Sunday, December 05, 2010

ஆரோசிக்ஹா – பாண்டிச்சேரி வாசனை

கடந்த வார இறுதியில் பாண்டிச்சேரி சென்றிருந்தோம். அரபிந்தோ ஆசிரமத்திற்கு அருகே இருக்கிறது இந்த கடை. நிறைய வகையான வாசனை ஊதுவத்திகள், வாசனை மெழுகுவர்த்திகள் இயற்கையான முறையில் அரபிந்தோ ஆசிரம வாசிகளால் தயார் செய்யப்பட்டு இங்கே விற்கப்படுகின்றன.




3 மணி நேரம் வரை எரியும் நாகலிங்க பூ வாசனை கொண்ட ஊதுவத்திகள், ரோஜா, மல்லிகை, காபி மணம் கொண்ட ஊதுவத்திகள், ‘சர்ப்பரைஸ்’ என்ற பெயரில் என்ன வாசனை என்று பிரித்து பற்ற வைற்றால்தான் கண்டுபிடிக்க முடியும் என்ற வகை ஊதுபத்திகள் என்று நிறைய வகையான வாசனையாவியங்கள் உள்ளன.

கார்களில் வைக்கக்கூடிய காற்று புத்துணர்ச்சி அளிப்பான்கள், வீட்டில் பீரோ, துணிகளில் வைக்கக்கூடிய வாசனை புத்துணர்ச்சி அளிப்பான்கள் (Air Freshener types) என்று விதவிதமாய் நிறைய உள்ளன.

இவை தவிர்த்து ஊதுவத்தி ஸ்டாண்டுகளும், அலங்கார விளக்குகள் மற்றும் சில வகையான வாசனைப் பொருட்களும், வாசனை திரவியங்களும் கிடைக்கின்றன.

வகை, வகையாய் எங்களுக்கும், உறவினர்களுக்கும் வாங்கிக் கொண்டு காரில் ‘கேனல் ஸ்ட்ரீட்டில்’ திரும்பும் போது பாண்டிச்சேரியின் மணம் எங்களுக்கு நிரம்பவே பிடித்திருந்தது!!!

2 comments:

வெற்றி நமதே said...

கேபிள் சங்கரின் போஸ்டர்
போஸ்டர் - திரைவிமர்சனம்

Mugundan | முகுந்தன் said...

வெள்ளக்காரர்கள் (வெளிநாட்டினர்)தான் அங்கு வருவார்கள்,வாங்குவார்கள்.
விலை அதிகமாக இருக்கும்.நமக்கு தாங்காது.

நான் உள்ளே போய் வாசனையை இலவசமாய் முகர்ந்துவிட்டு
வந்திருக்கிறேன்.