Sunday, November 22, 2009

யாருமற்ற ஞாயிறு

மதிய வெயில்
மவுனமாய் பொழியும்
ஞாயிறன்று
இணையத்தில்
அர்த்தமற்று தேடும்போதுதான்
உணர்ந்தேன்
உந்தன் பிரிவை!!

<<>>

நீ
நான்
மற்றும்
வேறு எவரிமில்லா
பிரபஞ்சம்
இவை போதுமெனக்கு,
வெறெதுவும் வேண்டாம்!

<<>>

என் உயிரில்லாவிடினும்
நான் உயிர் வாழ்வேன்,
உன் உயிர் என்னிலல்லவா
கலந்திருக்கிறது!

<<>>

பணம்,
புகழ்,
அழகு,
செல்வாக்கு
அதிகாரம்
மது
மாது
சூதாடுதல்
என
எல்லா போதைகளையும்
விட
அதிகமானது
காதலெனும் போதை!

2 comments:

இராகவன் நைஜிரியா said...

// புகழ்,அழகு,செல்வாக்குஅதிகாரம்மதுமாதுசூதாடுதல்எனஎல்லா போதைகளையும்விடஅதிகமானதுகாதலெனும் போதை! //

சரியாகச் சொன்னீர்கள்..

இந்த போதையில் இருந்து விடுபட இயலாதுங்க..

பழூர் கார்த்தி said...

ஆமாம் இராகவன்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான போதை.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!