிவை எழுதினேன், அந்நோக்கம் நிறைவேறியதில் மிகுந்த மகிழ்ச்சி!!!!

தங்களின் ப்ளாஷ்பேக் பின்னூட்டத்திற்கு மீண்டும் நன்றி!!