Tuesday, August 26, 2008

இரு மனங்கள் இணையும் திருமணம்

வாரத்தில் ஏதாவது ஒரு நாளில்
எப்போதாவது ஓரிரு மணித்துளிகள்
சந்தித்து, அவசர அவசரமாய்
நிறைய பேசி, சிரித்து, விளையாடி
சண்டை போட்டு, சமாதானமாகி
சாப்பிட்டு விட்டு பிரியும்
நிலை மாறி
இன்று சற்றேற்குறைய
ஒரு நாளின் இருபத்து நான்கு
மணி நேரமும்
இருவரும் இணைந்தே இருக்கிறோம்!
கணவன் மனைவியாய் இணைந்து
ஆரம்பித்துள்ள இல்வாழ்க்கை
இனிமையாய் தொடர
குறைகளை தவிர்த்து, திருத்தி
நிறைகளை நிரப்பி
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து
மகிழ்ச்சியாய் வாழ
இறைவனை பிரார்திப்போம்!!

2 comments:

இப்னு அப்துல் ரஜாக் said...

pls visit and give your feedback
http://www.peacetrain1.blogspot.com/

பழூர் கார்த்தி said...

நண்பர்களே, உங்கள் கருத்திற்கு நன்றி!