Showing posts with label மனைவி. Show all posts
Showing posts with label மனைவி. Show all posts

Sunday, March 08, 2009

என் மனைவிக்காக, ஓர் கவிதை

அருகிலிருந்தால்
எந்நிமிடமும் ஊடல்தான்..
சிறுசிறு நிகழ்வுகளுக்காய்
நீயும், நானும்
கோபப் படுவோம்..
நீ அருகிலில்லா
இஞ்ஞாயிறு
ஏனோ போரடிக்கிறது..
ஒவ்வொர் நிமிடமும்
மெதுவாய் நகர்கின்றது..
சீக்கிரம் வாயேன்
என்னருமை மனைவியே,
அடுத்த ஊடலை
உடனே அவதானிப்போம்..