Showing posts with label ஆட்டோ அராஜகம். Show all posts
Showing posts with label ஆட்டோ அராஜகம். Show all posts

Saturday, April 25, 2009

சென்னை ஆட்டோகாரர்களை என்ன செய்யலாம்?

எங்கள் வீட்டிலிருந்து (ராமாபுரம், சென்னை) கோயம்பேடு செல்ல நேரடி பஸ் வசதி கிடையாது. கிண்டி சென்று அங்கே வேறு பஸ் பிடித்து கோயம்பேடு செல்லலாம், ஒரு மணி நேரம் ஆகும். ஆனால் வளசரவாக்கம், சாலிகிராமம், சின்மயா நகர் வழியே குறுக்கே சென்றால் 7 கிமீ தூரம்தான், 15 நிமிடத்தில் சென்று விடலாம், டிராபிக் இருக்காது. எனவே ஆட்டோவில் செல்வதைத்தான் விரும்புவோம்.

ஒவ்வொரு முறை நாங்கள் ஊருக்கு செல்ல கோயம்பேடு செல்ல எத்தணிக்கும் போதெல்லாம் ஆட்டோ ஓட்டுனருடன் பெரும் பேசமே நடக்கும். வாய் கூசாமல் பெரும்பாலானோர் 150 ரூபாய் கேட்கிறார்கள், எந்த ஊர் நியாயம் என்றே தெரியவில்லை. 7 கிமீ தூரத்திற்கு 150 ரூபாயா? நான் மும்பையில் இருந்த போது ஒரு கி.மீ தூரத்திற்கு 9 ரூபாய் கொடுத்ததாய் ஞாபகம். அந்த கணக்கில் பார்த்தால் 63 ரூபாய்தான் வருகிறது. இப்போது டீசல் விலை வேறு 4 ரூபாய் (இரு தடவையாய்) குறைந்து இருக்கிறது. கேட்டால் டிராபிக் இருக்கும், திரும்பி வர ஆள் இருக்காது என்று ஆயிரம் காரணங்கள் கூறுகிறார்கள். பேரம் பேசி 100 ரூபாய்க்கோ, 120 ரூபாய்க்கோ ஒவ்வொரு முறையும் செல்கிறோம்.

சென்னையில் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்? மும்பையில், புனேயில் இப்படி இல்லையே, நியாயமாய் மீட்டர் போடுகிறார்களே. இவர்களை என்ன செய்தால் திருத்தலாம், யோசனை சொல்லுங்களேன்?