Wednesday, February 13, 2013

நானும் கடவுளும் உரையாடிய தருணங்கள்



நான்
எனது நிழல்
மற்றும் கடவுள்
முடிவிலா உரையாடல்
நிசப்தம் எங்கள் மொழி
மூச்சுக் காற்று துவர்க்கிறது
சாளரம் வழியே குளிர் காற்று
மேகத்தை கடந்து மிதக்கும் போது
கலைந்து போனது கனவு....

***




நீண்டு கொண்டேயிருந்த
ஓர் நள்ளிரவில்
நானும்
 கடவுளும்
எதிரெதிரே அமர்ந்து
தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம்
இன்றோ
நேற்றோ
நேற்று முன்தினமோ
உன்னை அனைவருக்கும்
அறிமுகப் படுத்துவேன்
என்று உரையாடிக் கொண்டிருக்கும்
கணத்தில்
கரைந்து போனார் கடவுள்!!

***

நான்
என்னை
நீக்கிய தருணத்தில்
கடவுள்
சற்றே அருகே வந்தார்.

***

தியானம்
அடர்ந்த நிசப்தம்
மெதுவாக மனக்குதிரையில்
தூரத்தில் அருவமாய்
கடவுள்
துரிதமாய் எட்டிப் பிடிக்குமுன்
விட்டுச் சென்றார்!

***



No comments: