Showing posts with label திருச்சி - சென்னை. Show all posts
Showing posts with label திருச்சி - சென்னை. Show all posts

Wednesday, May 13, 2009

சென்னை - திருச்சி: ஒரு மோசமான பேருந்து பிரயாணம்

சென்னையிலிருந்து திருச்சிக்கு வழக்கமாய் ரயிலில்தான் பயணம் செய்வோம். எப்போதாவது டிக்கெட் இல்லாவிட்டால் கேபிஎன்னில் புக் செய்து பயணிப்போம். இம்முறை திடீரென்று ஒரு வாரத்திற்கு முன்புதான் திருச்சி செல்லலாமென்று முடிவு செய்து வலையில் தேடினால் எதிலும் டிக்கெட் இல்லை.

அரசாங்க SETC யில் புக் செய்ய நேரில் செல்ல வேண்டும், மேலும் மே 1 - வெள்ளி, சனி, ஞாயிறு நீண்ட வாரயிறுதி ஆதலால் SETCயிலும் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு குறைவே. இது போன்ற சமயங்களில் ரெட் பஸ் வெப்சைட்டில்தான் வழக்கமாய் ஆம்னி பஸ் புக் செய்வோம்.

சரியென்று நீண்ட நேரம் தேடி SSCM டிராவல்ஸ் என்ற பஸ்ஸில் வியாழன் இரவு 10 மணி பஸ், திரும்பி வர ஞாயிறு இரவு 10 மணி பஸ்ஸையும் புக் செய்து விட்டோம். எங்கள் போதாத நேரம் ஓரே சீட்டையே (எண் 7 & 8) செல்வதற்கும், திரும்பி வரவும் தேர்ந்து எடுத்திருந்தேன்.

வியாழன் இரவு சென்னை - அசோக் பில்லர் நிறுத்தத்தில் 10:15 க்கு ஏறிக்கொள்ள பதிவு செய்திருந்தோம். 10:15க்கு வரவேண்டிய பஸ், 11 மணிக்குத்தான் வந்தது, போன் செய்து கேட்டால் கோயம்பேடில் டிராபிக், அதனால்தான் லேட் என்றனர். அசோக் பில்லர் ஆம்னி பஸ் நிறுத்ததில் ஒரு வசதியும் இல்லை. கிட்டத்தட்ட 500 பேர் அந்த இரவில் நடு ரோட்டில் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு நிழற்குடை, சேர்கள் எதுவுமில்லாமல் இருக்கிறது.

ஒரு வழியாக வந்த பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் அடுத்த தலைவலி ஆரம்பித்தது. சீட் எண் 7-ல் புஷ்பேக் வசதி சரியாக வேலை செய்யவில்லை. உட்கார்ந்து கொண்டே இரவு நேர பிரயாணம் என்பது கொடுமையான அனுபவம். கஷ்டப்பட்டு பிரயாணம் செய்தோம். பஸ்ஸின் உரிமையாளரும் அப்போது இருந்தார், அவரிடம் பிரச்சனையை கூறி பிறகு சரி செய்யக் கூறினேன். சரியென்று தலையாட்டினார். பிறகு பஸ் சென்னையை சுற்றி வேளச்சேரி சென்றது. அங்கிருந்து மேடவாக்கம் வழியே தாம்பரம் செல்ல 12 மணியாகி விட்டது.

இப்படியே ஊர் சுற்றிக் கொண்டு மெல்ல சென்று காலை 745 மணிக்கு திருச்சி தில்லைநகரில் இறக்கி விட்டனர். இரவு 11 மணிக்கு ஏறி காலை 745 வரை, கிட்டத்தட்ட 9 மணி நேரம் பயணம். இத்தனைக்கும் தூரமென்னவோ 300 கிமீ தான். மிகவும் மோசமான பயணம். இறங்கும் போது, டிரைவரிடமிடமும் புஷ்பேக் பிரச்சினையை சொல்லி சரி செய்ய நினைவு படுத்தினோம்.

ஞாயிறு இரவு திரும்பவும் அதே பஸ், அதே இருக்கையில் பயணித்தோம். சீட் சரி செய்யப் படவில்லை. டிரைவரும், செல்போனில் காண்டாக்ட் செய்த ஓனரும் சரியான பதில் தரவில்லை. திரும்பி வரும் போதும் இரவு 1030க்கு திருச்சியில் எடுத்து, காலை 8 மணிக்கு சென்னையில் இறக்கி விட்டனர்.

போதுமடா இந்த பிழைப்பு என்றாகி விட்டது. திரும்பவும் வாழ்க்கையில் SSCM டிராவல்ஸ் ஏறக்கூடாது என முடிவு செய்தேன். ரெட் பஸ் வெப்சைட்டில் மோசமான ரிவியூ கமெண்ட்டுகளை பதிவு செய்தேன். இதற்கு கன்ஸூயுமர் கோர்ட்டில் புகார் செய்யலாமா, அப்படி செய்தால் சீட் சரியில்லாததற்கு என்ன ஆதாரம் காட்ட முடியும் என்று சொல்லுங்களேன், எங்களிடம் டிக்கெட் பிரிண்டவுட் மட்டுமே இருக்கிறது.