தனது நிறைய கதைகளில் மெக்சிகோ சலவைக்காரி ஜோக்கை பற்றி கோடு காட்டியவர், அதை வெளிப்படையாய் எழுதவே இல்லை. எப்போதோ ஒரு வலைப்பதிவில் அந்த ஜோக்கை படித்தேன். அந்த ஏழாவதா செஞ்சவங்க மறுபடி வாங்க - அதுதானா உண்மையான மெக்சிகோ சலவைக்காரி ஜோக் என்று தெரிந்தவர்கள்/அறிந்தவர்கள் சொல்லலாம்!!
கற்றதும் பெற்றதும் பகுதியில், நிறைய விஷயங்களை பற்றி கலந்து கட்டி எழுதியிருப்பது சுவாரசியமாய் இருக்கும். அப்போதெல்லாம் விகடனில் நான் முதலில் படிக்கும் பகுதி கற்றதும், பெற்றதும்தான்!! பிறகு மதனின் கேள்வி பதில் படிப்பேன். இப்போது விகடன் அவ்வுளவு சுவாரசியமாய் இருப்பதில்லை!!
அப்படி ஒரு க.பெ பகுதியில்தான், கீழ்கண்ட ஒரு 18+ ஜோக்கை பரிந்துரைத்துள்ளார். படித்து ரசியுங்கள்.
....
அடுத்து இந்த ஜோக்... நியூ அமெரிக்கன் புக் ஆஃப் ஹியூமரிலிருந்து தட்டியது.
புயல் வந்து கப்பல் மூழ்கி, ஒரே ஒருவன் மட்டும் உயிர் தப்பி, தன் நாய் ஃபெர்டினாண்டுடன் ஒரு தனித் தீவில் தள்ளப்பட்டான். சுற்றும்முற்றும் பார்த்தான். தனித் தீவு. மனித நடமாட்டமே இல்லை. நிறைய காய், கனிகள் தின்னக் கிடைத்தன. உயிர் வாழப் பிரச்னை இல்லை. நாய்க்கும், பொந்துகளில் எலி, அணில் போன்ற பிராணிகள் அகப்பட்டன.
நாளடைவில் அவனுக்கு ரொம்பப் போர் அடித்தது. தேடிப் பார்த்தான். தீவு முழுக்க ஆடுகள்தான் இருந்தன. அவற்றில் எதை அணுகினாலும், நாய் உடனே கோபம் கொண்டு, குரைத்து உறுமி, அவனைக் கடிக்க வந்தது. தினம் இதே கதிதான். அதனால், முயற்சியைக் கைவிட்டான்.
ஒரு நாள், கடற்கரையில் திரியும்போது திடுக்கிட்டான். ஓர் அழகான பெண், நனைந்த உடை களில் மயக்கமாகக் கிடந்தாள். உடனே அவளுக்கு முதலுதவி செய்து, தண்ணீரை எல்லாம் உறிஞ்சி, செயற்கை சுவாசம் தந்து, தட்டிக்கொட்டி எப்படியோ பிழைக்க வைத்து விட்டான்.
விழித்தெழுந்த அந்த அழகான பெண் நிலைமையை அறிந்ததும், அவனைக் காதலுடன் பார்த்து, ‘‘என் உயிரைக் காப்பாற்றியதற்குக் கைம்மாறாக உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டாள்.
‘‘ஒரே ஒரு காரியம் செய்தால் போதும்’’ என்றான்.
‘‘என்ன?’’
‘‘ஃபெர்டினாண்டை அரை மணி நேரம் பார்த்துக்கொள்வீர்களா?"
***
நன்றி:
நியூ அமெரிக்கன் புக் ஆஃப் ஹியூமர், ஆனந்த விகடன் மற்றும்
http://sujatha-kape.blogspot.in/