சோம்பேறி பையன் நான். நினைத்ததையெல்லாம் எழுதுபவன். கதை, கவிதை, கார்ட்டூன், விமர்சனங்கள் என்று எனது அலம்பலுக்கு ஒரு எல்லையே இல்லை.. ஏழு வருடங்களாக வலைப்பதிகிறேன்.. அமெரிக்காவில் வசிக்கிறேன்..
Monday, June 29, 2009
சென்னை - ஒரு பொன்மாலைப் பொழுதில்..
பெரும்பாலான பன்னாட்டு, உள்நாட்டு ஐடி, தொழில் நுட்ப கம்பெனிகளில், அரசு அலுவலகங்களில் சனி, ஞாயிறு இரு நாட்களும் விடுமுறை அளிக்கின்றனர். சனிக்கிழமை மாலையே உங்கள் துணைவியுடன், குழந்தைகளுடன் (இருந்தால்) வெளியே சென்று வர ஏற்ற சமயம். சனி மாலையென்றால் எல்லா தொ(ல்)லைக் காட்சி சானல்களிலும் உருப்படாத படங்களையும், எரிச்சலூட்டும் பாட்டு, டான்ஸ், அரட்டை நிகழ்ச்சிகளையும் போடுவார்கள். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி வெளியே சென்று வருவதுதான் :-)
சரி வெளியே செல்லலாம் என்றால் எங்கே செல்வது? நீங்கள் ஸ்பென்சர், சிட்டி செண்டர் போன்ற மெகாமால்களுக்கு செல்லலாம், ஆனால் அங்கே சென்று வந்தால் நமது பர்ஸ் காலியாவது நிச்சயம். என்னதான், உங்களது மனைவி ‘சும்மா சென்று வரலாம், விண்டோ ஷாப்பிங் செய்வோம்’ என்று சொன்னாலும் மயங்கி விடாதீர்கள். அங்கெ சென்றால் ஆயிரத்தெட்டு offers போட்டிருப்பார்கள், அதாவது 4 ஜீன்ஸ் வாங்கினால் ஒரு ஜீன்ஸ் இலவசம் (4 ஜீன்ஸின் விலை ரூ 4000) மற்றும் 2 டிசைனர் சாரி வாங்கினால் ஒன்று இலவசம் (இரண்டு சாரியின் விலை ரூ 8000) போன்ற உட்டாலக்கடி offerகள்.
கழுதை, அதைக்கண்டால் நீங்களும் உங்கள் மனைவியும் மதிமயங்கி கண்டது, கடையது வாங்கித் தள்ளி விடுவீர்கள். கிரெடிட் கார்டு என்றொரு பூதம் இருப்பதால், நமக்கும் செலவழிப்பது தெரியாமல் கன்னாபின்னாவென்று ஸ்வைப் (ஸ்வைப் செய்வது - இதற்கு தமிழ்ச்சொல் என்ன?) செய்து விடுவோம். அதுவும் குழந்தைகளோடு சென்றால் கேட்கவே வேண்டாம், சும்மா அந்த பொம்மையை வாங்கிக்கொடு, இந்த டீசர்ட்டை வாங்கிக்கொடு என்று பிய்த்து பீராய்ந்து விடுவார்கள். இது மட்டுமல்லாமல், ஏதாவது திண்பண்டம் வேறு வாங்கிக் கொடுக்க வேண்டும். ஐஸ்கிரீம் எதை எடுத்தாலும், 50 ரூபாய்க்கு கீழே இருக்காது. என்னடா இது உலகமென்று, தர்க்க ரீதியாக யோசிக்கத் துவங்கி விடுவீர்கள் :-)
இதை விட்டுத் தள்ளுங்கள், சினிமாவிற்கு செல்லலாம் என்றால், அதுவும் அபாயகரமான யோசனைதான். சத்யம், மாயாஜால் போன்ற மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களுக்கு என்றால் உங்கள் கதி அதோ கதிதான், டிக்கெட் ஒன்றில் விலை 120 ரூபாய், குடும்பத்தில் 4 பேர் என்றால் 500 ரூபாய் காலி, இண்டர்வெல்லில் வழக்கம்போல் குழந்தைகளுக்காகவோ, மனைவிக்காகவோ கூல்டிரிங்க்ஸ், பாப்கார்ன், ஸ்னாக்ஸ் வகையறாக்கள் 200 ரூபாயாவது ஆகிவிடும். உதயம், கமலா போன்ற மிடில்கிளாஸ் தியேட்டர்களுக்கு சென்றால் ஒரளவுக்கு தப்பிக்கலாம் :-)
இதற்கெல்லாம் உள்ள ஒரே உத்தமமான மாற்று வழி கடற்கரைக்கு செல்வதுதான், சென்னை மக்களுக்கு கடவுள் தந்த செலவில்லாத மகத்தான பொழுதுபோக்கு தலம் பீச்தான்.
மெரினா பீச், சாந்தோம் பீச், பெசண்ட் நகர் பீச், திருவான்மியூர் பீச் என்று ஏராளமான கடற்கரைகள் நம்மை வா, வாவென்று அழைக்கின்றன. அற்புதமான கடற்காற்று உங்களை ஆபீஸ் மேனெஜர் தொல்லை, project deadline (இதற்கு தமிழில் என்ன?) கவலைகள், வீட்டுக்காரன் மிரட்டல் போன்ற லவூதீக விஷயங்களை தற்காலிமாய் மறக்க வைக்கும் என்னதான் சுண்டல், தேங்காய், மாங்காய், பட்டாணி, சோன்பப்டி வகையறாக்கள் வாங்கித் தின்றாலும், 100 ரூபாய்க்கு மேல் உத்தரவாதமாய் செலவில்லை.
இப்போது என் அனுபவத்தை சொல்கிறேன், கேளுங்கள் :-)
ஒரு ஜூன் மாத மழை பெய்யும் சனிக்கிழமை மாலையில் நாங்கள் வெளியே சென்று வர முடிவெடுத்தோம் (போன வாரந்தாங்க அந்த சனிக்கிழமை, ஒரு சுஜாதா effect측¸ இப்படி எழுதுறதுதான் இப்போ பேஷன் :-))
மாலை 5 மணிக்கு கிளம்பினோம், கிளம்பிய போது லேசாக தூறல் விழுந்தது, பத்து நிமிடம்தான். குளுகுளுவென்று சென்னை ஊட்டி போல் மாறிவிட்டது. பைக்கில் ராமாபுரத்திலிருந்து கிண்டி, அடையார் வழியே பெசண்ட் நகர் பீச்சுக்கு சென்றோம்.
டிராபிக் போலீசார் பீட் அமைத்து, டிராபிக்கை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். பைக் நிறுத்த தனியே இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. பைக்கை நிறுத்தி விட்டு, மாங்காய், பட்டாணி சுண்டல் 15 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டோம் (முன்பு 10 ரூபாய், இப்போது 15 ரூபாயாகி விட்டது, விற்றவரிடம் கேட்டால் விலைவாசி பற்றிய பொழிப்புரை கிடைக்குமென்பதால் வாயை மூடிக்கொண்டு நடையைக் கட்டினோம்).
அப்படியே ஹாயாக பீச்சில் நடந்து வந்து கடலோரமாய் அமர்ந்தோம். சுமார் ஒரு மணிநேரம் காற்று வாங்கிக் கொண்டே கதை பேசிக் கொண்டிருந்தோம். குழந்தைகளோடு வந்திருக்கும் குடும்பங்கள், மணலில் வீடு கட்டும் குழந்தைகள், இளம்பெண்ணை குதிரையில் ஏற்றிக்கொண்டு ஜாய்ரைடு (இந்த தலைப்பில் சுஜாதா கதையொன்று எழுதியிருக்கிறார், படித்திருக்கிறீர்களா?) செல்லும் குதிரைக்காரர், சுண்டல் விற்கும் பையன், வண்டியில் பெரிய பெட்ரோமாக்ஸை கட்டி மணியடித்துச் செல்லும் சோன்பப்டிகாரர், சோளத்தை சுட்டு தீயில் வித்தை காட்டும் வண்டிக்காரர் என்று பீச்சே குதூகாலமாய் இருந்தது.
சோன்பப்டி ஒன்று (10 ரூபாய் ஒரு பொட்டலம்) வாங்கி ருசித்தோம், சுமாராய்த்தான் இருந்தது. 10 ரூபாய் என்ற ரேட்டால் ஏற்கனவே என்னை திட்டிக் கொண்டிருந்த என் மனைவி (ஹிஹி, சும்மா செல்லமாத்தான் திட்டினாங்க) சோன்பப்டியின் சுமாரான டேஸ்ட்டால் பத்ரகாளியானாள், அதன்பின் நடந்ததை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன் (எப்படித்தான் கரெக்டா ஏமாந்து போரீங்களோ, உங்க நெத்தியிலேயே எழுதியிருக்கே ஏமாற்றவர்ன்னு போன்ற வசனங்களை நீங்கள் யூகிக்கா விட்டால் நீங்கள் தமிழ்நாட்டில் வசிக்கவில்லை என்று அர்த்தம் :-)
8 மணிபோல் அங்கேயிருந்து கிளம்பி, பொடிநடையாய் நடந்து வந்து மாதா கோயில் அருகே உள்ள முருகன் இட்லி கடைக்கு சென்றோம். சுடச்சுட இட்லி, ஆனியன் ஊத்தாப்பம், ப்ளெயின் தோசை, மெதுவடை, வெள்ளைப் பனியாரம் போன்றவற்றை தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெங்காய சாம்பார் போன்றவைகளின் உதவியால் உள்ளே தள்ளினோம் :-) (என்ன இதுக்காகவே சென்னையில் இருக்கனும் போல் தோனுமே). பில் எவ்வுளவு தெரியும், 103 ரூபாய்தான். நன்றாக உட்டுக்கட்டி விட்டு, வீடு திரும்பினோம்.
பின் குறிப்பு: பெசண்ட் நகர் முருகன் இட்லி கடைக்கு பக்கத்தில் ஒரு பேராபத்து உள்ளது. அது என்னவென்றால், பக்கத்தில்தான் Fab India என்று ஒரு பேமஸ் துணிக்கடை உள்ளது. என் மனைவி சாப்பிட்டு விட்டு அங்கே செல்வோம் என்று கூறினாள், நல்ல வேளை நாங்கள் சென்றபோது (சனி இரவு 9:30 மணி) கடையை மூடி விட்டார்கள், ஹப்பாடா தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டேன் :-) ஆதலால் பீச்சிலிருந்து வெளியே வரும் நேரத்தை 8 மணிக்கு மேல் திட்டமிட்டால், நீங்கள் தப்பித்து விடலாம் :-)
இப்படியாக எங்கள் சனிக்கிழமை மாலை அவுட்டிங் (காதலிப்பவர்களுக்கு டேட்டிங்) நிறைவு பெற்றது. மொத்த செலவு பைக் பெட்ரோல் போக வர 25 கிமீ: 25 ரூபாய், சுண்டல் + சோன்பப்டி: 25 ரூபாய், நைட் டிபன் செலவு: 103 ரூபாய், ஆக மொத்தம் 153 ரூபாய் ஆகியிருந்தது.
இப்போ சொல்லுங்க, என்னோட வழி சரியானதுதானே!! என்ன ஒவ்வொரு வாரமும் பீச்சிற்கே செல்ல முடியாது. அதனாலென்ன, ஒரு வாரம் வண்டலூர் சூ (zoo) போங்க, இன்னொரு வாரம் முட்டுக்காடு போட்டிங் போங்க, இன்னொரு வாரம் காந்தி மண்டபம், கிண்டி பார்க் போய்ட்டு வாங்க, இப்படியாக போனால் இயற்கையை ரசித்த மாதிரியும் இருக்கும், செலவை குறைத்த மாதிரியும் இருக்கும் :-) அவ்ளோதாங்க, பொசுக்குன்னு விண்டோவை க்ளோஸ் பண்ணிடாதீங்க.. நீங்க உங்க அனுபவங்களையும், யோசனையையும் சொல்லிட்டு போங்க!! :-)
Sunday, June 28, 2009
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் - இன்றைய கிரிக்கெட் போட்டி - முன்னோட்டம்
முதல் போட்டியின் யுவராஜ் பேட்டிங்கை பார்த்தீர்களா? சும்மா கிரிக்கெட் மட்டையை கதாயுதம் போல் கையாண்டு ரதகளப் படுத்தினார். ஜெரோம் டெய்லர் முதல் 5 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்தவர், யுவராஜ் எனும் புயலில் சிக்கி ஆலை வாய் பட்ட கரும்பை போலாகி விட்டார். இரண்டு ஓவரில் 30 ரன்கள். இந்த போட்டியில் யுவராஜ் இறங்கினால், நான் விளையாட மாட்டேன் என்று அடம்பிடிகிறாராம் :-)
சரிதான், டெண்டுல்கர், சேவாக் இல்லை, பேட்டிங் வீக் என்று முடிவு செய்தவர்களுக்கு யுவராஜைத் தவிர தினேஷ் கார்த்திக், தோனி, பதான் போன்றவர்களும் தம் திறமையை நிரூபித்தனர். கம்பீர், ரோகித் ஷர்மாவும் நல்ல திறைமையான பேட்ஸ்மேன்களே, சீக்கிரம் பார்முக்கு வந்தால் இந்தியாவுக்கு நல்லது.
நமது பவுலிங்தான் வீக்காக உள்ளது. இஷாந்த் ஷர்மா சொதப்புகிறார், அவருக்கு பதிலாய் வேறு யாராவது வரலாம். ரவிந்திர ஜடேஜாவும் அவ்வுளவு எபெக்ட்டாக இல்லை, ரவி தேஜா வரலாம். பந்து வீச்சை பலப்படுத்தினால், தொடர் நமது பக்கம் எளிதாய் வந்து விழும்.
இன்றைய போட்டி இரவு 8 மணி இந்திய நேரத்துக்கு தொடங்குகிறது; பரபரப்பாய் இருக்குமென எதிர்பார்க்கலாம்! இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!! :-)
Saturday, June 27, 2009
கால்டாக்சி - சென்னையின் வரப்பிரசாதம்
சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஆட்டோகாரர்களின் அட்டகாசம் பற்றி எழுதியிருந்தேன். 7 கிமீ தூரத்திற்கு 120 ரூபாய் கூசாமல் கேட்கிறார்கள்.
இவர்களின் அட்டகாசத்தை ஒடுக்க ஒரு வழி கண்டு பிடித்து விட்டேன். அது என்னவென்றால் ஆட்டோவில் இனிமே முடிந்தவரை பயணிக்க கூடாது. எங்கே போனாலும் பைக் அல்லது கால் டாக்சியில் போவதென்று முடிவெடுத்தாயிற்று.
சென்ற வாரம் நுங்கம்பாக்கம் ஓட்டல் பாம்க்ரோவில் உறவினர் இல்ல திருமண ரிஷப்ஷன் இருந்தது. குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம் என முடிவெடுத்து கால் டாக்சி (FAST TRACK) புக் செய்தோம். கரெக்டான நேரத்திற்கு வந்து மொபைலில் அழைத்தார் டிரைவர்.
உள்ளே அமர்ந்தவுடனேயே மீட்டர் ஆன் செய்யப்பட்டது. வேறு பேச்சே இல்லை. முதல் 5 கிமீ தூரத்திற்கு 100 ரூபாய். மேற்கொண்டு ஒவ்வொரு கிமீ தூரத்திற்கும் 10 ரூபாய். வெயிட்டிங் சார்ஜ் (டிராபிக் சிக்னலில் வண்டி நின்றபோது) ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய். எங்கள் வீட்டிலிருந்து (ராமாபுரம்) நுங்கம்பாக்கம் ஹோட்டலுக்கு 10 கிமீ தூரத்திற்கு மீட்டர் காட்டிய தொகை 157 ரூபாய் கட்டி நிகழ்ச்சிக்கு சென்றோம்.
அருமையான சேவை, டாக்சி புக் செய்தவுடன், வண்டி எண், டிரைவர் பெயருடன் அவரது மொபைல் நம்பர் போன்ற விபரங்களுடன் SMS வந்தது.
மனதிற்கு நிறைவாய் இருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திரும்பவும் கால் டாக்சியிலே திரும்பி வந்தோம்.
நாங்க இனிமே எங்க போனாலும் கால் டாக்சிதான், அப்ப நீங்க??
Wednesday, May 27, 2009
ஐ.டி (IT) துறையின் அபத்தங்கள் - 1
ஐ.டி மற்றும் பிபிஓ துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்காக ஆபீஸ் கார்கள், பஸ்கள் நிறைய உண்டு. சென்னை OMR ரோட்டில் இவை சர் சர்ரென்று பறப்பதை காணலாம், இப்படி ஒரு வண்டிதான் பத்து மாதத்திற்கு முன்பு என்னை பைக்கில் இருந்து கீழே தள்ளியது.
இவற்றின் பின் புற கண்ணாடியில் பார்த்தால் ஒரு வாக்கியம் கண்ணுக்கு புலப்படாத பொடி எழுத்துக்களில் எழுதியிருக்கும். "If this vehicle is driven rashly, please inform us. Ph:22000000". ஒருவன் வண்டியை கன்னா பின்னா வேகத்தில் ஓட்டிச் செல்லும் போது நமக்கு இந்த வாக்கியம் எப்படி கண்ணில் தென்படும்? எப்படி மக்கள் படித்து, புகார் சொல்ல இயலும்? இந்த எழுத்துக்களை பக்கத்தில் சென்று படித்தாலே பத்து நிமிடம் ஆகும். இந்த லட்சணத்தில் இப்படி எழுதி வைக்கலாம் என்று யோசனை கொடுத்த அறிவாளி யார்? இதை விடவும் அபத்தமான செயல் இருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்களேன், இப்படி எழுதி வைத்திருப்பதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ??
Wednesday, May 13, 2009
ஐபிஎல் - அழகிகளின் ஆட்டம் -- கார்ட்டூன்
ஹலோ.. யாரு லலித்மோடிங்களா?? நாங்க குன்னாம்பட்டி மாரியம்மன் கோவில்ல இருந்து பேசறோம்.. இன்னைக்கு கொடையில ஆட வேண்டிய கரகாட்ட குரூப் வரலைங்க.. ஐபிஎல்ல ஆடற சீயர் லீடர்ஸை (cheer leaders) கொஞ்சம் அனுப்பி வைக்க முடியுங்களா??
ஐபிஎல் - கொல்கட்டா அணி - கார்ட்டூன்
ஹலோ.. யாரு ஷாருக்கானா பேசறது???
நாங்க கேகேநகர் மூனாவது குறுக்கு சந்து
ராமசாமி கிரிக்கெட் கிளப்பில இருந்து
பேசறோம்.. இன்னைக்கு மேட்ச்சுக்கு ரெண்டு
பேரு குறையறாங்க.. கொஞ்சம் கங்குலியையும்,
மெக்கல்லமையும் அனுப்பி வைக்க முடியுங்களா??
சென்னை - திருச்சி: ஒரு மோசமான பேருந்து பிரயாணம்
சென்னையிலிருந்து திருச்சிக்கு வழக்கமாய் ரயிலில்தான் பயணம் செய்வோம். எப்போதாவது டிக்கெட் இல்லாவிட்டால் கேபிஎன்னில் புக் செய்து பயணிப்போம். இம்முறை திடீரென்று ஒரு வாரத்திற்கு முன்புதான் திருச்சி செல்லலாமென்று முடிவு செய்து வலையில் தேடினால் எதிலும் டிக்கெட் இல்லை.
அரசாங்க SETC யில் புக் செய்ய நேரில் செல்ல வேண்டும், மேலும் மே 1 - வெள்ளி, சனி, ஞாயிறு நீண்ட வாரயிறுதி ஆதலால் SETCயிலும் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு குறைவே. இது போன்ற சமயங்களில் ரெட் பஸ் வெப்சைட்டில்தான் வழக்கமாய் ஆம்னி பஸ் புக் செய்வோம்.
சரியென்று நீண்ட நேரம் தேடி SSCM டிராவல்ஸ் என்ற பஸ்ஸில் வியாழன் இரவு 10 மணி பஸ், திரும்பி வர ஞாயிறு இரவு 10 மணி பஸ்ஸையும் புக் செய்து விட்டோம். எங்கள் போதாத நேரம் ஓரே சீட்டையே (எண் 7 & 8) செல்வதற்கும், திரும்பி வரவும் தேர்ந்து எடுத்திருந்தேன்.
வியாழன் இரவு சென்னை - அசோக் பில்லர் நிறுத்தத்தில் 10:15 க்கு ஏறிக்கொள்ள பதிவு செய்திருந்தோம். 10:15க்கு வரவேண்டிய பஸ், 11 மணிக்குத்தான் வந்தது, போன் செய்து கேட்டால் கோயம்பேடில் டிராபிக், அதனால்தான் லேட் என்றனர். அசோக் பில்லர் ஆம்னி பஸ் நிறுத்ததில் ஒரு வசதியும் இல்லை. கிட்டத்தட்ட 500 பேர் அந்த இரவில் நடு ரோட்டில் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு நிழற்குடை, சேர்கள் எதுவுமில்லாமல் இருக்கிறது.
ஒரு வழியாக வந்த பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் அடுத்த தலைவலி ஆரம்பித்தது. சீட் எண் 7-ல் புஷ்பேக் வசதி சரியாக வேலை செய்யவில்லை. உட்கார்ந்து கொண்டே இரவு நேர பிரயாணம் என்பது கொடுமையான அனுபவம். கஷ்டப்பட்டு பிரயாணம் செய்தோம். பஸ்ஸின் உரிமையாளரும் அப்போது இருந்தார், அவரிடம் பிரச்சனையை கூறி பிறகு சரி செய்யக் கூறினேன். சரியென்று தலையாட்டினார். பிறகு பஸ் சென்னையை சுற்றி வேளச்சேரி சென்றது. அங்கிருந்து மேடவாக்கம் வழியே தாம்பரம் செல்ல 12 மணியாகி விட்டது.
இப்படியே ஊர் சுற்றிக் கொண்டு மெல்ல சென்று காலை 745 மணிக்கு திருச்சி தில்லைநகரில் இறக்கி விட்டனர். இரவு 11 மணிக்கு ஏறி காலை 745 வரை, கிட்டத்தட்ட 9 மணி நேரம் பயணம். இத்தனைக்கும் தூரமென்னவோ 300 கிமீ தான். மிகவும் மோசமான பயணம். இறங்கும் போது, டிரைவரிடமிடமும் புஷ்பேக் பிரச்சினையை சொல்லி சரி செய்ய நினைவு படுத்தினோம்.
ஞாயிறு இரவு திரும்பவும் அதே பஸ், அதே இருக்கையில் பயணித்தோம். சீட் சரி செய்யப் படவில்லை. டிரைவரும், செல்போனில் காண்டாக்ட் செய்த ஓனரும் சரியான பதில் தரவில்லை. திரும்பி வரும் போதும் இரவு 1030க்கு திருச்சியில் எடுத்து, காலை 8 மணிக்கு சென்னையில் இறக்கி விட்டனர்.
போதுமடா இந்த பிழைப்பு என்றாகி விட்டது. திரும்பவும் வாழ்க்கையில் SSCM டிராவல்ஸ் ஏறக்கூடாது என முடிவு செய்தேன். ரெட் பஸ் வெப்சைட்டில் மோசமான ரிவியூ கமெண்ட்டுகளை பதிவு செய்தேன். இதற்கு கன்ஸூயுமர் கோர்ட்டில் புகார் செய்யலாமா, அப்படி செய்தால் சீட் சரியில்லாததற்கு என்ன ஆதாரம் காட்ட முடியும் என்று சொல்லுங்களேன், எங்களிடம் டிக்கெட் பிரிண்டவுட் மட்டுமே இருக்கிறது.
Saturday, April 25, 2009
சென்னை ஆட்டோகாரர்களை என்ன செய்யலாம்?
ஒவ்வொரு முறை நாங்கள் ஊருக்கு செல்ல கோயம்பேடு செல்ல எத்தணிக்கும் போதெல்லாம் ஆட்டோ ஓட்டுனருடன் பெரும் பேசமே நடக்கும். வாய் கூசாமல் பெரும்பாலானோர் 150 ரூபாய் கேட்கிறார்கள், எந்த ஊர் நியாயம் என்றே தெரியவில்லை. 7 கிமீ தூரத்திற்கு 150 ரூபாயா? நான் மும்பையில் இருந்த போது ஒரு கி.மீ தூரத்திற்கு 9 ரூபாய் கொடுத்ததாய் ஞாபகம். அந்த கணக்கில் பார்த்தால் 63 ரூபாய்தான் வருகிறது. இப்போது டீசல் விலை வேறு 4 ரூபாய் (இரு தடவையாய்) குறைந்து இருக்கிறது. கேட்டால் டிராபிக் இருக்கும், திரும்பி வர ஆள் இருக்காது என்று ஆயிரம் காரணங்கள் கூறுகிறார்கள். பேரம் பேசி 100 ரூபாய்க்கோ, 120 ரூபாய்க்கோ ஒவ்வொரு முறையும் செல்கிறோம்.
சென்னையில் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்? மும்பையில், புனேயில் இப்படி இல்லையே, நியாயமாய் மீட்டர் போடுகிறார்களே. இவர்களை என்ன செய்தால் திருத்தலாம், யோசனை சொல்லுங்களேன்?
Friday, April 10, 2009
யாவரும் நலம் - திரைப்பார்வை
+
நல்ல, இயல்பான திரைக்கதை
பாசாங்கில்லாத, இயல்பான நடிப்பு
வித்தியாசமான கதை
திறமையான ஒலி, ஒளிப்பதிவு
-
ஏற்கனவே பலரும் கூறிய இரு சிறு தவறுகள்:
1. ஒரு பாட்டில், பீச்சில் மாதவன் குடும்பத்தினர் விளையாடும் போது வரும் காட்சியில் அருகில் உள்ள சாட் கடையில், ஹிந்தியில் பெயர் பலகை, மும்பையில் வசித்த எனக்கு ஜூஹூ பீச் என்று அப்பட்டமாக தெரிகிறது
2. மருத்துவமனையில், மாதவன் ஹிந்து பேப்பரை வாங்கி டிவி நிகழ்ச்சி நிரலை பார்க்கும் போது தமிழில் தெரியும் நிகழ்ச்சி நிரல்
வேறொன்றும் தோன்றவில்லை, வித்தியாசமான, இயல்பான திகில் படம், நன்றாக எடுத்திருக்கிறார்கள்!
Wednesday, April 01, 2009
எனது நூறாவது இடுகை: தேசிகன்
2005 ஜூனில் வேலை குறைவாயிருந்த ஒரு அலுவலக மதியத்தில் பொழுது போகாமல் இணையத்தில் ‘Writer Sujatha Novels’ என்று தேடிய பொழுது வந்த ஒரு லிங்க் என்னை தேசிகனின் வலைத்தளத்திற்கு அழைத்துச் சென்றது. அவருடைய சில இடுகைகளை படித்தேன், அப்படியே அங்கிருந்து தமிழ்மணம் சென்று நிறைய இடுகைகளை படிக்க ஆரம்பித்தேன். நாமும் எழுதலாமே என்று ஆர்வம் வந்தது. தேசிகனை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, எப்படி எழுதுவது என்று கேட்டு, ஒரு வழியாக 2005-ஆகஸ்டில் ஒரு வலைப்பதிவினை ஆரம்பித்தேன்.
எனது முதல் இடுகை - நண்பர்களுக்காக ஒரு பதிவு..
முதல் பின்னூட்டத்தினை, தேசிகன் அளித்தார் “சண்டை போடாமல் நிறைய எழுதுங்கள்”.
இன்று வரையிலும் இதை பின்பற்றி வருகிறேன். இதுவரையிலும் யாரிடமும் சண்டை போட்டதில்லை, எனது கருத்துகளை நாகரீகமாகவும், பிறர் மனம் புண்படாதவாறும்தான் இடுகையோ, பின்னூட்டமோ எழுதி வருகிறேன்.
வலைப்பதிவு ஆரம்பித்த போது ரொம்ப மஜாவாக இருந்தது. பெரிய எழுத்தாளராகி விட்டோம் என்று ஒரே மகிழ்ச்சி. பார்க்கும் நபரிடமெல்லாம் ப்ளாக் அட்ரஸைக் கொடுத்து, அவசியம் படித்து பின்னூட்டம் போடுங்கள் என்றேன். என்னைக் கண்டாலே அலறி அடித்து ஓட ஆரம்பித்தனர் என் நண்பர்கள் :-)
எனது முதல் இடுகைக்கு, தேசிகனைத் தவிர பாஸ்டன் பாலாவும், டோண்டுவும் பின்னூட்டினார்கள். நன்றி, வலைப்பதிவு முன்னோடிகளே!
ஆரம்பத்தில் சோம்பேறி பையன் என்ற பெயரில் எழுதினேன், பின் திருமணத்திற்கு பெண் பார்க்க ஆரம்பித்தவுடன் பெயரை மாற்றிக் கொண்டேன் :-)
நிறைய வரவேற்பினை பெற்ற, எனது சில இடுகைகள்
நம்ம ஊர் திருச்சி
தூக்கம் தொலைத்த இரவுகளில் எழுதிய கவிதைகள்
தயாநிதி மாறன் - அன்றும் & இன்றும் - கார்ட்டூன்
மின் அஞ்சல் ரகசியங்கள்
அம்பியும், அன்னியனும்... Version 2.0
கருப்பு எம்.ஜி.ஆர் அழைக்கிறார்
உள்ளாட்சித் தேர்தல் 2006 - கார்ட்டூன்
சென்னையின் ப்ளஸ்கள்(+)
என் மனைவிக்காக, ஓர் கவிதை
வலைப்பதிவில் நான் சாதித்தது என்ன?
பெரிதாக ஒன்றுமில்லை. என் மனதுக்கு எழுத தோன்றியவற்றை எழுதினேன். கவிதை, கதை, சினிமா விமர்சனம், கார்ட்டூன், வாழ்க்கை அனுபவங்கள் என கலந்து கட்டி அடித்தேன். 2006 செப்டம்பரில் தேன்கூடு நடத்திய போட்டியில் கலந்து கொண்ட 80 இடுகைகளை படித்து விமர்சனம் செய்ததைத்தான் சாதனையாக கருதுகிறேன். வேலைப்பளுவிற்கு நடுவில் ஒரு 25 நாட்களில் 80 இடுகைகளை படித்து, விமர்சனம் எழுதி மதிப்பெண் அளிப்பது சுலபமானதல்ல என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என கருதுகிறேன்.
வலைப்பதிவின் ப்ளஸ்கள் (என நான் கருதுவது)
நம் எழுத்தை அச்சில் பார்க்கும் அல்ப சந்தோஷம்
நாம் நினைத்ததை எழுதி, ஆரோக்கியமாக விவாதிக்க முடிவது
பத்திரிக்கைகளில் படிக்க முடியாத கருத்துக்கள், விவாதங்களை படிக்க முடிவது
வலைப்பதிவின் மைனஸ்கள் (என நான் கருதுவது)
சில சமயங்களில், நாம் எழுதிய கருத்தை எதிர்ப்பதாய் நினைத்துக் கொண்டு, நம்மை எதிர்ப்பது
மொக்கை பதிவாயிருந்தாலும், நண்பர் எழுதியிருந்தால் வரிந்து வரிந்து பின்னூட்டமிடுவது
இடுகைகளிலும் மூலம் சாதி, மத, இன துவேஷம்
ஆபாச, தனிநபர் துவேஷ பின்னூட்டங்கள்
புதியவர்களுக்கு அறிவுரை
சண்டை போடாமல் நிறைய எழுதுங்கள் :-)
சமர்ப்பணம்
எனக்கு வலைப்பதிவு உலகத்தை அறிமுகப்படுத்தி, பதிய கற்றுத்தந்து, உற்சாகப்படுத்திய நண்பர் தேசிகனுக்கு, இந்த நூறாவது பதிவை சமர்ப்பிக்கிறேன்.
நன்றிகள்
வலைப்பதிவு நண்பர்களே, நீங்கள் இதுவரை எனக்கு அளித்து வந்த ஆதரவிற்காகவும், இனிமேல் அளிக்கப்போகும் ஆதரவிற்கும் நன்றிகள் பலப்பல, இதுவரை வலைப்பதிவில் நான் பயணித்ததையும், இனிமேல் எப்படி பயணிக்க வேண்டும் என்பதையும், உங்கள் வலைப்பதிவு அனுபவங்களையும், உங்களது வேறு கருத்துகளையும், தயவுசெய்து பின்னூட்டமிடுங்கள். இவை என்னை உற்சாகப் படுத்தி, தொடர்ந்து எழுதச் செய்யும்.
நன்றி, மீண்டும் வாருங்கள்!!
இந்தியா - நியூசி டெஸ்ட் கிரிக்கெட் - 3வது போட்டி முன்னோட்டம்
கம்பீர், லஷ்மணன், டிராவிட், சச்சின், யுவராஜ் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே. மூன்றாவது போட்டிக்கு தோனி அணிக்கு திரும்பி விடுவார் என எதிர்பார்க்கலாம்.
தினேஷ் கார்த்திக் கிடைத்த ஒரு வாய்ப்பையும் தவர விட்டு விட்டது வருத்தம்தான். இரண்டாவது போட்டியில் சேவக்கின் தலைமை சிலாகிக்கும்படி இல்லை. யுவராஜ் சிங் இரண்டு கேட்ச்சுகளை மிஸ் செய்யாமல் இருந்தால், போட்டியின் முடிவு வேறு மாதிரியும் இருந்திருக்க வாய்ப்புண்டு.
மூன்றாவது போட்டி நடக்கப்போகும் வெலிங்டன் பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமானது, எனவே இந்தியா தொடரை வெல்ல அருமையான வாய்ப்பு காத்துக் கொண்டுள்ளது.
சேவக் எல்லா பந்துகளை விளாச நினைப்பதை தவிர்க்கலாம். முதல் டெஸ்ட் வென்ற அதே அணியே மீண்டும் களமிறங்கலாம். இந்தியா பீல்டிங்கைல் அதிக கவனம் செலுத்த வேண்டும். பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச்சுகளில், பீல்டிங்கின் சிறு தவறுகள் கூட வெற்றிவாய்ப்பை தடுத்து விடும்.
பந்து வீச்சில் ஷாகிர், இஷாந்த், முனாப், ஹர்பஜன் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம். தோனியின் தலைமை நிச்சயம் அணியை ஊக்குவிக்கும். யுவராஜ் பார்முக்கு திரும்பியுள்ளது நன்மையே.
மூன்றாவது போட்டியை வென்று, தொடரையும் வென்று சரித்திரம் படைக்க இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!!
Tuesday, March 31, 2009
வடபழனி சரவணபவன்
பக்கத்திலேயே பிரசித்தமான வடபழனி முருகன் கோவில் உள்ளது. கோவில் தூய்மையாக, அழகாக உள்ளது. திவ்யமான, திருப்தியான தரிசனத்திற்கு வெள்ளி, சனி, ஞாயிறு மாலைகளை தவிர்ப்பது உத்தமம். நாங்கள் வியாழன் மாலை சென்றோம், அதிக கூட்டமில்லை, பொறுமையாக முருகனிடம் உரையாட முடிந்தது.
சரவணபவனில் தென்னிந்திய, வட இந்திய உணவுகளும் கிடைக்கின்றன. தமிழக உணவு வகைகளில் இட்லி, தோசை, வடை போன்றவைகள் விதவிதமாய் கிடைக்கின்றன. நாங்கள் நெய் சாம்பார் இட்லி (மினி இட்லி 14 - நெய் சாம்பாரில் விட்டு), இடியாப்பம் மசாலா கறியுடன், மினி டிபன் (மினி தோசை, நெய் சாம்பார் இட்லி, கேசரி, உப்புமா) எல்லாம் சாப்பிட்டோம். அற்புதமாக இருந்தது, 170 ரூபாய் பில். முன்பொரு முறை அசோக் நகர் சரவண பவனில், சாப்பாடு சாப்பிட்டோம், அதுவும் நன்றாக இருந்தது.
நீங்கள் தரமான தமிழக டிபன் வகையறாக்களை சாப்பிட, சரவண பவன் செல்லலாம்.
உணவகத்தில் வாரியாரின் வெவ்வேறு புகைப்படங்கள், பெரிதாக மாட்டப் பட்டு இருந்தன. ஓரிரண்டு புகைப்படங்களில் அண்ணாச்சியும், பின்னாளில் ஜீவஜோதிக்காக ஜெயில் செல்லப் போவது தெரியாமல் சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.
எனது முந்தைய உணவிட வழிகாட்டு பதிவுகள்
மழைக் காடு - அடையார் - சென்னை
அடையாறு சங்கீதாவும், குழிப்பனியாரமும்..
Tuesday, March 24, 2009
சுஜா(தா) தாட்ஸ்
விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள புத்தகம் சுஜாதாட்ஸ். ஜூனியர் போஸ்ட்டில் 1997 - 1998ல் சுஜாதா எழுதிய கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டு உள்ளனர்.
வழக்கம் போலவே எல்லா விஷயங்களையும் தொட்டிருக்கிறார் சுஜாதா.
தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்து விட்டு, நிஜ வாழ்க்கையை கவனியுங்கள் என்கிறார் சுஜாதா. அவர் கேபிள் இணைப்பே வைத்துக் கொள்ளவில்லை என்கிறார், வியப்பாக இருக்கிறது.
இன்னுமொரு கட்டுரையில், தமிழ் சொற்களை பற்றி ஆராய்கிறார். எழுத்தாளன் என்கிறோம், கொலையாளன் என்பதில்லை, கொலையாளி என்கிறோம், ஏன்? என கேட்கிறார். நீங்கள் யாராவது கூற முடியுமா?
மல்ட்டி மீடியா என்பதற்கு தமிழ் வார்த்தையாக ‘பல்லூடகம்’ என்கிறார்.
சிறுகதை ஆரம்பத்திற்கு சில மோசமான உதாரணங்களை காட்டி இருக்கிறார்.
“டுமில் என்று துப்பாக்கி ஒரு முறை உமிழ்ந்தது, சுகரிதா செத்து விழுந்தாள்”.
பெரும்பாலும் முதல் பாராவிலேயே கதையை ஆரம்பித்து விடுங்கள், சுவாரசியமாய் ஆரம்பத்தை அமைத்து, படிப்பவர்களை கதைக்குள் இழுக்க வேண்டும் என்கிறார், சிறுகதை எழுத்தாளர்கள் கவனிக்கவும்.
இந்திய நடனங்களை பற்றி இன்னொரு இடத்தில் கிண்டலடிக்கிறார், ம்யூட் செய்து நடனத்தை பாருங்கள், அபத்தமாக இருக்கும் என்கிறார்.
ஆனாலும், எல்லா கட்டுரைகளுமே சுவாரசியமாக இருக்கின்றன என கூற முடிய வில்லை. கற்றதும், பெற்றதும் கட்டுரைகள் அளவுக்கு இல்லை என்றே தோன்றுகிறது.
எல்லோரும் ரசித்து படிக்க முடியும் புத்தகம்!! நீங்கள் படித்திருக்கிறீர்களா? உங்களது கருத்து என்ன??
ஜூனியர் போஸ்ட் இப்போதும் வருகிறதா? இது என்ன தனி இதழா அல்லது இணைப்பா?
Saturday, March 14, 2009
அடையாறு சங்கீதாவும், குழிப்பனியாரமும்..
கிண்டியிலிருந்து வரும்போது, அடையார் மத்தியகைலாஷ் சிக்னலை தாண்டி, இடது புற சர்வீஸ் சாலையில் நுழைந்தால், ஒரு நிமிடத்தில் சங்கீதாவை அணுகலாம்.
வார இறுதி மாலை, இரவுகளில் கார் பார்க்கிங் கிடைப்பது கஷ்டம். சர்வீஸ் சாலையில்தான் நிறுத்த வேண்டும். டூ விலரில் செல்வது உத்தமம்.
குழிப் பணியாரம், இடியாப்பம் வடைகறி, அடை அவியல், கேரட் ஹல்வா, பீட்ரூட் போண்டோ, மகாராஜா ஸ்பெசல் மசால் தோசை, பீன்ஸ் வடை, கேரட் வடை, பால் கொழுக்கட்டை, தேங்காய்பால் ஆப்பம் போன்ற பல வகையான உணவுகளை ஒரு பிடி பிடிக்கலாம்.
விலையும், ரொம்ப இருக்காது. இன்று நானும், என் மனைவியும் சென்று ஒரு ஆந்திரா பெசரட்டு, அடை அவியல், இடியாப்பம், குழிப் பனியாரம், பீட்ரூட் போண்டோ எல்லாம் சாப்பிட்டோம், 181 ரூபாய் பில்.
சங்கீதா அடையாறில் மட்டுமல்லாமல், சென்னையில் வேறு சில இடங்களிலும் இருக்கிறது. ஒருமுறை முயற்சித்து பாருங்களேன்..
என்னுடைய சென்ற வார உணவிட வழிகாட்டு பதிவு: மழைக்காடு, அடையார்
Sunday, March 08, 2009
என் மனைவிக்காக, ஓர் கவிதை
எந்நிமிடமும் ஊடல்தான்..
சிறுசிறு நிகழ்வுகளுக்காய்
நீயும், நானும்
கோபப் படுவோம்..
நீ அருகிலில்லா
இஞ்ஞாயிறு
ஏனோ போரடிக்கிறது..
ஒவ்வொர் நிமிடமும்
மெதுவாய் நகர்கின்றது..
சீக்கிரம் வாயேன்
என்னருமை மனைவியே,
அடுத்த ஊடலை
உடனே அவதானிப்போம்..
மழைக் காடு - அடையார் - சென்னை
விடுதியின் கதவே, ஒரு பாதாள அறைக்குள் செல்வது போல் sliding wood ஆக அமைந்துள்ளது. உள்ளே சென்றால் மான் தலை, பாம்புகள், பறவைக் கூடுகள் என அருமையான அலங்கார பொருட்கள்.
உணவும் சுவையாக உள்ளது. உங்களுக்கு south indian, north indian, chinese என்று விதவிதமான உணவு வகைகள் கிடைக்கின்றன. ஒரு சைட் டிஷ் (side dish) ன் விலை சராசரியாக 100 ரூபாய் ஆகிறது. அளவு நிறையவே கிடைக்கிறது (quantity).
இதைவிடவும் பிரமாதமான விஷயம், நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கரடி, ஒற்றைக் கண்ணன் பேய் போன்ற விதவிதமான வேடங்களில் ஒருவர் வருகிறார்.
உங்கள் மனைவியை பயமுறுத்த, இதை விடவும் அருமையான தருணம் மனித உரிமை பேசும் இக்காலத்தில் கிடைப்பது அரிது :-)
இருவர் சென்று 500 ரூபாய்க்குள் திருப்தியாய் சாப்பிட்டு வரலாம்.
என்னங்க மழைக்காடுக்கு கிளம்பிட்டீங்களா, இருங்க ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க..
எஜமான் காலடி மண்ணெடுத்து..
வெட்கத்தை விட்டு சொல்கிறேன், நான் தீவிர ரஜினி விசிறி அல்ல, ஆனாலும் எனக்கு இந்த காட்சியை பார்த்த போது புல்லரித்தது. மிகவும் ரசித்தேன். ரஜினியிடம் என்னை மாதிரி சாதாரண ரசிகனையும் கவர்ந்து இழுக்கக் கூடிய சக்தி அவரது நடிப்பால் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். உதயகுமார், திறமையாய் காட்சி அமைத்ததையும் குறிப்பிட வேண்டும்.
எப்போது எஜமான் வந்தது, என தெரிய வில்லை. 1990ல் வந்திருக்கலாம். இன்றும் அந்த படத்தை பார்த்து ஒன்றி ரசிக்க முடிகிறது.
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில், நான் படித்துக் கொண்டிருந்த போது ஒருமுறை டைரக்டர் உதயகுமர் ஆண்டு விழாவுக்கு வந்திருந்தார்.
எஜமான பட நினைவுகளை பற்றி கேட்கும்போது, ரஜினி மீனாவின் பேச்சை கேட்டு பட்டாம் பூச்சி புடிக்க செல்வாரல்லவா, அப்போது கிராம மக்களில் ஒருவர் 'பட்டாம் பூச்சி என்னைய்யா, அவர் நினைச்சா எதை வேணாலும் புடிப்பாரு' என்ற வசனம் வரும். ஆரம்பத்தில் அந்த வசனத்தை 'பட்டாம் பூச்சி என்னைய்யா, அவர் நினைச்சா கோட்டையையே புடிப்பாரு' என்றே உதயகுமார் அமைத்திருந்தாராம், ஆனால் ரஜினி கேட்டுக் கொண்டதால் மாற்றப் பட்டதாம்.
காலடி மண்ணெடுத்து வழிபடுவது போல் காட்டுவது ஓவராக தனிமனித வழிபாடாய் இருக்கிறதே என்று கேட்டோம், சரியாக பதிலளிக்காமல் நழுவி விட்டார்.
என்ன இருந்தாலும், ரஜினி இந்த படத்தில் கலக்கி விட்டார் அல்லவா??
NZ vs IND - இன்றைய போட்டியில் ஜெயிக்குமா இந்தியா?
இந்தியாவின் இறுதி ஸ்கோர் - 392/4. நியுசிலாந்து இதை சேஸ் செய்வது மிகவும் கடினம் என்றே நினைக்கிறேன். வெட்டோரி இல்லாதது, அவர்களுக்கு ஒரு இழப்பே. முதல் போட்டியாதலால், அனுபவமில்லா கேப்டன் பவுலிங்கை மேனேஜ் செய்ய ரொம்பவும் கஷ்டப் பட்டார்.
பார்ப்போம், நியூசியின் பேட்டிங் வலுவானது, எனவே போட்டி சவாலாய் இருக்குமென நினைக்கிறேன். தற்போதைய ஸ்கோர் NZ: 203/5 (30.3 ov)
ஒரு பல்வலியும், சில பின்குறிப்புகளும்
சனிக்கிழமை மாலையில் பல் டாக்டரிடம் சென்றேன். வெற்றிச்செல்வன் இளைஞர், டாக்டர் என்றே நம்ப முடியவில்லை. ஆனால் அற்புதமாக என்னை கையாண்டார். பல் நோயாளிகளை பரிசோதிக்கும் இருக்கையில் என்னை சாய்மானமாக படுக்க வைத்து, சில பல கருவிகளை, மின் ஒளியின் ஊடே
கையாண்டு அங்கெ இங்கே தொட்டு அவனித்தார்.
பிறகு இருக்கைக்கு வந்து எனக்கு பொறுமையாய் படம் வரைந்து விளக்கினார். இப்போது பலருக்கும் தாடை அளவு குறுகி விட்டதால், 31,32 வது பற்கள் வெளிவருவதில்லையாம். இவற்றை ஞானப்பற்கள் (wisdom teeth) என்பார்களாம். சாதாரணமாய் இவை ஒரு மனிதனின் 25 வயதில் வெளிவந்து விடுமாம். ஆனால் தற்போது 10-ல் 7 பேருக்கு இவை வெளியே வருவதில்லையாம்.
நாம் பல் சுகாதாரத்தை முழுமையாய் கடைப்பிடிக்கா விடில், இப்பற்களில் ஒவ்வாமை (infection) ஏற்படுமாம். அப்படி ஏற்பட்ட ஒவ்வாமையால் இப்பகுதி எனக்கு கொஞ்சம் வீங்கி உள்ளது.
கொஞ்சம் சுகாதாரமாய் பல்லை பேணி வருமாறும், எனக்கு 2 tablets (Hagan - antibiatic, Nimulid - pain killer) - ம், tantrum oral rinse -ம் கொடுத்து தினமும் மூன்று முறை வாய் கொப்பளிக்க கூறினார்.
மேலும், எப்போதும் சாப்பிட்ட உடன், வாய் கொப்பளிக்க கூறினார். தினமும், காலை & மாலையில் பல் விளக்க கூறினார். வாய் கழுவுவதற்காக இருக்கும் oral rinser, mouth vash உபயோகப் படுத்த கூறினார்.
நாம் பின்பற்றப் போகிறேன், மக்களே நீங்களும் கவனமாய் பல்லை பேணுங்கள், வாழ்க்கையை அனுபவியுங்கள்!!
Wednesday, March 04, 2009
கவாஸ்கர் - இப்ப என்ன சொல்றீங்க?
இப்போது இந்தியா முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று விட்டது, அதே புதிய உடையில். இப்போது கவாஸ்கர் என்ன சொல்கிறார்??
உண்மையான காரணம், டி௨0 போட்டிகளில், நாம் போதுமான ரன்கள் எடுக்கவில்லை, பவுலிங்கும் எடுபட வில்லை. எனவே தோற்றோம்!!
நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்??
Saturday, February 28, 2009
ஸ்ரீரங்கத்து தேவதைகளில் சுஜாதா
கதையை படிக்கும்போது, நம்மையுமே ஸ்ரீரங்கத்து சித்திரை வீதிகளிலும், தேரடி முட்டியிலும் கூடவே கூட்டிச் செல்கிறார். ஏதோ அவரது பக்கத்து வீட்டில் இருந்து அனைத்தையும் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.
கடைசி இரண்டு கதைகளான காதல் கடிதம் மற்றும் மறு' வில் அவரது பாட்டியின் கேரக்டரைஷேஷன் அற்புதமானது, அது கதையல்ல நிஜமென்றே தோன்றுகிறது.
தெருமுனை விளையாட்டுகளை, முக்கியமாக தெரு கிரிக்கெட்டை மிக சுவாரசியமாக சுஜாதா ஒருவரால் மட்டுமே சொல்ல முடியும் என தோன்றுகிறது.
ரங்கு, அவரது கடை, கோபாலன், மல்லிகா, பத்தனா ஐயர், குண்டு ரமணி, வரது, வீர ராகவன், கிருஷ்ண மூர்த்தி போன்ற அவரது பாத்திரங்கள், இப்பதிவு எழுதும்போதும், இன்னும் வெகு நாட்களுக்கும் என் நினைவில் இருப்பார்கள்.
சுஜாதாவின் மற்ற நாவல்கள் சிலதையும் நான் படித்திருக்கிறேன், படித்து கொண்டிருக்கிறேன். எனக்கென்னவோ, மற்ற அவரது நாவல்களை விட ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஒரு படி மேல் என்னை குதுகலப் படுத்துவதாகவே தோன்றுகிறது. இதில் வரும் நகைச்சுவை, சமூகப் பார்வைகள், நேரடி வர்ணணைகள், கதாபாத்திரங்கள் எல்லாமே மிகவும் பரிச்சயப் பட்டவை, நாம் நேரில் சந்தித்தவையாக இருக்கின்றன. மேலும் நம் அனைவரது சிறுவயது வாழ்க்கையை நினைவுபடுத்துவதும், ஒரு காரணம்.
என்றாவது ஒருநாள் பூவுலகை விடுத்து, மேலுலகு செல்லும் போது, நான் அங்கு சுஜாதாவை சந்திக்க நேர்ந்தால், இவ்வுளவு அற்புதமான வாசிப்பனுபவம் கொடுத்தற்காக, அவருக்கு சொல்லுவேன் "தேங்க்ஸ், ஸார்!!!".
Thursday, February 26, 2009
கிசுகிசு என்பது தமிழ்ச் சொல்லா??
பெரும் மோசடி செய்த பிரபல் ஐடி கம்பெனியின் பேரில் படமெடுத்த ஹீரோவை வைத்து அடுத்த படம் செய்ய யாரும் முன்வரவில்லையாம், அதனால் அவரே சொந்த படம் திரும்பவும் எடுக்கிறாராம்.
சரி அந்த கதையை விடுங்கள்.
கிசுகிசு என்பது தமிழ்ச்சொல்லா? இல்லையெனில், இதற்கு சரியான தமிழ்ச்சொல் என்ன?
துணுக்கு - என்பதற்கான தமிழ்ச்சொல் என்ன?
கேரட் என்ற காய்கறியின் தமிழ்ச் சொல் என்ன? அப்படி ஏதும் இல்லையெனில், ஏன் இல்லை? கேரட், ஆப்பிள், பீன்ஸ் போன்ற காய்கறிகளுக்கு ஏன் தமிழில் பெயர் வைக்க வில்லை?
எல்லோரும் வந்து பதில் சொல்லுங்கள், விவாதிக்கலாம்!!
Wednesday, February 25, 2009
டி-௨0 கிரிக்கெட் - இந்தியா தோற்றது ஏன்?
- சேவக் - கம்பிர் தொடக்க ஜோடி சரியாக விளையாடி ரன்கள் குவிக்க இயலாதது. கடந்த இரு ஆண்டுகளில், இந்தியா வெற்றிபெற்ற போட்டிகளில், இந்த ஜோடியின் பங்களிப்பு மகத்தானது.
- இரண்டு போட்டியிலும் டாஸ் தோற்று, இந்தியா ஸ்கோர் சேஸ் பண்ண முடியாமல் போனது.
- தோனியிடமிருந்து பெரிய அளவில் பங்களிப்பு இல்லை, அவரது டைமிங் இரண்டாவது போட்டியில், படு மோசம், முப்பது பந்துகளில், இருபத்தெட்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது அவரால்.
- சரியான திட்டமிடல் இல்லாதது. இரு போட்டிகளிலுமே பேட்டிங் ப்ளான் இல்லை.
- இஷாந்த் ஷர்மா, ஷகீர் கான் கூட்டணி எதிர்பார்த்த அளவில் சோபிக்காதது.
- ஒரு சரியான ஆல்ரவுண்டர் இல்லாதது.
- பின் குறிப்பு: சில விமர்சனங்களில், இந்தியாவின் புதிய உடை ராசியில்லை என்று கூறுகிறார்கள். இன்று சுனில் கவாஸ்கர் கூட இதையே கூறி இருக்கிறார். இதை விட அபத்தமான காரணம் வேறெதுவும் இருக்க முடியாது.
Tuesday, February 24, 2009
எங்கே எனது கவிதை??
நித்தமும்
ஒருவர் முகத்தில் ஒருவர் விழிப்போம்..
வழமையாய் காலையில்
ஒரே மிதிவண்டியில் ஆற்றுக்கு செல்வோம்
செல்லும் போது நீயும்,
திரும்பும் போது நானும் ஓட்டுவோம்,
கேட்டால் எதிர்காற்றில் உன்னால் அழுத்த முடியாதென்பாய்..
என் பேனா மூடியில் பேப்பர் அடைத்து
கொண்டபோது, நீயே தண்ணீர் ஊற்றி எடுத்துத் தந்தாய்..
கிட்டிப் புல் விளையாடும் போது,
நான் எதிரணியில் இருந்தால்,
மெதுவாய் அடிப்பாய் நான் கேட்ச் பிடிக்க வசதியாய்..
ஏதாவது ஒரு பலகாரம் உங்கள் வீட்டில் செய்தால்,
உடனே எனக்கு கொடுக்க ஓடோடி வருவாய்..
உனக்கு ஓர் பம்பரம் வாங்கினால்,
எனக்கும் ஒன்று வாங்கி வருவாய் நான் கேட்காமலே..
வீட்டுப் பாடம் எழுத நேரமில்லா
சில மதிய உணவு இடைவேளைகளில்
எனக்காக நீ அவசரமாய் வாய்ப்பாட்டை சிலேட்டில் கிறுக்குவாய்..
உன் வீட்டிற்கு வரும் உறவினர் குழந்தைகளை
என் வீட்டிற்கும் அழைத்து வந்து
என்னை அறிமுகப் படுத்துவாய்..
பள்ளிக் கூடத்தில் எப்போதும் என்னருகே
அமர்ந்திருப்பாய்..
கோயிலுக்கும், சினிமாவுக்கும்,
சந்தைக்கும், விளையாட்டிற்கும்
நானில்லாமல் எங்கும் தனியாய் சென்றதில்லை நீ..
கல்லூரி பருவத்தில்
வேறிடத்தில் நீ படிக்க நேரிட்ட போதும்,
என்னுடன் தினமும் உரையாடுவாய்.
தினசரி கதைகளை தெரிவிப்பாய்..
இருவரும் நகரத்திற்கு வந்து
வேலையில் சேர்ந்தும் தொடர்பில் இருந்தோம்..
திருமணம், பிள்ளைப்பேறு,
வளைகாப்பு, மகளின் மஞ்சள் நீராட்டு
என வைபவங்கள்
உன் வீட்டிலும், என் வீட்டிலும் நடந்தேறின..
ஒவ்வொன்றிலும் என் ஆலோசனையை கேட்டாய் நீ..
இப்படியாய் நம் வாழ்வு
செவ்வனே சென்று கொண்டிருந்த போது
திடிரென, பூவுலகு எய்தினாய் நீ!!
நண்பா,
இத்தனை நாளாய் தினம் தினம்
பார்த்து, பழகிய உன் அருகாமை இல்லாமல்
வெறுமையாய் நகர்கிறது என் வாழ்வு,
எப்போது நாம் மீண்டும் சந்திப்போம்,
சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ?
Sunday, February 22, 2009
சன் டிவியே, மனசாட்சி இருக்கிறதா??
சன் டிவியில் டாப் டென் மூவிஸ் ஓடிக் கொண்டிருந்தது. இரண்டாம் இடம் 'வெண்ணிலா கபடி குழு'வை பார்த்து ரசித்தேன். நல்ல படம்தான். அடுத்ததாக முதலிடம் பிடித்த படத்தை காட்டியபோது மிகுந்த அதிர்ச்சி. ஹார்ட் அட்டாக் வந்தது போலிருந்தது, கண்ணீர் கொட்டியது. ஏனென்றால் முதலிடமென் சன் டிவி அறிவித்த படம் 'படிக்காதவன்'.
படு மொக்கையான படம். பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டது. சன் டிவி பிக்சர்ஸ் வெளியீடு என்பதற்காக என்ன வேண்டுமானாலும் ரேங்கிக் குடுப்பதா? என்ன அநியாயம் இது? எப்படி ரேங்கிங்கை நிர்ணயிக்கிறார்கள்? இப்படித்தான் சில நாட்கள் முன்பு தெனாவட்டு, திண்டுக்கல் சாரதியையும் முதலிடத்தில் அறிவித்தார்கள்.
சன் டிவியே, உனக்கு மனசாட்சியே இல்லையா????
தேன்கூடு திரட்டி என்னானது?
Saturday, February 21, 2009
அஹம் பிரம்மாஸ்மி ? - நான் கடவுளா? - படம் குறித்த கேள்விகள்
2. பூஜா, பாலாவின் முந்தைய கதாநாயகிகளையே ஞாபகப்படுத்துகிறார், முக்கியமாக பல இடங்களில், நந்தாவின் லைலாவையே பார்க்கும் படி இருப்பது, படத்தின் பலமா அல்லது பலவீனமா?
3. காவல் நிலையத்தில் நடக்கும் காமெடி காட்சி (மிமிக்ரி, எம்ஜிஆர் - சிவாஜி - நயந்தாரா டான்ஸ்) படத்தில் எவ்விதத்திலும் ஒட்ட வில்லையே?
4. பூஜா பாடுவதாக தோன்றும் சில பாடல்கள், வெவ்வேறு குரல்களில் வருகின்றனவே (வயதான குரல் பாடல்) அவருக்கு பொருந்த வில்லையல்லவா?
5. கிளைமேக்ஸில் பூஜாவின் சிதைந்த முகத்தில் மேக்கப் என்பது அப்பட்டமாக தெரிகிறதே, ஏன் இந்த இடறல்?
6. கடைசி காட்சியில் தாண்டவன் ஏன் தனியாக வந்து சண்டை போடுகிறான், எங்கே அவனது அடிப்பொடிகள், இன்ஸ்பெக்டர்?
இதற்கெல்லாம் பாலாதான் பதில் சொல்லவேண்டும் என்பதில்லை, இதை படிக்கும் நீங்கள் சொல்லுங்களேன்..
Thursday, February 19, 2009
பழைய பதிவர்களெல்லாம் எங்கே??
1. கோ. கணெஷ்
2. டி.பி.ஆர். ஜோசப்
3. தருமி
4. துளசி கோபால்
5. ஞான வெட்டியான்
6. டுபுக்கு
இன்னும் பல பதிவர்கள் ஞாபகம் வரவில்லை. இவர்களின் links கொடுக்க முடியுமா?
தேன்கூடு திரட்டி தளம் என்னானது? தமிழ்மணத்தை தவிர வேறு aggregators வந்து பிரபலமாகி உள்ளதா??
போலி பிரச்சினை தீர்ந்து விட்டதா??
தமிழ் வலைப் பதிவில் வேறு ஏதாவது முன்னேற்றங்கள்? Improvements/updates/rules?
தயவுசெய்து சொல்லுங்களேன்...
Wednesday, February 18, 2009
வெண்ணிலா கபடி குழு - விமர்சனம் அல்ல
சென்னை ராமாபுரத்தில் இருப்பவர்களுக்கு மிக அருகே உயர்தர மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் எதுவும் கிடையாது. சத்யம் 12 km, ஐநாக்ஸ் 14 km, மாயாஜால் 30 km. கிண்டியிலோ, போரூரிலோ ஏன் எதுவும் இல்லை?
உதயம் 5 km ல் உள்ளது. இதை விட்டால், சாதாரண ஆனால் நல்ல தியேட்டர் வடபழனி கமலா, சாலிகிராமம் ஏவிஎம் ராஜேஸ்வரி என இரண்டும் உள்ளன.
இதில் கமலா தியேட்டருக்கு மட்டும் online booking வசதி உள்ளது (தற்போதிய படம்: வில்லு). உதயம் தியேட்டரில் வார இறுதியில் புதிய படம் பார்க்க, 2 - 3 நாட்கள் முன்பே நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும்.
ஆனால் அனைத்து மல்டிப்ளெக்ஸ் மற்றும் சாதா தியேட்டர்களிலும் பைக் நிறுத்த Rs 10 டிக்கெட். ஐநாக்ஸில் Rs 15 என நினைக்கிறேன்.
இதை எல்லாம் அலசி ஆராய்ந்து ஏவிஎம் போக முடிவெடுத்தோம். ஒரு ஞாயிறு மாலை முதல் வகுப்பு டிக்கெட் Rs. 40 க்கு வாங்கி சென்றால் அரங்கமே நிரம்பி வழிகிறது. சிறுவர்கள், சிறுமிகள், குழந்தைகள், பெரியவர்கள், மாணவர்கள் என்று கலந்து பட்ட கூட்டத்தில் படம் பார்ப்பதே ஓர் அற்புதமான அனுபவம்.
ஒரு வருடத்திற்கு முன்பு படம் பெயரை கேள்விப் பட்ட போதே படத்தை பார்க்க வேண்டும் என நினைத்து இருந்தேன். படத் தயாரிப்பாளர் ஒரு NRI யாம். எனது நண்பரின் நண்பராம்.
தியேட்டரில் இருக்கைகள் சற்று குறுகலாக உள்ளன. முன் சீட்டுகாரர் தலை மறைக்கிறது. ஆனால் காற்று நன்றாக வருகிறது. சரி, 40 ரூபாய்க்கு புஷ்பேக் சீட்டா கிடைக்கும் என்று சமாதானம் செய்து கொண்டேன்.
சரி படத்திற்கு வருவோம். படம் 35 mm மில் ஆரம்பித்த போது பயந்து விட்டேன், சரிதான் சின்ன பட்ஜெட் படம் என்று 35 mm மில் எடுத்து விட்டார்களா. ஆனால் கொஞ்ச நேரத்தில் ஆய் போகும் பசங்கள் பெரியவர்கள் ஆகும் போது விரியும் ஸ்க்ரீன் அழகு.
ஹீரோவும், ஹீரோயினும் கண்களால் பேசிக் கொள்வதை ரசிக்கலாம். ஒரு சில விமர்சனங்களில், இதை கிண்டல் செய்கிறார்கள். இதுதானே இயல்பு, இப்படித்தானே எங்கள் கிராமத்தில் இப்போதும் இளசுகள் பேசிக் கொள்கின்றன. அது போல் ஹீரோயின் கிராமத்து பெண்ணாயிருப்பினும் வாயாடிக்க வில்லையாம். யார் சொன்னது, எல்லா கிராமத்து பெண்களும் வாயாடிகள் என்று? பாதி கிராமத்து பெண்கள் அடக்கமான, அமைதியானவர்களே, நிறைய வெட்க படுபவர்களே. வேண்டுமானால் எங்கள் கிராமத்திற்கு வந்து பாருங்கள். மேலும் இந்த படத்தில் ஹீரோயின் மதுரை, டவுன் பெண்ணல்லவா.
கபடி ஆட்டத்தை இன்னும் பிரமாதமாய் காட்டியிருக்கலாம். ஒரே பாட்டில் சாதா அணி, சூப்பர் டீம் ஆவது சினிமாவில் மட்டுமே நடக்கும். ஹீரோ இயல்பாய் நடித்து இருக்கிறார். காமெடி நன்றாக இருக்கிறது. யதர்த்தமான கதை, திரைக்கதை. மக்களை குடும்பத்துடன் திரை அரங்கிற்கு அழைத்து வந்திருப்பது இயக்குனரின் வெற்றி.
திருவிழா கொண்டாட்டங்கள் அழகு. ஜாதி பற்றிய வசனங்கள் கைதட்டலை அள்ளுகின்றன. இசை, பரவாயில்லை.
படத்தின் ஊடே வரும் விரசமில்லா காமெடியை வாய் விட்டு சிரித்து ரசிக்கலாம். எல்லோரும் சொல்வது போல் பரோட்டா காமெடிதான் சூப்பர் என்றாலும், மேலும் நிறைய உள்ளன. ஸ்லோ சைக்கிள் ரேசில் படு வேகமாய் ஓட்டும் சீன், உரியடிக்கும் சீனில் மாமியார் மண்டையை உடைப்பது, படாத இடத்தில் பட்டுடப் போகுது என்று மனைவி சொல்லும் இடம், கபடி வீரரின் உறவு முறையை சொல்லும் மதுரைக் காரர் என அமர்க்களப் படுத்தியுள்ளனர்.
கபடி கோச் ஆக வருபவர் அசத்தி இருக்கிறார், "என்னடே சொல்லுதே, நீ ஆடுறியா" என்ற மொழி பிரயோகமும், உடல் அசைவுக்களுமாய் இயல்பாய் நடித்து இருக்கிறார்.
நடுவில் பக்கத்து ஊர் காரர்கள், பழைய பகையை தீர்க்க தண்ணி அடித்து கொண்டு சலம்பி கொண்டிருப்பதை அடிக்கடி காட்டும் போதே தெரிந்து விடுகிறது, அவர்கள் அடிக்க போவதில்லை என்று, இந்த சீன்களை வெட்டி இருக்கலாம்.
வழக்கமாய் துடுக்கு பெண்ணாய் வரும் சரண்யா, இதில் அடக்கமாய் வருவது வித்தியாசமாய், ரசிக்கும் படியாய் இருக்கிறது, well done madam!
கடைசியில் ஹீரோ ஏன் சாகிறார் என்று யாரும் தலையை பிய்த்து கொள்ள வேண்டாம், ஏதோ டைரக்டர் ஆசை பட்டு விட்டார், விட்டு விடுங்கள்.
வெண்ணிலா கபடி குழு - நின்று விளையாடி இருக்கிறது!!!
Tuesday, August 26, 2008
இரு மனங்கள் இணையும் திருமணம்
எப்போதாவது ஓரிரு மணித்துளிகள்
சந்தித்து, அவசர அவசரமாய்
நிறைய பேசி, சிரித்து, விளையாடி
சண்டை போட்டு, சமாதானமாகி
சாப்பிட்டு விட்டு பிரியும்
நிலை மாறி
இன்று சற்றேற்குறைய
ஒரு நாளின் இருபத்து நான்கு
மணி நேரமும்
இருவரும் இணைந்தே இருக்கிறோம்!
கணவன் மனைவியாய் இணைந்து
ஆரம்பித்துள்ள இல்வாழ்க்கை
இனிமையாய் தொடர
குறைகளை தவிர்த்து, திருத்தி
நிறைகளை நிரப்பி
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து
மகிழ்ச்சியாய் வாழ
இறைவனை பிரார்திப்போம்!!
Saturday, February 16, 2008
நீ சிரிக்கும் போதெல்லாம் கவிதைகள்!!
நீ சிரிக்கும் போதெல்லாம்
மணிகள் கலகலவென
உருண்டோடும்
சத்தம் கேட்கிறேனே,
என் காதிலே ஏதும் கோளாறா??
<<>>
கண்கள் சுழற்றும்
நள்ளிரவு
பனி பொழியும்
அதிகாலை
சுட்டெரிக்கும் வெயிலில்
மதியம்
கடற்காற்று வீசும்
மாலை
என
பொழுதுகள் புலர்ந்து
பொழுதுகள் மறைகின்றன..
பேசிக் கொண்டேயிருக்கிறோம்
மின்னஞ்சலில்..
மின் அரட்டையில்..
செல்பேசியில்..
நேரில்..
பேசப் பேச
விஷயங்களுக்கு குறைவில்லை..
கிண்டல்,
கேலி,
மகிழ்ச்சி,
சோகம்,
அதிர்ச்சி,
நிம்மதி
என உரையாடல்கள்
மாறுகின்றன..
உணர்வுகள் மாறுகின்றன..
அன்பும், பாசமும், அக்கறையும்
எள்ளளவும் குறையவில்லை
அந்நாளிலில் இருந்து
இந்நாள் வரைக்கும்..
என்றாவது ஒருநாள்
நம் உரையாடல்கள் நின்றால்
அந்நாளில்
என் உயிரோ அல்லது உன் உயிரோ
பிரிந்திருக்கும்!!!
சொர்க்கத்திலோ, நரகத்திலோ
மீண்டும் சந்தித்துக் கொண்டால்
தொடர்வோம் நம் உரையாடலை!!
<<>>
பனி பொழியும்
அதிகாலையில்
என் அறைக்கு
முன்புள்ள சிறியதொரு
தோட்டத்தில்
மலரும் வெளிர்மஞ்சள்
பூக்கள்
உன் முகத்தை
நினைவு படுத்துகின்றன..
பார்க்கும் போதெல்லாம்
உன்னை நினைத்து
சிரிக்கின்றேன்..
என்றாவது ஒருநாள்
பூக்கள் மலராத தருணத்தில்
சோகம் தழுவுகிறது
உன்னை காணாதது போல்..
பூத்துக் குலுங்கும் மலர்களாய்
நாமிருவரும் அருகருகே
வாழும் தருணம்
வாய்ப்பது எப்போது??
Monday, January 28, 2008
Nokia 5300வுக்காக நான் பட்ட பாடு!
இந்தக் காலத்து பொண்ணுங்க எல்லாம் nokia N 95,75 series , sony ericsson W,Zseries னு எங்கிலீஷ்ல இருக்கிற அனைத்து எழுத்திலும் எதாவது ஒரு மொபைல் வச்சு இருக்காங்க... அப்படி இருக்கும் போது நம்ம லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைலை(????)ப் பார்த்து பையன் ரொம்ப ஓல்ட் டைப் னு நெனச்சு ரிஜெக்ட் பன்னிட்டா என்ன பன்றதுங்கிற பயத்துலத்தான்..
ஒரு மொபைல் வாங்கினதுக்கு ஒரு blogஆன்னு நீங்க யோசிக்கிறது எனக்கு புரிகிறது..... அதுக்கு ஒரு பெரிய காரணம் இருக்குங்க... அதை நீங்க கடைசீல தெரிஞ்சுப்பீங்க
சரி புது மொபைல் வாங்களாம்னு தீர்மானிச்சாச்சு.. ஆன என்ன வாங்கறது,,,
இதை யோசிக்க ஒரு 2 மாசம்.. இன்டெர்னெட், இ-மெயில், நண்பர்கள் என எல்லா வகையிலும் விசாரித்ததில் ரேடியோ, காமரா, இன்டெர்னெட் கனெக்ட் பன்ன டேட்டா கேபில், ப்லூடூத் போன்ற accessories (இதற்கு நிகரான தமிழ் சொல் என்னப்பா?) உள்ள மொபைல் தான் பெஸ்ட் என முடிவு செய்தேன். அதுவும் ஹேண்ட் செட்டுடன் இவை அனத்தும் வந்தால் இன்னும் வசதி. தனி தனியாக செலவு செய்யத் தேவையில்லை. அப்படி ஒரு மொபைலுக்காக வலை வீசினேன்.
ஹேண்ட் செட்டுடன் டேட்டா கேபில் வந்தால், மெமரி கார்ட் வருவதில்லை, மெமரி கார்ட் வந்தால், அது இன்டர்னல் RAM ஆக உள்ளது, extended மெமரி வருவதில்லை. ஆக இருந்த 2 3 ஆப்ஷன்களில் மளிவான (இருப்படிலேயே) விலையில் வருவது நோக்கியா 5300 (அப்பாடா பாடி தலைப்பு வந்து விட்டது) தான் என்று 1000 முறை கன்ஃபார்ம் செய்து கொண்டேன். 5300 ஹேண்ட் செட்டில் 128MB RAM, 1.5MP காமரா, FM ரேடியோ, இலவசமாக டேட்டா கேபில், இயர் ஃபோன், மியூசிச் சிஸ்டத்துடன் இனைக்கும் வசதி என நான் நினைத்த மாதிரியே இருந்தது. சரி நம்ம அடுத்த வேலை மொபைல் வாங்க வேண்டியது தான். ஆனால் எங்கு வாங்குவது?
அதான் TVயில் மணிக்கு ஒரு தடவை "மொபைலா மொபைலா" என பாட்டுப் பாடிக் கொண்டே மாதவன் வந்து univercell தான் பெஸ்ட் மொபைல் பாலஸ் னு சொல்றாரேன்னு அங்கு வாங்குவது என தீர்மானித்தேன்.(நான் பக்கா மாதவன் விசிறியாக்கும்)
நல்ல நேரம், ராகு காலம், எம கண்டம் எல்லாம் பார்த்து (சத்தியமா பார்த்தேங்க) ஒரு ஞாயிற்றுக்கிழமை அடயார் univercell சென்றேன்.
அங்கு சென்ற எனக்கு தூக்கி வாறிப் போட்டது. ஏதொ சென்னை சில்க்ஸோ சரவணா ஸ்டோர்ஸுக்குள்ளோ நுழைந்தது போல் இருந்தது.அவ்வளவு கூட்டம். காலம் ரொம்ப கெட்டுப் போச்சுடாவென்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, நோக்கியா பிரிவை ( motorola, nokia, samsung, sony என்று ஒவ்வொரு brandக்கும் ஒரு தனி பிரிவு) நோக்கிச் சென்றேன்.
ஒரு வழியாய் நோக்கியா கவுண்டரை அடைந்து, விசாரித்ததில் 5300 ஸ்டாக் இல்லை என தெரிய வந்தது. எப்ப வரும் என்று விசாரித்து விட்டு வந்து விட்டேன். ஆனாலும் மனசு கேட்கவில்லை. அதனால் பக்கத்தில்(அடயார், திருவான்மியூர், வேலச்சேரி, மைலாப்பூர்) இருந்த வேறு சில மொபைல் ஷோரூம்களும் விசாரித்ததில் தெரிய வந்த விஷயம் எனக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. 5300 மாடலை நோக்கியா தயாரிப்பதை நிறுத்துவிட்டதாம். இதை கேட்ட எனக்கு 2 நாட்கள் தூக்கம் வரவில்லை. (இதற்கு காரணம் பில்லா படத்தில் வந்த நயந்தாரா சத்தியமா இல்லீங்க) ..
சரி புது மொபைல் வாங்கும் எண்ணத்தை விட்டுவிடலாமா இன்ற யோசித்த பொழுது தான் நண்பர் ஒருவர் motorolaவில் வேலை செய்வது நினைவுக்கு வந்தது. அவர் மூலமாக மோட்டோரேஸர் வாங்குவது என மனசை தெற்றிக்கொண்டேன்.
ஆனாலும் மனசு ஆறவில்லை. அந்த ஒரு வாரம் முழுக்க எங்கு சென்றாலும் எல்லா மொபைல் ஷோரும்களிலும் நுழைத்து 5300 இருக்கிறதா என்று கேட்டு விடுவேன்.
5300 விடும் ஒரு காதலே உருவாகிவிட்ட நிலையில் எங்கும் தோல்வியே எனக்கு மிஞ்சியது. என் மனசோ “அப்படி என்னடா இருக்கிறது அதில் விட்டுத்தான் தொலையேன்” என்றது. ஆனாலும் ஒரு சின்ன நப்பாசை. எங்காவது ஒரு பழைய ஸ்டாக் உள்ள கடையில் கிடைத்துவிடாதா என்று....
அப்படித்தான் ஒரு நாள் நங்கநல்லூருக்கு வேறொரு விஷயமாக சென்று இருந்தேன். அங்கு ஒரு முட்டு சந்து கடையில் நம்பிக்கையே இல்லாமல் 5300 இருக்கிறதா என்று கேட்டேன். அவன் இருப்பதாய் சொன்னவுடன் என்னால் என் காதுகளையே நம்ப முடியாமல் 2 முறை மறுபடியும் கேட்டேன். என்னை செவிடன் என்று கண்டிப்பாய் நினைத்து இருப்பான். அவன் என்ன நினைத்தால் எனக்கென்ன.. எனக்கு தேவை 5300. சரி எவ்வளவு என்று விசாரித்தேன். நான் மற்ற இடங்களில் விசாரித்ததை விட 500 ருபாய் கம்மி. அட! என நினைத்துக் கொண்டு( மனசுக்குள் செகண்ட் ஹேண்டைத் தள்ளி விட்டுடுவானோ என்ற பயம் இருந்தாலும்.. ஸீல்ட் பாக்கட்டில் மொபைலைப் பார்த்ததும் நிம்மதியாய் இருந்தது.) எதாவது discount இருக்கா ஸார் என்றேன் (மனசாட்சி: கொஞ்சம் ஓவரா இல்லை. 5300 கிடைத்ததே பெரிய விஷயம்.இதில் discount ஒரு கேடா உனக்கு). ஆனால் எனக்கு கிடைத்தோ மற்றொரு இன்ப அதிர்ச்சி.
ஷோரூம் ஓனர் : ஸார், discount எதுவும் இல்லை. ஆனால் ஒரு சின்ன ஆஃபர் இருக்கு. அதாவது மொபைலின் மொத்த விலையில் 7% அதிகம் கட்டினால் , 2000 ரூபாய் மதிப்புள்ள் bluetooth இலவசம்.
உடனே மனதிற்குள் கணக்கைப் போட்டேன். 7000 ரூபாயில் (அட..சொல்லவே இல்லைல.அதான் 5300வின் விலை) 7% என்றால் 490 ரூபாய். சரி நமக்கு லாபம் தான் என்று நினைத்துக் கொண்டு...
ஒரு வழியாக 5300வை வாங்கி வீட்டிற்கு வந்ததும் சுகமாய் ஒரு தூக்கம் வந்தது பாருங்க..
என்னுள் ஏதோ பெரிய award வாங்கினது போல் பெருமை.
இருக்காதா பின்ன.. நினைத்தை பெரும் பாடு பட்டு முடித்துவிட்டேன்ல.
(ஹப்பா டா முழு தலைப்பும் வந்து விட்டது.)
Friday, December 14, 2007
நிசப்தமாய் இருக்கிறது என் கவிதைகள்!!
காற்று
வெயில்
குளிர்
பனி
மழை
என எதுவுமே
இல்லாமல்
நிசப்தமாய்
இருக்கிறது
நீ அருகில் இல்லா
வெறுமை
உணர்த்தும் புரிதல்கள்!!
<<>>
உன்
கண்ணில் இருந்து
வெளிவரும்
ஒவ்வொரு கண்ணீர்துளியும்
கீழே விழுமுன்
தாங்குவேன்
என் நெஞ்சில்;
கவலைகளை
கண்ணீராய் வெளியேற்று
என் கண்மணியே!!
<<>>
காத்திருப்பது
மட்டும் சுகமல்ல
காதலில்;
இன்ப துன்பங்களை
பகிர்ந்து கொள்வதிலும்
இருக்கிறது
உளமார்ந்த காதல்!!
<<>>
ஒவ்வொரு நொடியும்
மெதுவாய்த்தான்
நகர்கிறது,
இருந்தாலும் ரசிக்கிறேன்
உன்னை தரிசிக்கும்
கணம் நெருங்குவதால்!!
Saturday, September 08, 2007
புனேவிலிருந்து விடைபெறுகிறேன்...
புனே மிகவும் அருமையான, அமைதியான ஊர். மலைகளுக்கு நடுவில் அற்புதமான க்ளைமேட்டுடன் கூடிய ஊர். போக்குவரத்து, சாலை வசதிகள் மட்டும் கொஞ்சம் குறைவு புனேயில். மற்றபடி அருமையான ஊர். இவ்வுளவு அருமையான ஊரை விட்டு வருவதும், நல்ல அலுவலகத்தை விட்டு வருவதும் சிறு வருத்தத்தை அளித்தாலும், தாய் தமிழ்நாட்டு மண்ணை மீண்டும் தழுவச் செல்வது அவ்வருத்தத்தை மறையச் செய்கிறது.
புனேயில் வசித்து வரும் அனைத்து தமிழ் வலைப்பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி & வாழ்த்துக்கள்!!
மீண்டும் உங்கள் அனைவரையும் சென்னையில் சந்திக்க விரும்புகிறேன், நன்றி & வணக்கம்!!
Wednesday, September 05, 2007
நம்ம ஊர் திருச்சி - பாகம் 3
திருச்சியைப் பற்றிய கடந்த பதிவுகள்
திருச்சி 1
திருச்சி 2
தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே, திருச்சியிலும் வெயில் அதிகம். வேண்டுமானால் பகலில் வெளியில் அதிகம் சுற்றாமல், சமாளித்துக் கொள்ளலாம்.
சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மெயின் கார்டு கேட், தெப்பக்குளம், என்.எஸ்.பி ரோடுகளில் நிறைய தரமான உணவுக் கூடங்கள் (ஹோட்டல்கள்) உள்ளன.ரகுநாத், ஆர்ய பவன், வஸந்த பவன், கேரளா மெஸ், பனானா லீப் போன்றவை குறிப்பிடத் தக்கவை.
பிரபல ஆபரணம் மற்றும் துணிக்கடைகள்
சாரதாஸ்
தைலாஸ்
ஆனந்தாஸ்
சென்னை சில்க்ஸ்
கல்யாணி கவரிங்
லஷ்மி ஜுவல்லர்ஸ்
தம்பு (செருப்புகள், பெல்ட்டுகள்)
இப்போது இன்னும் நிறைய கடைகள் வந்து விட்டன. என்.எஸ்.பி ரோடு சென்றால், தரமான துணிகளை நியாயமான விலைக்கு வாங்க வாய்ப்புகள்
நிறைய உள்ளன. அப்புறம் இப்ப திருச்சிக்கு சென்னை சில்க்ஸ் வந்துருச்சு, அதுவும் சாரதாஸ விடாத மக்கள் கூட நகரும் படிக்கட்டு(Esclater) பார்க்குற ஆசையில் துணிய அள்ளிட்டு போறாங்க.
திருச்சியின் நடுவே ஓடும் இரு பெரும் ஆறுகள் காவிரி மற்றும் கொள்ளிடம். மிகப் பிரமாண்டமான ஆறுகள், முழு வேகத்துடன் ஓடுவதை
கல்லணை மற்றும் முக்கொம்பில் ரசிக்கலாம். போன வருடம் பெய்த மழையின் போது இரு ஆறுகளும் நிரம்பி ஓடின என நண்பர்கள் தெரிவித்தனர். வெள்ளமேற்பட்டால் சமாளிப்பது சற்று கடினமே. ஆனால் வருடத்தில் பல நாட்கள் காவிரி, கொள்ளிடம் தண்ணீரே இல்லாமல் இருக்கும்.
பனானா லீப் ஹோட்டல் பற்றிக் கூறும்போது நண்பர் அருண்.சி 'Banana leaf do serve non-veg. Infact i go there only for non-veg. " என்று அந்த ஹோட்டல் அசைவ உணவு வகைகளையும் அருமையாக படைப்பதை நினைவு கூறுகிறார். இந்த ஹோட்டல் ஹோலிகிராஸ் காலேஜ் அருகே மெயின்கார்டு கேட் (பெரிய மலைக்கோட்டை கதவு) எதிரில் உள்ளது.
திருச்சி வெயிலைப் பற்றி நண்பி மலர் கூறும்போது "Trichy veyilum oru sorkkam than ...athu 0 degree kulirla vaduravangalukku than theriyum !!!" என்று பரவசப்படுகிறார். மலர் தற்போது ஜப்பானில் இருக்கிறார். 0 டிகிரியில் இருக்கும்போது, வெயிலின் அருமை புரியுமல்லாவா !
மாம்பழச்சாலை என்ற இடத்தில், உலகின் அனைத்து விதமான மாம்பழங்களும் சீசனின் போது கிடைக்கும். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிடத்தில் பேருந்தில் (லால்குடி, சமயபுரம், மண்ணச்ச நல்லூர்) சென்று விடலாம். திருச்சியில் கிடைக்கும் சிறப்பான உணவு வகைகளைப் பற்றி வலைப்பதிவர், நண்பர் தேசிகன் "ரமா கபே, ரமணா பேக்கரி, மாம்பழச்சாலை மாம்பழம், காந்தி மார்கேட், வசந்த பவன் பரோட்டா, பாலக்கரை பிரமனந்தா சர்பத் கடை, பிமநகர் மோர்கடை... என்று அடுக்கிக்கொண்டே போகலாம்" என்று நினைவூட்டுகிறார்.
திருச்சியிலுள்ள பிரபலமான கலைக் கல்லூரிகள் சிலவற்றுக்கு பட்டப் பெயர்கள் உண்டு. ஜெயில் - ஜோசப், பியூட்டி - பிஷப், ஜாலி - ஜெமால் என்று கல்லூரிகளுக்கு நிக் நேம் உண்டு என்றும் தேசிகன் சிலாகிக்கிறார். வேறு கல்லூரிகளின்/கல்விக் கூடங்களின் பட்டப் பெயர்கள் தெரிந்தால்,
நண்பர்கள் கூறலாம்.
திருச்சியை பொறுத்த வரை கல்லூரி மாணவர்கள் இரண்டு ஏரியா பஸ்களைப் பார்த்தாலே பரவசப் படுவார்கள். அவை பெல் (BHEL) மற்றும் கே.கே நகர் பஸ்களே. ஏனென்றால் இந்த ஏரியாக்களில்தான் பிகர்கள் அதிகம் (தற்போது எப்படியென்று ட்ரெண்ட் தெரியவில்லை). தனியார் பஸ்கள் நிறைய உண்டு. டிஎஸ்டி, எம்ஆர்ஜி போன்று நிறைய பஸ் நிறுவனங்கள் உள்ளன. பஸ்கள் எல்லாம் புதிதாக, டேப் ரிகார்டர், எப்.ம் என்று கலக்கலாக இருக்கும். உறையூர், தில்லை நகர், பாலக்கரை, ஸ்ரீரங்கம் போன்ற ஏரியாக்களுக்கு நிறைய பஸ்கள் உண்டு. எல்லா ஏரியாக்களுக்கும்
போதுமான பஸ்கள், தொடர்ந்து உள்ளன.
மாலை நேரங்களில், சத்திரம் பேருந்து நிலையத்திலும், என்.எஸ்.பி ரோட்டிலும் கூட்டம் அலைமோதும். ஏகப்பட்டு பிளாட்பார கடைகள் பாப்கார்ன் முதல் பாப் பாடல்கள் சிடி வரை விற்பார்கள். தெப்பக்குளத்தில் இப்போது போட் விட்டிருக்கிறார்கள். இளைஞர்கள் அவரவர்கள் ரேஞ்சுக்கு
டைட்டானிக் ஹீரோ போல் கற்பனையில், போட்டில் மிதக்கிறார்கள். சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் திருச்சியில் மிகப்பிரபலம். இவர்கள் வைத்திருக்கும் கேண்டீனில் இனிப்புப் போளி (தமிழ்மணம் போலி இல்லீங்கோவ், தின்பண்டம்), ஜாங்கிரி, சமோசா போன்றவைகள் ருசியாக
கிடைக்கும்.
மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடை இப்போது திருச்சியில் நிறைய கிளைகளை திறந்துள்ளனர். ஆனால் ஐஸ்கிரிமின் தரம் தற்போது குறைந்து விட்டது என நண்பர்கள் பலரும் வருத்தப்படுகின்றனர்.
RTC Lodge ஹோட்டல் ரவா, வெங்காய ஊத்தப்பம், காபி, கந்தக பூமியின் காட்டமான வெய்யில், Golden Rock Loco shed, 80வயதான ஸ்டேட் பாங்க் ஆலமரம், 117 Infantry Battallion, அமெரிக்கன் ஆஸ்பத்திரி, பாலக்கரை ஆறுமுகம் ஹோட்டல் பரோட்டா, டவுன் ஸ்டேஷன் அய்யர்கடை இட்லி கடப்பா, ஸ்ரீரங்கம் அம்மாமண்டப படித்துறை, வருடமொருமுறை ஸ்ரீரங்கநாதர் வந்துபோகும் நாச்சியார் கோவில், திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில்,BHEL என்று திருச்சியைப் பற்றி எழுத நிறைய விஷயங்கள் உள்ளன. ஸ்ரீரங்கத்திலிருந்து ரங்கநாதர் பல்லக்கில் வருடமொருமுறை நாச்சியாரைப் பார்க்க உறையூர் நாச்சியார் கோவிலுக்கு வந்து போவார்.
திருச்சியை பற்றிய விபரங்களை ஓரளவுக்கு தொகுத்திருக்கிறேன். மேற்சொன்ன விபரங்களில் விடுபட்டவை, மாற்ற வேண்டியவற்றை நண்பர்களே, பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். மீண்டும் சந்திப்போம் !
புகைப்படங்கள், இணையத்தில் தேடி எடுக்கப் பட்டன. வல்பென், சுலேகா மற்றும் வேறு சில ஆதாரத் தளங்களுக்கு நன்றி!
Wednesday, August 29, 2007
தமிழ் வலைப்பதிவுகளில் முதன்முறையாய்...
எனக்கு ராஜேஷ்குமார், சுபா ஸ்டைலில் ஒரு க்ரைம் திரில்லர் எழுத ரொம்ப நாட்களாய் ஆசை. சரிதான் முயற்சிப்போமே என்று சென்ற வருடம் தேன்கூடு போட்டிகளின் போது ஒரு கதையை எழுத ஆரம்பித்தேன். அந்த கதையில் முதல் மூன்று பகுதிகளை கீழே கொடுத்திருக்கின்றேன்.
கதையை முதலில் படியுங்கள். பிறகு கதை எப்படி தொடர்ந்து சென்று முடிந்திருக்கும் என்பதை பின்னூட்டத்தில் 3-4 வரிகளில் எழுதுங்கள். நேரமும், ஆர்வமும் இருந்தால் கதையின் தொடர்ச்சியை தனிப் பதிவாகவும் இட்டு, இங்கே லிங்க் கொடுத்து விடுங்கள்.
Come on, let's interact !!!!
<<<>>>
{{விளையாடாமல் வேட்டையாடு}} - க்ரைம் சிறுகதை
Part - 1
நவிமும்பை வாஷி ட்ரெயின் ஸ்டேசன் அந்த அதிகாலை வேளையிலும் பரபரப்பாய் இருந்தது. கருஞ்சிவப்பு நிறத்தில் வழிந்திருந்த ரத்தம் தண்டவாளத்தை ஒட்டி உறைந்திருந்தது. இரண்டு அடி இடைவெளியில், விழுந்திருந்த இளம்பெண்ணின் சுடிதாரில் ரத்தம் திட்டு திட்டாய் இருந்தது. கம்யூட்டர் டெஸ்க்டாப் ஐகான்கள் போல் மக்கள் சிதறி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
வாக்கிங் வந்திருந்த பெரியவர் தற்காலிமாக ஆஸ்த்மாவை மறந்து விட்டு "காலம் ரொம்ப கெட்டுக் கிடக்கு.. யாராவது போலிசுக்கு சொல்லுங்கப்பா" என்றார். கூடியிருந்தவர்களில் சிலர் அவசரமாக விலகினர். கேர்ள் ப்ரண்டுக்காக காத்துக் கொண்டிருந்த ஜீன்ஸ் இளைஞன் செல்போனில் "கமான்யா, சீக்கிரம் வாப்பா, பொணமெல்லாம் ஸ்டேசன்ல கிடக்கு, எப்ப ட்ரெயின் எடுக்கப்போறான்னே தெரியல, இன்னிக்கு 'சக்தே இண்டியா' படம் பாத்தாப்பலதான்" என்று அலுத்துக் கொண்டிருந்த நொடிகளில் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்கள் புடை சூழ வந்தார்.
"போட்டாகிராபர், பாரன்சிக் ஆளுங்க, டாக் ஸ்குவாட் எல்லாரையும் வரச் சொல்லுய்யா.. காலங்காத்தாலயே பொணத்து முகத்துல முழிக்க வேண்டியதா இருக்கு....பேசாம கம்ப்யூட்டர் படிச்சிட்டு, சாப்ட்வேர் கம்பெனில ப்ளாக் எழுதிகிட்டு இருந்திருக்கலாம்.." என்ற இன்ஸ்பெக்டர் குனிந்து கர்சீப்பால் கையை சுற்றிக்கொண்டு ஹேண்ட்பேகை எடுத்தார். வேலை பார்த்த கம்பெனியின் அடையாள அட்டை, கிரெடிட், டெபிட் கார்டுகள், ஸ்டிக்கர் பொட்டுகள், இத்யாதி, இத்யாதி...
கம்பெனி அடையாள அட்டையில் பெயர் பார்த்தார் "வந்தனா ராஜசேகர், Emp Id: 78292"
<<<>>>
Part - 2
பிரகாஷ் லேட்டஸ்ட் ஹிட் பாலிவுட் நடிகையுடன் "கஜுராரே, கஜூராரே..." என்று டூயட் பாடிக்கொண்டிருந்த போது எங்கோ தொலைவில் செல்போன் ரிங்கியது. போர்வையை விலக்கி செல்போனை காதில் வைத்தான். "ஹாய் பிரகாஷ், என்னடா இன்னுமா தூங்கிகிட்டு இருக்க? எந்திருச்சி, ஜிம்முக்கு போடா ராஸ்கல், 10 கிலோ எடையை குறைச்சாதான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்.." என்று வந்தனாவின் குரல் தேனாய் வழிந்தது.
"இதோ எந்திருச்சுட்டேன், எங்க இருக்க இப்ப?" என்றான் பிரகாஷ்.
"வாஷி ஸ்டேசன்ல வெய்ட் பண்ணிகிட்ருக்கேன், 5:12 தானே ட்ரெயின் இன்னும் வரலே.." - வந்தனா
"சரி, கரெக்டா ஆபிஸ் போய்சேரு.. நான் ஜிம்முக்கு கிளம்பறேன்.... வச்சிரட்டுமா..ஒரே ஒரு முத்தம் கொடேன்..." - பிரகாஷ்.
வந்தானாவின் வெட்கப்படும் "போடா, திருட்டு ராஸ்கல்" உடன் கால் கட்டானது.
<<<>>>
Part - 3
ஆறுமுகம் காபி குடித்துக் கொண்டே மும்பை தமிழ் டைம்ஸை பார்வையால் மேய்ந்தார். செல்போன் வைப்ரேஷனில் அதிர்ந்தது. நம்பர் பார்த்தார். புதிதாக இருந்தது. ஏற்கனவே நம்பர் செல்போனில் இருந்தால் பெயர் வருமே என யோசித்துக் கொண்டே எடுத்தார்.
"சார்...வி1 தான் பேசறேன்...வெல்டிங் பண்ணியாச்சு.. இப்ப பன்வேல்ல இருக்கேன்.. ஹைதராபாத் பஸ்லதான் உக்காந்துருக்கேன்...." என்று எதிர்முனையில் குரல் கரகரத்தது.
"...ஏய்.. உன்னை போன் பண்ண வேண்டாம்னு சொன்னேன்ல..." என்றார் ஆறுமுகம். வியர்த்த நெற்றியை தோள் துண்டால் துடைத்தார்.
"இல்ல சார்... நேத்து நைட் வாஷி ஸ்டேசன்ல ஏர்டெல்காரன் ஏதோ விளம்பர ஸ்டால் வச்சி, ஃப்ரியா சிம்கார்டு கொடுத்துகிட்டு இருந்தான்..இதுல 10 ரூவாய்க்கு டாக்டைம் இருக்குன்னான்.. அதான் அந்த நம்பர இப்ப போட்டு உங்கிள்ட பேசிகிட்டு இருக்கேன்.. பேசி முடிச்சவுடனே தூக்கி போட்டுடறேன்"
"சரி சரி.. காலை கட் பண்ணு, ஹைதராபாத் போய்ட்டு 2-3 நாள் கழிச்சி எஸ்டிடீ பூத்ல இருந்து எனக்கு போன் பண்ணு.." என்று கட் செய்தார் ஆறுமுகம்.
<<<>>>
இவ்வுளவுதாங்க.... இப்ப நீங்க அசத்த ஆரம்பிங்க :-)))
என் கேள்விகளுக்கு என்ன பதில்?
2. சச்சின் டெண்டுல்கர் மொத்தம் எத்தனை டெஸ்ட் சதங்கள் இதுவரை எடுத்துள்ளார்?
3. ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதியாக பதவி வகித்த காலம் எந்த வருடத்திலிருந்து எந்த வருடம் வரை?
4. டைரக்டர் 'ஷங்கர்' இதுவரை எத்தனை படங்களை இயக்கியுள்ளார்?
5. இந்தியா ஒலிம்பிக் ஹாக்கியில் கடைசியாக தங்கம் வாங்கிய வருடம் எது?
6. இந்தியாவில் எந்த மாநிலம் சமீபத்தில், கடைசியாக உருவாக்கப் பட்டது? எந்த வருடம்?
Thursday, August 23, 2007
திருச்சிராப்பள்ளி
திருச்சி 1
திருச்சி 2
திருச்சி நினைவுகள் தொடர்ந்து சுழலும்...
Wednesday, August 22, 2007
திருச்சி - 2
மலைக்கோட்டை மாநகரான திருச்சிராப்பள்ளியைப் பற்றி சென்ற பதிவில் (திருச்சி - 1) பார்த்தோமல்லவா ! மேலும் நிறைய விவரங்களுடன் பல நண்பர்கள் பின்னூட்டமிட்டிருந்தனர். அந்த விவரங்களுடன் மீண்டும் ஒரு முறை திருச்சியைச் சுற்றிப் பார்க்கலாம், வாருங்கள் !
திருச்சியில் இரண்டு பெரிய பேருந்து நிலையங்கள் உள்ளன. சத்திரம் பேருந்து நிலையம் (மெயின் கார்டு கேட்) மற்றும் மத்தியப் பேருந்து நிலையம் (ஜங்சன்). ம.பே.நிலையத்திற்கு அருகே ரயில் நிலையம் உள்ளது. ம.பே.நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் செம்பட்டு விமான நிலையம் உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களுக்கு பஸ்/டிரெயின் வசதி உள்ளது. சென்னை, மதுரைக்கு விமான வசதிகளும் உள்ளன. இரண்டு பேருந்து நிலையத்திற்கு அருகிலும் நிறைய, நல்ல ஹோட்டல்கள் உள்ளன.
நாகநாதர் டீ ஸ்டால் என்று திருச்சியில் நிறைய டீக்கடைகளைப் பார்க்கலாம். டீ, காபி தவிர வாழைக்காய் பஜ்ஜி சட்னியோடு கொடுப்பார்கள் மாலை நேரங்களில். அவ்வுளவு சுவையாய் இருக்கும். தெப்பக்குளம் பகுதியில், நிறைய ரோட்டோர நூடுல்ஸ் கடைகளைப் பார்க்கலாம். எக் நூடுல்ஸ், வெஜ் நூடுல்ஸ், சிக்கன் நூடுல்ஸ் என்று மக்கள் பிரித்து மேய்வார்கள் (அப்படின்னா, நல்லா சாப்பிடுவாங்கன்னு அர்த்தம்).
திருச்சியில் நிறைய ட்யூசன் செண்டர்கள் உண்டு. பத்தாவது, பன்னிரண்டாவது மாணவர்களுக்கென, மேக்ஸ் செல்வராஜ், பிசிக்ஸ் ஆர்.சி, கெமிஸ்டரி ராஜா, பயாலஜி சுந்தர் என்று ஏரியா, ஏரியாவாக நிறைய பிரபலமான ஆசிரியர்கள் திருச்சியைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள் (கொண்டிருக்கிறார்கள்).
திருச்சியிலுள்ள முக்கியமான சுற்றுலாத் தளங்கள்
மலைக்கோட்டை, முக்கொம்பு, கல்லணை
முக்கியமான கோயில்கள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவானைக்கோவில் சிவபெருமான், சமயபுரம் மாரியம்மன், குணசீலம் சிவபெருமான், மலைக்கோட்டை தாயுமானவர் & உச்சிப் பிள்ளையார், வயலூர் முருகன்.
முக்கியமான கல்விக்கூடங்கள்
என்.ஐ.டி (NIT, பழைய பெயர் REC)
கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி
பாரதிதாசன் பல்கலைக் கழகம்
இதைத் தவிர வேறு பல பிரபலமான கலைக் கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும், கணிணி கல்விக்கூடங்களும் உள்ளன.
திருச்சியில் பிறந்த / படித்த முக்கிய பிரபலங்கள்
முதல் குடிமகன் அப்துல் கலாம் (நான் படித்த ஜோசப் கல்லூரியில் படித்தவர்)
தமிழ் தொண்டாற்றிய கி.ஆ.பெ. விசுவநாதம் (திருச்சியில் பிறந்து, வளர்ந்து, வசித்தவர்)
எழுத்தாளர் சுஜாதா (ஜோசப் கல்லூரி)
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் (நேஷனல் கல்லூரி)
நடிகர் நெப்போலியன் (ஜோசப் கல்லூரி)
நடிகர் பைவ் ஸ்டார் பிரசன்னா (சாரநாதன் கல்லூரி)
சர்.சி.வி. ராமன் (உறுதியாக தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்)
*****
திருச்சி நினைவுகள் தொடர்ந்து சுழலும் :-)
Tuesday, August 21, 2007
சென்னையின் ப்ளஸ்கள்(+)
நமது அலுவலகம் சென்னை புறநகரில் உள்ளதால் போக்குவரத்து, தண்ணீர் பிரச்சனைகள் அவ்வளவாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
1991-லிருந்து 1998 வரை திருச்சியில் வசித்தேன். இப்போது மீண்டும் 9 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு அதுவும் சென்னைக்கு வருவது ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொஞ்சம் thrilled கொஞ்சம் excited. ஆனால் சென்னையின் தண்ணீர் பஞ்சத்தையும், climateடையும் நினைத்தால் கொஞ்சம் scared.
சென்னைக்கு வருவதால் நான் கருதும் ப்ளஸ்கள் (+)
1. சொந்த ஊருக்கு (கும்பகோணம்) பக்கம், அடிக்கடி சென்று வரலாம். பெற்றோர், உறவினர்களை அடிக்கடி சந்திக்கலாம்.
2. வார இறுதிகளில் கட்டாயம் தமிழ் சினிமா
3. விகடன், குமுதம், குங்குமம், கல்கி, தினமலர், தினத்தந்தி போன்றவற்றை சூடாக படித்து விவாதிக்கலாம்
4. டீக்கடை வெட்டி அரட்டை
5. தாவணி/சுடிதார், மல்லிகைப் பூவுடன் மங்களகரமான/அழகான இளம்பெண்கள்
6. நைட்டு கடைகளில் கொத்து பரோட்டா, குஸ்கா, ஆம்லெட், இட்லி, etc....
7. வலைப்பதிவர் சந்திப்பு, பட்டறை என்று நாமும் நம் பங்குக்கு பட்டையை கிளப்பலாம்
இதைத் தவிர நீங்களும் ஏதாவது + சொல்லுங்களேன்
+ மட்டுமே :-)
Friday, August 03, 2007
தேநீருடன் பருகச் சில கவிதைகள்
புதிது புதிதாய்
காதல் கவிதைகள் புனைய
புனைப்பெயரை
தேடி அலைந்த போதுதான்
கண்டேன் உன்னை....
கண்டது முதல்
மறந்தேன்
சொந்தப் பெயரையும்...
2
வலைப்பதிவுகளில் கை
வலிக்கும் வரை
எழுதித் தள்ளி விட்டேன்..
எல்லா போட்டிகளிலும்
கலந்து கொண்டிருக்கிறேன்..
நட்சத்திரமோ,
பரிசுகளோ,
வலை நிறைய பின்னூட்டங்களோ
கைக்கெட்ட வில்லை...
இருப்பினும்
வலை தொடர்வேன் நான்...
தாய்மொழியில் எழுதுவது
சுவாசிப்பது போலல்லவா..
தொடர்ந்து சுவாசிப்பதற்கு
காரணம் வேண்டுமா என்ன?
3
புன்னகைதான் உனக்கு
சிறந்த பொன் நகை
என்று
கூறிக் கூறியே
என் நகைகளையெல்லாம்
ஒவ்வொன்றாய்
களவாடி சென்றாயே...
திருமணமானதும்
திசைமாறிப் போவதா காதல்?
4
மழை பொழியும்
ஓர் பின்னிரவில்
தேநீருடன் பருக
கவிதைகள்
சிலவற்றை தேடி
அலைந்த போதுதான்,
தெரிந்து கொண்டேன்
உன் புகைப்படம்
உணர்த்தும்
எண்ணிலா புரிதல்களை!!!
*****
பின்னூட்டத்தில் உங்களுக்கு பிடித்த கவிதையின் எண் எதுவென்பதை மறவாமல் எழுதுங்கள்!! எதுவுமே தேறாவிட்டால் '0' என்று கூறுங்களேன் :-) இனிமையான வார இறுதிக்கு வாழ்த்துக்கள்!
Thursday, July 26, 2007
தயாநிதி மாறன் - அன்றும் & இன்றும் - கார்ட்டூன்
கார்ட்டூன்கள் வரைவதில் அனுபவம் அதிகமில்லை. இருந்தாலும் ஆர்வம் அதிகம் உண்டு. உங்கள் கருத்தை அவசியம் எதிர்பார்க்கிறேன், அது ஒரு ஸ்மைலியாக இருந்தாலும்!
Wednesday, July 25, 2007
சில பதிவர்களிடம் சில கேள்விகள்
1. செந்தழல் ரவி
அது என்ன 'செந்தழல்' ரவி? செந்தழல் என்பது என்ன? உங்கள் ஊர்ப் பெயரா அல்லது காரணப் பெயரா? நிழல்கள் ரவி மாதிரி இருக்க வேண்டும் என்று செந்தழல் ரவி என்று பெயர் வைத்துக் கொண்டீர்களா?
2. தேசிகன்
எழுத்தாளர் சுஜாதா உங்களுக்கு எப்போதிலிருந்து பழக்கம்? எப்படி இந்தளவுக்கு பழக்கமானார்? உங்கள் உறவுக்காரரா அவர்?
3. டோண்டு
மகரநெடுங்குழைக்காதன் என்பவர் யார்? கடவுளா, எந்த கடவுள்? அவருக்கு இப்பெயர் எப்படி வந்தது?
4. பாஸ்டன் பாலா
ஈ.தமிழ் வலையகத்தில் முன்பு போல் இப்போதெல்லாம் தினமும் பதிவுகள் வருவதில்லையே ஏன்? நீங்கள்தான் இட்லிவடை என்று வதந்தி கிளம்ப காரணம் என்னவாக இருக்கலாம்?
5. லக்கிலுக்
உங்கள் பெயரை தமிழ் படுத்தினால் எப்படி வைக்கலாம்? 'அதிர்ஷ்டப் பார்வை' என்றா? லக்கி என்பதற்கான தூய தமிழ் சொல் என்ன? அதிர்ஷ்டம் என்பது வடமொழிச் சொல் அல்லவா?
பதிவர்களே, பதில்களை வீசுங்கள், பரிசுகளை(?) வெல்லுங்கள்!!
கேள்விகள் தொடரும்.....
Tuesday, July 24, 2007
திருமண வாழ்க்கை - ஓவியம்
மேலே உள்ள படம் சிந்தாநதி நடத்தும் ஓவியப் போட்டிக்காக வரையப்(?) பட்டது. இது முன் நவீனத்துவ ஓவியமாகியதால் யாரும் புரியவில்லை என்று கேள்வி எதுவும் கேட்கக் கூடாது. உங்களுக்கு என்னவெல்லாம் புரிகிறது என்று பின்னூட்த்தில் கூறலாம். சிறந்த பின்னூட்டத்திற்கு பிளாஸ்டிக் குடம் பரிசளிக்கும் எண்ணம் உள்ளது :-)
பின்குறிப்பு: எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் கூடிய சீக்கிரம் ஆகிவிடும் போல் தோன்றுகிறது.
Saturday, July 21, 2007
இந்திய கிரிக்கெட் - மற்றுமோர் சொதப்பல்
தினேஷ் கார்த்திக் இங்கிலாந்து பிட்ச்சுகளில் ஒப்பனர் வேலைக்கு ஒத்து வர மாட்டார். ஏதோ பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை பிட்ச்சுகளில் வேண்டுமானால் கார்த்திக்கை வைத்து ஒப்பேத்தலாம். இந்தியாவில் வேறு ஸ்பெசலிஸ்ட் ஓப்பனர்களே இல்லையா, என்ன??
217/1 என்றிருந்த இங்கிலாந்து 298 ரன்களில் ஆல் அவுட் ஆன போதே எங்கோ இடித்தது. சரிதான், நமது வீரர்கள் திடீர் உத்வேகம் பெற்று இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கி விட்டார்கள் என்று மகிழ்ந்து உச்சி முகர்வதற்குள் பேட்டிங்கில் சொதப்பி விட்டனர். ஆரம்பத்தில் இருந்தே தொடரும் கதைதான் இது. வெளிநாட்டு தொடர்களில் அதுவும் பந்து ஸ்விங் ஆகும் பிட்ச்சில் இந்தியாவின் பருப்பு எப்போதுமே வேகாது. இப்போதும் இப்படித்தான் இருக்கிறது.
பார்ப்போம், இரண்டாவது இன்னிங்ஸில் என்ன நடக்கிறதென்று!!!
Friday, July 20, 2007
புனே -> பெங்களூரூ -> கும்பகோணம்
சேவையில்லை, பெங்களூரூ வழியாக செல்லலாம், ரூ 9000 பயணக் கட்டணம் திரும்ப வருவதற்கும் சேர்த்து, கிங்பிஷர் ஏர்வேசில் (இதனை தமிழ்ப் படுத்தினால் எப்படி இருக்கும், கிங்பிஷர் - அரச மீன் பிடிப்பவர் :-)). ஜெட் ஏர்வேசில் ரூ 10000 ஆகிறது. சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு 6 மணிநேரம் பயணம் செய்ய வேண்டும்.
ஆனால் புனே - பெங்களூரூ விமானக் கட்டணம் ரூ 3750 மட்டும்தான் (திரும்ப வருவதற்கும் சேர்த்து). ரீடிப் கட்டணதேடுதல் இணையத்தில் தேடி ஒருவழியாக இண்டிகோ விமானத்தில் பதிவு செய்து விட்டேன். பெங்களூரூ - கும்பகோணம் 10 மணிநேரப் பயணம், பரவாயில்லை பேருந்தில் பயணிக்கலாம் என்று முடிவாகி விட்டது.
புனேயிலிருந்து மாலை 5:25க்கு விமானம் கிளம்பியது. இண்டிகோ விமானச் சேவை பரவாயில்லை, டிக்கெட் குளறுபடிகளில்லை. இணையத்தளமும் நன்றாக, எளிமையாக உள்ளது. பயணத்தின் போது கொஞ்சம் விமானம் ஆட்டம் காட்டினாலும், சரியாக இரவு 7 மணிக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள் :-)
பெங்களூரூவிற்கு இதுவரை வந்ததில்லை. தேசிகன் வலைப்பக்களிலும்(பெண்களூர்), மற்ற வலைப்பதிவர்களின் வலைப்பக்கங்களிலும், செய்தி ஊடகங்களில் ஊரைப் பற்றி கேள்விப் பட்டதை தவிர வேறு அனுபவமில்லை. பரவாயில்லை, ஊர் நன்றாகத்தான் இருக்கிறது.
பெங்களூரூ விமானநிலையம் ஓரளவுக்கு சுத்தமாக உள்ளது. என்னை ஆச்சரியப் படுத்தியது இதுவல்ல, வெளியே வந்தவுடன் மெஜஸ்டிக்(கேம்ப்கவுடா) பேருந்து நிலையம் செல்வதற்கு ஆட்டோவைத் தேடினேன். ஆட்டோவிற்கான வரிசை முன்பு, ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் நின்று கொண்டு பயணிகளின் பெயர், செல்லுமிடம், செல்பேசி எண்ணை,
ஆட்டோ எண்ணை குறித்துக் கொண்டு வழியனுப்பி வைக்கிறார். அற்புதமான ஏற்பாடு. ஊர் தெரியாது புதிதாக வருபவர்களுக்கு இது பயனுள்ளது.
பெங்களூரூவில் சாலைகள் நன்றாக உள்ளன. ஓரளவுக்கு ஊரே சுத்தமாக உள்ளது (மும்பை, புனேவை ஒப்பிடும்போது).ஆட்டோகாரர் மீட்டர் போட்டு, 74 ரூபாய் (மீட்டர் சார்ஜ்) வாங்கிக் கொண்டு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார். ஆனால் டிராபிக் ரொம்பவும் அதிகம். விமான நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு 75 நிமிடத்திற்கு மேலாகி விட்டது (12 கிமீ மட்டுமே என்று நினைக்கிறேன்).
நான் பார்த்த வரையில் தமிழர்கள் நிறைய பேர் தென்பட்டனர். தமிழ் பத்திரிக்கைகளையும், செய்தித் தாள்களையும் கூட பார்க்க முடிந்தது. மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் இரவு 8:30க்கு கே.எஸ்.ஆர்.டி.சி ஏசி வசதிப் பேருந்து கும்பகோணத்திற்கு கிளம்புகிறது. ரூ 363 பயணக் கட்டணம். பேருந்து சுத்தமாக, வசதியாக உள்ளது. டிவி தொல்லை இல்லை. போர்த்திக் கொள்ள போர்வை, தண்ணீர் பாட்டில், முகம் துடைக்க டிஸ்யூ பேப்பர் போன்றவற்றை கொடுக்கின்றனர்.
சற்று கண்ணயர்ந்தால் 11 மணியளவில் கிருஷ்ணகிரி, காலை 5 மணிக்கு திருச்சி, 7 மணிக்கு கும்பகோணத்தில் கொண்டு சேர்த்து விடுகின்றனர். இவ்வண்டியைத் தவிர கேபிஎன் பேருந்தும் இருக்கிறது.
மூன்று நாட்கள் ஊரில் இருந்து விட்டு, திரும்பவும் கும்பகோணத்திலிருந்து, பெங்களூரூ. அங்கிருந்து புனே வந்து சேர்ந்து நண்பர்களிடம் 'அதிருதுல்ல....' என்றேன்!
Tuesday, April 24, 2007
கிரிக்கெட் - இந்த வாரம்
தற்போதைய ஃபார்மில் இறுதி போட்டிக்கு செல்ல, இலங்கைக்கே வாய்ப்பு அதிகம். அனுபவ வாஸ், அதிரடி மாலிங்கா, சுழற்புயல் முரளிதரன் என பந்துவீச்சிலும், ஜெயசூர்யா, சங்ககரா, ஜெயவர்த்தனே போன்ற அனுபவ வீரர்களால் மட்டையடியிலும் (பேட்டிங்) இலங்கை ஜொலிக்கிறது.
நாளை நடக்க இருக்கும் இன்னொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்காவை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா இன்னும் ஒருமுறை இறுதிப் போட்டியில் விளையாட தயாராக உள்ளது.
இறுதிப் போட்டியில் எனது கணிப்பு : ஆஸ்திரேலியா - இலங்கை, உங்கள் கணிப்பு என்னவென்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!
உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் காற்று வாங்குகின்றன. லாரா ஓய்வுபெற்ற வெஸ்ட் இண்டிஸ் - இங்கிலாந்து போட்டியை தவிர மற்ற பெரும்பாலான போட்டிகளில் பார்வையாளர்கள் மிகவும் குறைவே! அதிகமான டிக்கெட் விலை ஒரு காரணமாக சொல்லப் பட்டாலும், எனக்கென்னவோ காரணம் வெறெங்கோ உள்ளதாகப் படுகிறது, உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்!
வங்கதேசத்திற்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி தேர்வாகி விட்டது. ராகுல் டிராவிட் கேப்டனாக, இளமையான(?) அணி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. டெண்டுல்கர், கங்குலி, ஹர்பஜன், அகார்கர், பதான் போன்றோர் கழட்டி விடப் பட்டுள்ளனர். டிராவிட் தேர்ந்தெடுக்கப் பட்டதும் கேள்விக் குறியே! அடுத்த உலகக் கோப்பையை மனதில் வைத்து இளமையான ஒருவரை கேப்டனாக தேர்ந்தெடுத்திருக்கலாம். யுவராஜ் சிங், சரியான தேர்வாக இருந்திருப்பார்.
Thursday, April 12, 2007
'தி' என்றால் திருச்சி...
நேற்று நண்பர் ஒருவரிடமிருந்து செல்பேசியில் குறுஞ்செய்தி வந்தது "I m going 2 TRY this wknd". நண்பர் திருச்சியை சேர்ந்தவர் என்பதால், அவர் இந்த வார இறுதியில் திருச்சிக்கு செல்கிறார் என்பதை உடனே புரிந்து கொள்ள முடிந்தது.
திருச்சிராப்பள்ளி என்பதே திருச்சியின் முழுப்பெயர். பழங்காலத்தில் திரு. சிராப்பள்ளி என்று பழக்கத்தில் இருந்து வந்தது, காலப்போக்கில் திருச்சிராப்பள்ளி என்று மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி என்னும் பெயர், எப்போது திருச்சி என சுருக்கமாக வழங்க ஆரம்பிக்கப் பட்டது என்று தெரியவில்லை. ஒருவேளை பேருந்துகளிலும், மற்ற பெயர் பலகைகளிலும் எழுதுவதற்கு சுலபமாக கடந்த 40 - 50 வருடங்களுக்குள்ளாகவே இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம்.
திருச்சியின் பெயர் மட்டுமல்லாமல், தஞ்சாவூர் என்பது தஞ்சை என்றும், கும்பகோணம் என்பது குடந்தை என்றும், திருநெல்வேலி என்று நெல்லை என்றும், பாண்டிச்சேரி என்பது பாண்டி என்றும் அழகாக சுருக்கப்பட்டுள்ளன. எனக்கென்னவோ சுருக்கப்பட்டுள்ள பெயர்களை விட, உண்மையான முழுப்பெயர்களே கவர்ச்சியாக உள்ளதாக உணறுகின்றேன்.
இப்போது இணைய அரட்டை, செல்பேசி குறுஞ்செய்திகளெல்லாம் வந்துவிட்ட பிறகு திருச்சி என்பதைக் கூட TRY என்றோ try. என்றோ இன்னும் சுருக்கி பயன் படுத்துகிறார்கள். ஒருவேளை எதிர்காலங்களில் இதுவும் கூட இன்னும் சுருங்கி திருச்சியை 'T' அல்லது 'தி' என்று பயன் படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்(how are you) என்பதை h r u? என்று கேட்கிறார்கள். இதை விடவும் இணைய அரட்டைகளில் ASL என்னும் அறிமுகம் செய்து கொள்ளும் வார்த்தை பிரபலம். ASL என்றால் Age, Sex & Location.
குறுஞ்செய்திகளில் சென்னை என்பது CHN என குறிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி வந்தால் (இன்னமும் ஏன் வரவில்லை?) சென்னையை எவ்வாறு குறிப்பிடுவார்கள் என்று யோசித்தால் விடை புலப்பட வில்லை. 'செ' என்று குறிப்பிட முடியுமா? உதாரணத்திற்கு ஜெயங்கொண்டம் என்ற ஊரின் பெயரை 'ஜெ' என்று சொல்ல முடியுமா? ஜெ என்றால் இன்று வரை ஜெயலலிதாவை மட்டுமல்லவா குறிக்கிறது.
திருச்சியில் தில்லைநகர் என்ற இடத்தின் பெயரை தி.நகர் என்று சில பேருந்து பலகைகளில் பார்க்கலாம். இதுவே சென்னையில் தி.நகர் என்றால் தியாகராஜ நகர் என புரிந்து கொள்ள வேண்டும். மேலும் திருச்சியில் வயலூர், புத்தூர், உறையூர், திருவரங்கம் போன்றவற்றை எப்படி சுருக்க முடியும் என்று தெரியவில்லை.
எது எப்படியிருந்தாலும், தி என்றால் திருச்சி என்பது உடனே சாத்தியமாக வேண்டும் என்றால் ரஜினியின் அடுத்த படத்தில் ஒரு பாட்டு வைத்து விடலாம் 'தி என்றால் திருச்சி... ர என்றால் ரஜினி...', எஸ்பிபி மூச்சு விடாமல் பாடுவது ஒரு சரணம் வைத்து விட்டால் அப்புறம் கேட்கவா வேண்டும். உலகம் முழுக்க தி என்றால் திருச்சி என்று தெரிந்து விடும், என்ன சொல்கிறீர்கள்?
Thursday, April 05, 2007
'பல்லேலக்கா' சிவாஜி !!!!
எல்லாரும் சிவாஜியை பத்தி பதிவு போடறாங்க, நாமும் நம்ம பங்குக்கு ஒரு பதிவு போடலேன்னா எங்க பீல்ட் அவுட் ஆயிடுவோமான்னு பயமா இருக்கு... வந்ததுதான் வந்துட்டீங்க, படிச்சுட்டு ஏதாவது திட்டிட்டு போங்களேன்!
ரெண்டு வருஷமா பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்து ஒரு வழியா சிவாஜி பாட்டெல்லாம் ரிலிஸ் ஆயிடுச்சு. புனே ரஸ்தாபேட் ஏரியாவுல அதிகாரப்பூர்வ (அபிஷியல்) சிடியே கிடைக்குது. 125 ரூவாங்கிறது கொஞ்சம் அதிகந்தான் இருந்தாலும் ரஹ்மான் - ஷங்கர் - ரஜினிகாந்த் காம்பினேஷன் இருக்கிறதால நம்ம ப்ரண்ட் வாங்கிட்டு வந்துட்டாரு!
ஏழு பாட்டுங்க இருக்குங்க. முதல் தடவை கேட்கறப்பவே மூனு நாலு பாட்டுங்க பச்சக்கன்னு அட்ராக்ட் பண்ணிடுச்சுங்க. 'அதிரடி..தீ..'ன்னு ஆரம்பிக்கிற ரஹ்மான் பாட்டு நாலு தடவ கேட்டப்புறம் பரவாயில்லை போல இருக்கு. பாட்டு வரியெல்லாம் கேரண்ட்டியா புரிஞ்சுக்கவே முடியாது.
ரெண்டாவது பாட்டு 'பல்லேலக்கா' சூப்பரோ சூப்பர். 'சூரியனோ சந்திரனோ...'ன்னு ஆரம்பிச்சு எஸ்பிபி 'காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்..'ன்னு எண்ட்டர் ஆவராரு பாருங்க, அட்டகாசம். இப்ப எழுதறப்பவே எனக்கு புல்லரிக்குது, தியேட்டர்ல பிச்சு உதறும்னு நினைக்கிறேன். ஓப்பனிங் சாங் இதுதான். சந்திரமுகி 'தேவுடா.. தேவுடா..' மாதிரியே இதுவும் கலக்கும் பாருங்க.
'சஹானா சாரல்..' பாட்டு சூப்பர் மெலடி. உதித் நாரயணனும், சின்மயியும் போட்டு போட்டுட்டு கலக்கி இருக்காங்க. பாட்டு வரிகளெல்லாம் தெளிவா கேட்க முடிவதே ஒரு பெரிய சாதனைதான். 'மார்கழிப் பூவே' பாட்டுக்கு அப்புறம் ரஹ்மானோட நெக்ஸ்ட் மெலடி ரேங்க் இதுக்குத்தான்னு நான் (நான் மட்டும்தான்) நினைக்கிறேன்..
'சஹாரா பூக்கள்..' பாட்டு சோகமான மெலடி. விஜய் யேசுதாஸ், கோமதி ஸ்ரீ (யாருங்க இந்த பொண்ணு, புதுசா ??) பாடியிருக்காங்க. பாடல் ஓகே ரகம். ரொம்ப மெதுவா, இழுக்கறாப்ல இருக்கு.
'ஸ்டைல்..' பாட்டு ரொம்ப ஸ்டைலா இருக்கு. இருந்தாலும் 'ஒரு கூடை சன்லைட்..' அப்படிங்கிற வரியே வலைப்பதிவையெல்லாம் படிச்சுட்டு கேட்டாத்தான் புரியுது. பாட்டு வேற ரொம்ப வெஸ்டர்னா இருக்கு. என்னமோ போங்க..
'சிவாஜி' தீம் மியுசிக் சுமார்தான், சொல்றதுக்கு ஒன்னுமில்லை.
கடைசி பாட்டு 'வாஜி..வாஜி..சிவாஜி' கலக்கல் பாட்டு. ஹரிஹரன், மதுஸ்ரீ பட்டையை கிளப்பி இருக்காங்க. 'ஆம்பல்..ஆம்பல்..'ன்னு ஆரம்பிக்கிற பாட்டுல வார்த்தைகளெல்லாம் சூப்பரா வந்துருக்கு. சின்ன குழந்தைகளெல்லாம் முணுமுணுக்கப் போறாங்க இந்த பாட்டைத்தான்.
மொத்தத்தில பாட்டெல்லாம் நிறைய மார்க் வாங்கி படத்தை பற்றி எதிர்பார்ப்பை இன்னும் எக்கச்சக்கமாக எகிற வைச்சிக்குங்க. படம் மே - 17ம் தேதி ரிலிஸ்ன்னு சொல்றாங்க. அதுக்கு முன்னாடியே திருட்டு விசிடி வந்தாலும் வந்துரும். விசிடியை பார்க்காம, தியேட்டருக்கு போய் மக்களோட மக்களா படத்த பாருங்க, பாத்துட்டு வந்து நீங்களும் உங்க பங்குக்கு ஒரு விமர்சனப் பதிவு போட்ருங்க!!
கொசுறு தகவல்:
புனேயில் இருக்கும் எங்க ஆபிஸ் கேம்பஸ்லயும் ஷூட்டிங் நடந்திருக்கு. எங்க ஆபிஸ் இருக்கிற சைபர் சிட்டிதான் 'சிவாஜி யுனிவர்சிட்டி'யா படத்தில மாற்றப் பட்டிருக்கு. ரஜினி காலேஜ் திறக்கற சீனை படத்தில் பாத்துட்டு வந்து எப்படி இருக்குன்னு மறக்காம எனக்கு சொல்லுங்க!! எங்கயாவது ஒரு
ப்ரேம்ல நான் கூட இருக்கலாம்!!
Wednesday, April 04, 2007
கிரிக்கெட் உலகக்கோப்பை யாருக்கு?
முதலில் அரையிறுதிக்கு தகுதிபெறக் கூடிய அணிகளின் வாய்ப்புகளைப் பற்றி பார்ப்போம்.
சூப்பர்-8க்கு தகுதி பெற்ற அணிகளில் அயர்லாந்து, பங்களாதேஷ் ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. எனவே இவைகளை ஒதுக்கி விடலாம். வெஸ்ட் இண்டீஸ் தான் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. தற்போதைய ஃபார்மில் இதுவும் வெளியேறி விடும்.இங்கிலாந்தும் சுமாராகத்தான் காட்சி அளிக்கிறது. அயர்லாந்துடன் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றுள்ளது. எனவே இதற்கும் வாய்ப்புகள் குறைவு.
எனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியுசிலாந்து, இலங்கை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும். இவற்றில் முதலிடம் பெறும் அணி நான்காமிடம் பெறும் அணியிடமும், இரண்டாமிடம் பெறும் அணி மூன்றாமிடம் பெறும் அணியிடமும் மோதும். தற்போதைய நிலைமையின் படி, இரு அரையிறுதிகளிலும் தென்னாப்ரிக்கா - இலங்கை (A2 vs A3), ஆஸ்திரேலியா - நியுசிலாந்து (A1 vs A4) மோதுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
இவற்றில் வென்று இறுதிப் போட்டியில் மோதுவதற்கு ஆஸ்திரேலியா & தென்னாப்ரிக்கா அணிகள் தயாராக உள்ளன. வாய்ப்பும், ஃபார்மும் கூட இவ்விரண்டு அணிகளுக்கே உள்ளன. ஆனாலும் அந்த நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அவையே முன்னேறலாம். இதெல்லாம்
சரி, இறுதிப்போட்டியில் யார் வெல்வார் என்று கேட்கிறீர்களா? தென்னாப்ரிக்கா வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை, பொறுத்திருந்து பார்ப்போமே!!
இந்த உலகக் கோப்பையின் சிறந்த வீரர் ஆவதற்கான வாய்ப்பு மேத்யூ ஹேடன், மெக்ராத், ஜெயசூர்யா, மாலிங்கா ஆகிய வீரர்களுக்கு அதிகமுள்ளது! இவ்வீரர்களில் முதல் மூவர் 30 வயதை தாண்டிய அனுபவ வீரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உங்கள் சாய்ஸ் (உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி, சிறந்த வீரர்) என்னவென்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
Tuesday, November 21, 2006
கடைசி அஸ்திரம் - மூன்று வரிக் கதை
"முடியவே முடியாது... காதல், கீதலெல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது.. என் கவுரவம், அந்தஸ்து என்னாவது" அப்பா வானத்துக்கும் பூமிக்குமாய் எம்பிக் குதித்தார்.
"அப்பா..... அவளும் நம்ம ஜாதிதாம்பா...." கடைசி அஸ்திரத்தை வீசினேன் நான்.
"கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம் ??..." என்றார் அன்புள்ள அப்பா.
<<<<>>>>
புகைப்படம் : புனே கிரிவன் மலைப்பகுதி
Tuesday, November 07, 2006
இயலாதோர்க்கான வேலைவாய்ப்பு சந்தை
பட்டதாரிகளான இயலாதோர், எபிலிட்டி பவுண்டேஷன் வலைத்தளத்தில் இதற்காக பதிவு செய்து கொள்ளலாம்.
வலைத்தளம்: http://www.abilityfoundation.org/organisations1.htm
தொலைபேசி: +91 44 2445 2400
மின்னஞ்சல்: jobs@abilityfoundation.org
இதே வலைத்தளத்தில் நிறுவனங்களும், வேலைக்கு சிறப்பு தேவை மக்களை தேர்ந்தெடுக்க, பதிவு செய்து கொள்ளலாம்.
<<<>>>
If you know any disabled graduates, help them by passing this info.Job fair organized on 17th Dec 06 for the disabled graduates.It will be held in Chennai.
For more details: http://www.abilityfoundation.org/organisations1.htm
For more queries Call : +91 44 2445 2400
Or mail us at jobs@abilityfoundation.org
<<<>>>
தகவல் நன்றி: ரத்னாகர் மிஷ்ரா, புனே.
<<<>>>
நண்பர்களே, உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் இத்தகவலை பரப்புங்கள். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திலும், இங்கு வேலைக்கு தேர்ந்தெடுக்க பரிந்துரை செய்யுங்களேன், நன்றி!
<<<>>>
தமிழ் வலைப்பதிவுகள் - பொருத்துக
சரியான விடைகளை பின்னூட்டத்தில் (எ.கா: 1 - j, 2-e, ....) கூறுங்கள். பின்னூட்டங்கள் உடனே வெளிவராது. சரியான பதிலென்றால் உங்களைப் பாராட்டி ஒரு சிறுகவிதையும், தவறென்றால் குறிப்பும் வழங்கப் படலாம். புதிரில் சம்பந்தப்பட்ட வலைப்பதிவாளர்களும் கலந்து கொள்ளலாம்!
1. டி.பி.ஆர்.ஜோசப் - a. பொருளாதார கட்டுரைகள்
2. பாஸ்டன் பாலா - b. அத்தை பெண்கள்: ராஷ்ஷசிகள் என்று, கவிதை புனைபவர்
3. தேசிகன் - c. ராமயணக் கதை, ஐடிபில் நினைவுகள் எழுதும் மொழிபெயர்ப்பாளர்
4. லக்கிலுக் - d. திரும்பிப் பார்த்தவர்
5. மா சிவகுமார் - e. சமீபத்திய 'தேன்கூடு போட்டி' விமர்சகர்
6. *** கணேசன் - f. 'இலவச'த்தை வழங்கியவர்
7. கார்த்திக் பிரபு - g. செய்திகளை பேச வைத்தவர்
8. யதா - h. தமிழில் எண்ணங்கள்
9. டோண்டு - i. கடலளவுக்கு கலக்குபவர்
10. பத்ரி - j. கோயில்கள் நிறைய சுற்றும், 'பெண்களூர்'காரர்
Monday, October 30, 2006
இன்று திங்கள் கிழமை..
<<<>>>
இன்று திங்கள் கிழமை,
நாளை செவ்வாய் கிழமை,
ஒவ்வொரு முறையும்
வாங்கிக் கொடுக்கும் குளிர்பானங்கள்,
கூட்டிச் செல்லும் திரைப்படங்கள்,
உணவருந்தும் குளிரூட்டப்பட்ட விடுதிகள்,
கணக்கிலடங்கா பரிசுப் பொருட்கள்,
மணிக்கு இருமுறை தொலைபேசி அழைப்புகள்,
அளவில்லா இணைய அரட்டைகள்,
இவைகளால் கரையும் என் வங்கி சேமிப்பு,
எல்லாம் நினைவிற்கு வருகிறதடி
உன்னை பார்த்தவுடன், என் காதலி !!
<<<>>>
Friday, October 27, 2006
இன்று வெள்ளிக்கிழமை...
இன்று வெள்ளிக்கிழமை,
நாளை சனிக்கிழமை,
நாளை மறுநாள் ஞாயிறு,
நம் பெயர்கள்,
தோழிகளின் பெயர்கள்,
நம் செல்பேசி எண்கள்,
மின்னஞ்சல் கடவுச்சொல்,
பணம் வழங்கும் அட்டையின் கடவு எண்,
நேற்று நாம் பார்த்த திரைப்படத்தின் கதை....
எல்லாம் நினைவில் உள்ளதடா
உன்னை பார்க்கும் வரை, என் காதலா !!
<<<<<>>>>>
புகைப்பட உதவி : நண்பர் ராகவேந்தர், புனே.
Tuesday, October 24, 2006
விறுவிறுப்பாகும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள்
இந்தியாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் லீக் போட்டிகளில், எதிர்பார்த்த படியே சில எதிர்பாராத முடிவுகள் கிடைத்திருக்கின்றன. இதில் முக்கியமானது, ஆஸ்திரேலியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் கொடுத்த ஆப்பு!ஆப்புகளில் அடுத்த இடத்தை பிடிப்பது, தென்னாப்ரிக்காவுக்கு நியூசிலாந்து கொடுத்தது.
லீக் சுற்றில் முதல் போட்டியில், இந்தியா தட்டுத் தடுமாறி இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்திய பந்துவீச்சாளர்கள், சிறப்பாக ஆடி இங்கிலாந்தை 125 ரன்களில் ஆல் அவுட்டாக்கிய போதும், பேட்டிங்கில் 6 விக்கெட்டுகளை இழந்துதான் இந்தியா வெற்றி பெற முடிந்தது. சேவக் டிவெண்ட்டி20 நினைப்பில் ஆடுவதை மாற்றிக் கொண்டால் இந்தியா பிழைக்கும்!
+: பதான் ஃபார்முக்கு திரும்பியது, முனாப் பட்டேல், பவாரின் பந்துவீச்சு
-: டிராவிட், தோனியின் ஃபார்ம், இங்கிலாந்தின் பேட்டிங்
இரண்டாம் போட்டியில் நியுசிலாந்து ப்ளெமிங் தயவில் 195 ரன்கள் எடுத்தது. ஆனால் தென்னாப்ரிக்கா மில்ஸ், ஓரம், படேல் போன்றோரின் பந்துவீச்சில் 108 ரன்களில் வீழ்ந்தது சற்று எதிர்பாரததே!
-: தென்னாப்ரிக்காவின் 'டுபாக்கூர்' பேட்டிங்
மூன்றாம் போட்டியில் பலவித குழப்பங்களில் சிக்கியிருந்த பாகிஸ்தான், பயங்கர ஃபார்மில் இருந்த இலங்கையை வீழ்த்தியது. நல்ல ஸ்கோரை எட்டியிருந்தும், பலமான பாகிஸ்தான் பேட்டிங்கை எதிர்கொள்ள முடியவில்லை, இலங்கைக்கு.
+: பாகிஸ்தானின் பேட்டிங், அப்துல் ரசாக்கின் ஆல்ரவுண்ட் திறமை
-: இலங்கையின் வேகப்பந்து வீச்சு, முரளியை ஓவராக சார்ந்திருப்பது
நான்காவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலியா இந்திய ஆடுகளங்களில் சுமாராகத்தான் ஆடும். மிக அதிகமான தன்னம்பிக்கை சில சமயங்களில் காலை வாரி விடுவதுமுண்டு. மார்டன், லாரா பேட்டிங்கில் ஜோலிக்க, பவுலிங்கில் 'ஹாட்ரிக்' டெய்லர் தனியாளாக கலக்கினார். 10 ரன்களில் வெற்றியை கோட்டை விட்டது ஆஸ்திரேலியா.
+: வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சு
ஐந்தாவது போட்டியில் நியுசிலாந்தை, இலங்கை வீழ்த்தியது. முரளியின் சுழலில் நியுசிலாந்து 165 ரன்களில் பணிய, அதை அநாயாசமாக 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலங்கை வென்றது.
+: இலங்கையின் சுழல் & பேட்டிங்
-: நியுசியின் 'பரத நாட்டிய' பேட்டிங்
ஆறாவது போட்டியில் 'ஆஷஸ்' அணிகள் மோதின. எதிர்பார்த்த படியே ஆஸ்திரேலியா இங்கிலாந்தை சொல்லி வைத்து வீழ்த்தியது. 87 ரன்களுக்கு விக்கெட் இழப்பில்லாமல் இருந்து, 159 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட்டானதற்கு காரணம் 'ஆஷஸ்' ஞாபகமா?இனிமேலாவது 'ஆஷஸ்' சீரிஸுக்கு ஓவர் பில்டப் கொடுப்பதை இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் நிறுத்தலாம். ப்ளிண்டாபை பார்த்தால் 'இம்சை அரசன் காமெடி வடிவேலு'தான் ஞாபகத்திற்கு வருகிறார். Right person in wrong place ?? வழக்கம் போல் ஏகப்பட்ட சவால்கள் விட்டு, பரிதாபமாக தோற்றது இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவும் சுமாராகத்தான் ஆடியது, இருந்தாலும் இங்கிலாந்தின் தயவால் வெற்றி பெற்றது.
-: இங்கிலாந்து அணியின் அணுகுமுறை
<<<>>>
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் முடிவால், விறுவிறுப்பாகி உள்ளது சாம்பியன்ஸ் ட்ராபி. இங்கிலாந்தை தவிர மற்ற ஏழு அணிகளும் இன்னமும் கோப்பைக் களத்தில் உள்ளன. எனது தற்போதைய கணிப்புப் படி பாகிஸ்தான், இலங்கை, இந்தியா, வெஸ்ட் இண்டிஸ் அணிகள் அரையிறுதி போட்டியில் இடம் பிடிக்கலாம். உங்களோட சாய்ஸ் என்ன ??
Friday, October 20, 2006
மற்றும் ஓர் தீபாவளி வாழ்த்து....
தீப ஓளி வீசும்
பண்டிகைத் திருநாளாம்
தீபாவளியை
இனிதே கொண்டாடி
மகிழ்ந்திட வாழ்த்துகிறோம் !!
:-)))o
அன்புடன்,
'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன்
<<<>>>>
தீபாவளி சம்பந்தமாய் வந்த பெரும்பாலான இணைய இடுகைகளில் சென்று பின்னூட்டம் இட்டாகி விட்டது. நண்பர்களுக்கெல்லாம் மின்னஞ்சலிலும், செல்பேசி குறுஞ்செய்திகளிலும் வாழ்த்து அனுப்பி விட்டோம். உறவினர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தாயிற்று. இருந்தாலும் எம் போன்ற கவிஞர்களுக்கு(?) அழகு தீபாவளியை ஓர் கவிதையுடன் கொண்டாடுவதே! இதோ....
<<<>>>>
புத்தம்புது ஆடைகள்,
விதவிதமான திண்பண்டங்கள்,
வீடுகொள்ளா உறவினர்கள்,
பயமுறுத்தும் அதே சமயத்தில்
ஆர்வமூட்டும் வெடிகள்,
வானொலி செய்திகளில் வரும்
பிரபலங்களின் வாழ்த்துகள்,
தெருமுழுக்க சிதறி கிடக்கும்
பட்டாசு காகிதங்கள்,
காற்றில் மிதந்து வரும்
வெடிவாசனையுடன் கூடிய புகை,
பரவசமூட்டும் பண்டிகை
கொண்டாடங்கள்...
இவையனைத்தும் இல்லாமல்
மடிக்கணினியில் உலாவும் இணையம்,
கைத்தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள்,
தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சிகள்,
அடுக்குமாடி அண்டைவீட்டாரின் 'ஹேப்பி திவாளி',
மெக்டொனால்ட்ஸின் பிஸ்ஸா
என்று கழியும் எங்களுக்கு
இத்தீபாவளி திருநாள்....
இருந்தாலும் அடுத்த தீபாவளியை
எதிர்நோக்கி ஆர்வமாய் காத்திருப்போம் !!!!
<<<>>>>
தீபாவளியை ஊருக்கு சென்று வீட்டோடு கொண்டாட இயலாத, எம் போன்ற எண்ணற்ற பேச்சிலர் நண்பர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம் !!
<<<>>>>
Thursday, October 19, 2006
என்னடா சொல்கிறாய், நீ ???
காதல் கவிதைகள் பெரும்பாலும் ஆணின் பார்வையிலேயே எழுதப் படுகின்றன. ஆனால் பெண்களின் உணர்வுகள், பார்வைகளுடன் வெளிவந்திருக்கும் காதல் கவிதைகள் குறைவே! அகநானூறு போன்ற தமிழ் இலக்கியங்களில் தலைவியின்(பெண்களின்) காதல் பாங்கு அழகுடன் விளக்கப் படுகின்றது! இக்கவிதை அத்தகைய ஓர் முயற்சியே!
<<<<<<>>>>>>
தூக்கமே வருவதில்லை...
அப்படியே வந்தாலும்
தூக்கத்தில் சிரிக்கிறேன்
என்கிறார்கள் தோழிகள்....
கனவுகளிலும்
உன் ஞாபகம்தான்...
பசிக்கிறது....
ஆனால் எதுவும் சாப்பிட பிடிக்க வில்லை...
தட்டில் கை அலை பாய்கிறது...
படிக்கும் போதும்,
எழுதும் போதும்,
குளிக்கும் போதும்
பயணிக்கும் போதும்,
எப்போதும் உன் ஞாபகம்தான்..
கண்ணாடியை பார்க்கும்போதெல்லாம்
என்னில் உன்னை பார்க்கிறேன்...
ஆதலால் கண்ணாடியைப் பார்த்து
பேசிக் கொண்டிருக்கிறேன்
உன்னிடம் பேசுவதாய் நினைத்து....
தோழிகளுடன் உரையாடும் போதும்
திடீர் திடீரென
உன்னைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவதால்
தடங்கலிடும் விவாதங்களால்,
விவாதப் பொருளாகிறேன் நான்...
என் செல்பேசியில் வரும்
ஒவ்வொரு குறுஞ்செய்தியும்
உன்னையே ஞாபகப் படுத்துவதால்
செல்பேசிக்கு கிடைக்கின்றன கூடுதல் முத்தங்கள்...
கூடவே அலுவலக தோழிகளின் வியப்பு பார்வைகள்...
தினமும் முன்செலுத்தப்படும் மின்னஞ்சல்களில்
எங்காவது உன் பெயர் இருந்தால்,
அதற்காகவே சேமிக்கப்படுகின்றன
அவ்வஞ்சல்கள், என் கணிணியில்...
குளித்துவிட்டு உடல் துடைக்காமல்
ஆடையணிந்து அலுவலகம் கிளம்பும்
சம்பவங்கள்
அடிக்கடி நிகழ்கின்றன...
உலகம் என்னை கோமாளி என்கிறது..
என்னடா சொல்கிறாய் நீ ??
<<<<<<>>>>>>
நண்பர் சிறில் அலெக்ஸ், தனது 'தேன்' வலைப்பதிவுத் தளத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பு அளித்து, அத்தலைப்பில் ஏதாவது எழுதச் சொல்கிறார். அவர் அக்-13 அளித்த கோமாளி என்ற தலைப்பே இக்கவிதைக்கான தூண்டுதல். அவருக்கும், கவிதைக்கான படத்தை மின்னஞ்சலில் முன்செலுத்திய நண்பர் கிருஷ்ணா ராஜப்பாவிற்கும் நன்றிகள் பலப்பல !!
<<<<<<>>>>>>
//உலகம் என்னை கோமாளி என்கிறது..
என்னடா சொல்கிறாய் நீ ??//
உலகம் கவிதை நாயகியை கோமாளி என்று சொல்வது இருக்கட்டும், இம்மாதிரி காதலில் மூழ்கி புற உலகத்தை மறந்திருக்கும் காதலர்களை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ??
<<<<<<>>>>>>
Tuesday, October 17, 2006
கவிதைக்கு மெய் அழகு...
1
முருகன்..
கணேசன்..
இயேசு..
அல்லா..
அனுமான்..
பாலாஜி..
சிவன்..
எத்தனை பெயர்கள் இறைவா உனக்கு !!
ஒன்றிற்காவது இருக்கிறதா கடன் அட்டை* ??
~~~~~
* கடன் அட்டை - கிரெடிட் கார்டு
<<<<<>>>>>
2
ஸ்ரீராமஜெயம்
ஸ்ரீராமஜெயம்
ஸ்ரீராமஜெயம்
...
...
...
ஸ்ரீராமஜெயம்
நூற்றியெட்டு முறை
எழுதி அனுப்பினேன் மின்னஞ்சலை
ஸ்ரீராமர்@இந்திரலோகம்.காம் !!!
முகவரி சரியில்லை என திரும்பி
வந்து விட்டது,
யாராவது சொல்லுங்களேன்
ஸ்ரீராமர் எங்கேயிருக்கிறார் என்று ???
<<<<<>>>>>
3
நாட்டில் எங்கும் ஊழல் பெருகி விட்டது..
அரசியல்வாதிகள் ரொம்பவும் மோசம்..
என
பயணச்சீட்டில்லாமல் ரயிலில் பயணிப்பவர்
நிஜமாகவே கவலைப் படுகிறார் !!
<<<<<>>>>>
4
நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும்
கணிணி மென்பொருளாளர்
நான்கு ரூபாய்க்காக காய்கறிக் கடையில்
பேரம் பேசி, சண்டை போட்டு வெல்கிறார்...
வீட்டிற்கு வந்ததும்,
பெண் தோழியிடம் செல்பேசியில்
நாற்பது நிமிடங்கள் கதைக்கிறார் !!!
<<<<<>>>>>
5
நேரம் போவதே தெரியாமல்
எத்தனையோ நாட்கள்
தொலைபேசியில் கதைத்திருக்கிறோமடி,
உன் தங்கையே நீ அறிமுகப் படுத்தும் வரை...
இப்போதெல்லாம்
உன்னை நினைத்துப் பார்க்கக் கூட
நேரமில்லை !!
<<<<<>>>>>
பின்குறிப்பு : உங்களுக்கு எந்த கவிதை ரொம்ப பிடித்திருக்கிறது என்பதை பின்னூட்டத்தில் (எண்ணை மட்டும்) மறக்காமல் சொல்லுங்கள் !! எதுவுமே பிடிக்கவில்லையென்றால் சிரிப்பான் ஒன்றை போட்டு விடுங்களேன் :-)) கவிதைகளை மேம்படுத்த மாறுதல் ஆலோசனைகளும் வரவேற்கப் படுகிறது!
Friday, October 13, 2006
நில், கவனி, யோசி..
முத்துமாணிக்கம் மலைக்கோட்டை மாநகரின் பிரபல தொழிலதிபர். திருச்சி கைலாசபுரம் அருகே பெல் நிறுவனத்தைச் சார்ந்து இயங்கும் ஓர் பெரிய தொழிற்சாலைக்கு சொந்தக்காரர். சில, பல கல்விக்கூடங்களையும் நடத்தி வருகிறார். லயன்ஸ், எக்ஸ்னோரா மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் தலைவராகவோ, பொருளாளராகவோ, செயலாளராகவோ இருக்கிறார். தொண்டு நிறுவனம் ஒன்று, இவருடைய சேவையைப் பாராட்டி 'சமூகக் காவலர்' என்று பட்டம் கூட கொடுத்திருக்கிறது. திருச்சியில் புகழ்பெற்ற ஓர் கல்லூரி ஆண்டுவிழாவில்தான் மேற்கண்டவாறு பேசிவிட்டு அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்.
அலுவலகத்தில் நுழைந்து இருக்கையில் அமர்ந்தவுடன், காரியதரிசி உள்ளே வந்து "சார், ஷிப்ட் சூப்பர்வைசர் வேலைக்கு இண்டர்வியூ முடிந்து விட்டது, மூன்று பேர் கடைசி லெவல் வரை வந்து இருக்கிறார்கள். நீங்கள் இறுதி இண்டர்வியூ நடத்திவிட்டால் மூவரில் ஒருவரை தேர்ந்தெடுத்து விடலாம்..." என்றார்.
முத்துமாணிக்கம் "எனக்கு இப்போ நேரமில்லை, அவங்களைப் பத்திய விபரங்களை கொண்டு வாங்க.." என்றார்.
"...சார்.. அந்த மூணு பேர்ல ஒருத்தன் நம்ப ஜாதி பையன்..." - காரியதரிசி.
"அப்ப, அந்த பையனையே அப்பாயிண்ட் பண்ணிடுங்க.." என்றார் சமூகக் காவலர் முத்துமாணிக்கம் !!
***
தேன்கூடு - தமிழோவியம் இணைந்து நடத்தும் அக்டோபர் மாத போட்டிக்கான சிறுகதை.
Monday, October 09, 2006
மழைச்சாரலில் நனைந்த கவிதைகள்
1
மழை பொழியும் பின்னிரவுகளில்
சுடச்சுட தேநீருடன்
வராந்தாவில் நின்றபடியே
மழையை ரசிக்கும்போதும்
ஞாபகத்திற்கு வருவதில்லை,
வீடில்லாமல் மழையில் நனைந்தபடியே
தெருவில் உறங்கும் மக்களின் வாழ்க்கை !!
***
2
நேரம் போவதே தெரியாமல்
எத்தனையோ நாட்கள்
தொலைபேசியில் கதைத்திருக்கிறோம்,
உன் தங்கையை நீ அறிமுகப் படுத்தும் வரை...
இப்போதெல்லாம்
உன்னை நினைத்துப் பார்க்கக் கூட
நேரமில்லை !!
***
3
மழையில் நனையும் கார்
நடுவீதியில் நின்றவுடன்
கூப்பிடாமலேயே ஓடிவந்து
தள்ளிவிடும் தெருவில் வசிக்கும் சிறுவர்கள்...
பிச்சைக்காரருக்கு
சூடான சாதம் போடும்
பக்கத்து வீட்டு பாட்டி...
வழி தெரியாமல் தவிக்கும்
வெளியூர் காரருக்கு
கூடவே வந்து பஸ் ஏற்றி
விடும் கடலை விற்பவர்...
கீழே தவற விட்ட பணத்தை
கூப்பிட்டு எடுத்துக் கொடுக்கும்
வழிப்போக்கர்...
இவர்களுக்காக
இன்னும் இருக்கிறது ஆகாயம் !!!!
***
கடைசிக் கவிதை தமிழ்ச் சங்க போட்டிக்காக எழுதப் பட்டது. உங்களுக்கு எந்த கவிதை ரொம்ப பிடித்திருக்கிறது என்பதை பின்னூட்டத்தில் (எண்ணை மட்டும்) மறக்காமல் சொல்லுங்கள் !! எதுவுமே பிடிக்கவில்லையென்றால் சிரிப்பான் ஒன்றை போட்டு விடுங்களேன் :-))
Friday, October 06, 2006
மினி உலகக் கோப்பை கிரிக்கெட் - முன்னோட்டம்
இலங்கை, மேற்கிந்திய தீவுகள், கென்யா & வங்காளதேச அணிகள் தகுதிச் சுற்றில் மோதுகின்றன. இதில் இலங்கை & மேற்கிந்திய தீவுகள் அணிகள் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து பாகிஸ்தான், தென்னாப்ரிக்க அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது. இந்தியாவிற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. 2005ல் இந்தியா பிரகாசிக்க காரணமான பதான், தோனி போன்றோரின் ஃபார்ம் கவலை தரும் அம்சம். பந்துவீச்சில் அணி மிகப் பலவீனமாக உள்ளது.
இங்கிலாந்து அணி ப்ளிண்டாப், வான், ஜோன்ஸ் போன்றோர் இல்லாமல் தடுமாறி வருகிறது. நியுசிலாந்து அச்சுறுத்தும் அளவுக்கு இல்லை. இலங்கை முரளி, வாஸ், ஜெயசூர்யா போன்றோரின் ஆட்டத்தைப் பொறுத்து போட்டி தரும்.
போட்டிகள் அனைத்தும் சோனி-மேக்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகின்றன. திருவிழாவுக்கு தயாராகுங்கள்.
கோப்பையை வெல்ல என்னோட சாய்ஸ் ஆஸ்திரேலியாதான், உங்களோட சாய்ஸ் என்னன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க !!!
***
இந்த இடுகை சோம்பேறி பையனின் வலைத்தளத்திலும், கிரிக்கெட் கூட்டுப் பதிவிலும் பதிவிடப்படுகிறது.