Sunday, June 06, 2010

யாஹூ மெசேஞ்சர் அனுபவம்

என் பெயர் சாமிங்க. எனக்கு பாட்சா ரஜினி மாதிரி இன்னொரு பெயர் உண்டுங்க. அது ஆறுச்சாமி இல்லைங்க, அறுவைச் சாமி! என்னோட நண்பர்கள் என்னை செல்லமா மொக்கச் சாமின்னு கூப்பிடுவாங்க. இன்னும் வேற மாதிரியில்லாமும் கூப்பிடுவாங்க, அதெல்லாம் சபையில சொல்ல முடியாதுங்க :-)

என்னோட திறமை என்னான்னா எந்த விஷயமுமே இல்லாம என்னால தொடர்ந்து பலமணி நேரம் மொக்க போட முடியுங்க. இதுக்கும் நான் இப்ப பிசினஸ் அனலிஸ்டா வேலையில் இருக்கறதுக்கும் சம்பந்தம் இருக்கா இல்லையான்னு தெரியலிங்க.

நான் வந்து 2001 ல் யாஹூ அக்கவுண்ட் ஆரம்பிச்சேங்க. 2003ல் ரிலையன்ஸ் பாம்பேயில் ஜாயின் பன்ண பிறவுதான் டெயில் யாஹூ மெயில், சாட் எல்லாம் உபயோகப் படுத்த ஆரம்பிச்சேங்க. ஒரு ஆர்வத்தில் எல்லா நண்பர்களோட யாஹூ அட்ரஸையும் வாங்கி என்னோட சேத்துக்கிட்டேங்க.

ஆனா பாருங்க, நான் எப்ப மெசேஞ்சர் உள்ள நுழைஞ்சாலும் (sign in), onlineல இருக்கிற எல்லா நண்பர்களையும் காட்டும். ஆனா பாருங்க ஒரே நிமிஷத்தில் எல்லா மஞ்ச விளக்கும் அணைஞ்சு போய்டும், எல்லா நண்பர்களும் காணாம போனமாதிரி காட்டும். நானும் ரொம்ப நாளைக்கு இது ஏதோ சாப்ட்வேர் ப்ரச்சினை, நம்ம கம்பெனியில் ப்ளாக் பண்ணியிருக்காங்க போல அப்ப்டின்னு நினைச்சுட்டேன்.

அன்னைக்கு ஒரு நாளு ப்ரவுசிங் செண்டருக்கு போய், யாஹூ மெசேஞ்சருக்குள்ள போனா அங்கயும் இப்படித்தான் நடந்தது. எல்லா நண்பர்களுமே ஒரே நிமிஷத்தில ஆப்லைன் போய்ட்டாங்க. அப்பதாங்க புரிஞ்சுது, இந்த பயபுள்ளைக (என் நண்பர்கள்தான்) என்னை ஆன்லைன்ல பாத்தவுடனே “அய்யய்யோ சாமி வந்துட்டான், சாமி வந்துட்டான்” அப்பிடின்னு அடிச்சு புடிச்சு லாக் ஆப் ஆயிடாறங்க இல்லைன்னா இன்விசிபிள் போயிடறாங்க. இப்ப கூட கீழே பாருங்க, இந்த சோகத்தை..



அப்படியே எவனாவது ஆன்லைன்ல மறந்து போய் இருந்தாலும், நான் ஹாய் அப்படின்னு அடிச்சு வுடனேயே idle ஆயிடறாங்க. இவங்களை எப்படி வழிக்கு கொண்டு வரலாம்னு சொல்லுங்களேன், ப்ளீஸ்!!!

2 comments:

பழூர் கார்த்தி said...

எனக்கு உதவுவோர் யாருமில்லையா? இந்த தமிழ் கூறும் ப்ளாக் உலகில் :-) ஒரு வழியும் இல்லையா?

நசரேயன் said...

//
இவங்களை எப்படி வழிக்கு கொண்டு வரலாம்னு சொல்லுங்களேன்
//
ஆணியே பிடுங்காம இருக்கிறது தான்